செப்டம்பர் 2014 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil செப்டம்பர் 2014 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்...

Photo: ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்...

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
 

1. பாதுகாப்பினை உருவாக்குக: 
 
 
ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.
 

2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: 
 
பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும். 

3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? 
 
 
சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம். 
 
 

4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்: 
 
 
ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.
 
 

5. அனுமதிகளை அளந்து தரவும்: 
 
 
அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும். 
 
 

6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?
 
 
 நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும். 
 

7. அப்ளிகேஷன் தணிக்கை: 
 
உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.
 
 
8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,
 
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.
 
 

9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்: 
 
 
பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.
 
சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும் 
அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட 
கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம். 
 
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/ComputerThagavelgal

Join our Group: 
https://www.facebook.com/groups/ComputerThagavelgal

பிடிச்சா லைக் பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

1. பாதுகாப்பினை உருவாக்குக: 

ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.

2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்:

பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும்.

3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா?

சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம்.

4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்:

ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.

5. அனுமதிகளை அளந்து தரவும்:

அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும். 
 
6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?


நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும்.


7. அப்ளிகேஷன் தணிக்கை:

உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.


8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.

9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்:

பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.

சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும்
அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட
கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

Photo: ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம் அடுத்த மாதம் இந்தியாவில்

பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
 
 
 
இந்த ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் இருக்கலாம். (பட்ஜெட் விலை என்பதால் இவை ரூ.6,000க்கும் கீழாக இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது) இங்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பிற்கு ஏற்றபடி, மற்ற நாடுகளிலும் இந்த திட்டத்தினை கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வரவேற்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கூகுள் எதிர்பார்க்கிறது. 
 
 
இந்த திட்டத்தின்படி, கூகுள் தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்க, மிகக் குறைவான அளவிலும், திறனுடனும் ஹார்ட்வேர் இருந்தால் போதும். இதனால், போன்களின் விலை நிர்ணயத்தை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமே கூகுள் தந்துவிட்டது. எந்த நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் இவற்றை விரும்புவார்கள் என்பதனை அறிந்து, விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிறுவனங்கள் இதற்கெனத் தயாரிக்கும் மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம், 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம், 4.3 அல்லது 4.5 அங்குல திரை ஆகியன குறைந்த பட்சம் இருக்கும். இவற்றில் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. சிஸ்டம் இயங்கும்.

இது அக்டோபர் மாதத்தில், ஆண்ட்ராய்ட் எல் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்யப்படும். அப்டேட் மூலம் கூகுள் தரும் புதிய வசதிகள், அகலத்திரை, பேட்டரி திறன் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சீரான அனுபவத்தினையும் வசதிகளையும் தரும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குறைந்த விலை ஸ்மார்ட் போன்களில், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. இந்த போன்களைத் தயாரிப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஸ்மார்ட் போன் பிரிவில், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் விஷயங்களைத் தன் கட்டுப்பாட்டில் கூகுள் கொண்டு வர முடியும். இந்த வகையில், மூன்று பிரிவினரும் திருப்தி அடைவதால், ஆண்ட்ராய்ட் ஒன் திட்டம் வெற்றி பெறும் என கூகுள் திட்டமிடுகிறது. 

இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/ComputerThagavelgal

Join our Group: 
https://www.facebook.com/groups/ComputerThagavelgal

பிடிச்சா லைக் பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

பட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை செப்டம்பரில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

இந்த ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் இருக்கலாம். (பட்ஜெட் விலை என்பதால் இவை ரூ.6,000க்கும் கீழாக இருக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது) இங்கு வாடிக்கையாளர்கள் கொடுக்க இருக்கும் வரவேற்பிற்கு ஏற்றபடி, மற்ற நாடுகளிலும் இந்த திட்டத்தினை கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வரவேற்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கூகுள் எதிர்பார்க்கிறது.

இந்த திட்டத்தின்படி, கூகுள் தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் இயங்க, மிகக் குறைவான அளவிலும், திறனுடனும் ஹார்ட்வேர் இருந்தால் போதும். இதனால், போன்களின் விலை நிர்ணயத்தை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திடமே கூகுள் தந்துவிட்டது. எந்த நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் இவற்றை விரும்புவார்கள் என்பதனை அறிந்து, விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த நிறுவனங்கள் இதற்கெனத் தயாரிக்கும் மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம், 5 மெகா பிக்ஸெல் கேமரா, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், குவாட் கோர் ப்ராசசர், 1 ஜி.பி. ராம், 4.3 அல்லது 4.5 அங்குல திரை ஆகியன குறைந்த பட்சம் இருக்கும். இவற்றில் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. சிஸ்டம் இயங்கும்.

இது அக்டோபர் மாதத்தில், ஆண்ட்ராய்ட் எல் சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்யப்படும். அப்டேட் மூலம் கூகுள் தரும் புதிய வசதிகள், அகலத்திரை, பேட்டரி திறன் ஆகியவை, இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சீரான அனுபவத்தினையும் வசதிகளையும் தரும் என கூகுள் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குறைந்த விலை ஸ்மார்ட் போன்களில், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன. இந்த போன்களைத் தயாரிப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஸ்மார்ட் போன் பிரிவில், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் விஷயங்களைத் தன் கட்டுப்பாட்டில் கூகுள் கொண்டு வர முடியும். இந்த வகையில், மூன்று பிரிவினரும் திருப்தி அடைவதால், ஆண்ட்ராய்ட் ஒன் திட்டம் வெற்றி பெறும் என கூகுள் திட்டமிடுகிறது.

இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

பயனுள்ள பேஸ் புக் ட்ரிக் ....(RESTRICTED )..(FACEBOOK TRICK)

Photo: பயனுள்ள பேஸ் புக் ட்ரிக் ....(RESTRICTED )..(FACEBOOK TRICK)

நாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை  உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும்.  இதனால் நமக்கு எந்த சேதமும் வராது  :))

இதனை செயல்படுத்த

நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று

Facebook profile  >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/ComputerThagavelgal

Join our Group: 
https://www.facebook.com/groups/ComputerThagavelgal

பிடிச்சா லைக் பண்ணுங்கள்... 
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.
 
நாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும். இதனால் நமக்கு எந்த சேதமும் வராது :))

இதனை செயல்படுத்த

நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று

Facebook profile >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"

இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.

இணையம் மூலம் போட்டோ டிசைன்

புகைப்படங்களை டிசைன் செய்ய பல்வேறு மென்பொருள்கள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளன. அவைகளைப் பயன்படுத்த அந்த மென்பொருள்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். அந்த மென்பொருள்களில் உள்ள டூல்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.  ஆனால் இப்பொழுது அப்படியில்லை… போட்டோஷாப் பற்றிய அறிவு தேவையேயில்லை.

Photoshop தேவையில்லை

தற்காலத்தில் மென்பொருள்களின் துணை இல்லாமலேயே மிக எளிமையான போட்டோவை டிசைன் செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது ஆன்லைன் போட்டோஷாப் டிசைன் தளங்கள். 
உங்களிடம் போட்டோஷாப் தொடர்பான மென்பொருள்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.. 
இணைய இணைப்பும், கணனியும் இருந்தால் உங்களுக்கு விருப்பமான முறையில் உங்களுடைய போட்டோக்களை நீங்களே டிசைன் செய்யலாம்
 போட்டோஷாப் டிசைன் செய்ய செல்ல வேண்டிய தளம் போட்டோ புனியா

Photo Design செய்யும் வழிமுறை:  

  • முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்… 
  • பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்… பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 
  • பிராசசிங் நடக்கும். 
  • இறுதியாக டிசைன் செய்யப்பட்ட போட்டோ உங்களுக்கு Save என்ற ஆப்சனுடன் போட்டோவை சேமிக்கும் வசதி கிடைக்கும். 
  • அவ்வாறு டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு. 

போட்டோசாப் கற்றுக்கொள்ள

 போட்டோஷாப் குறித்த அடிப்படைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள PHOTOSHOP IN TAMIL என்ற தளத்தை அணுகவும். 
 நன்றி.

இலவசமாக திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட புதிய சமூக இணையதளம்..!

பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றதொரு சமூக இணையதளம் வேர்ல்டுப்ளோட். 
இத்தளம் தனது பயனர்களுக்காக இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்ப்பதற்கான வசதியை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதுபற்றி இந்நிறுவனத்தின் தலைவர் புஸ்கர் மகட்டா கூறியதாவது; 
ஆன்லைனில் நாங்கள் இலவச திரைப்பட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் தளத்தின்  மூலம் காணக்கிடைக்கும் திரைப்படங்கள் தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அமைந்திருக்கும். விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படங்களை காண்பதற்கான வழிவகைகள் செய்ய உள்ளோம்” 
social-network-for-watching-all-world-movies
18000 க்கும் மேற்பட்ட ஆங்கிலப்படங்கள், 7000த்திற்கும் மேற்பட்ட இந்தியப்படங்கள் என வேர்ல்டுப்ளோட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
உலகளவில் மற்ற தேசிய மொழிகளிலும், குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பிரஞ்சு, இத்தாலி போன்ற வெளிநாட்டு  மொழிகளில் அமைந்த படங்களையும், இந்தியர்களுக்கான மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இலவசமாக காண முடியும் என்றும் அந்நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். 
அக்காலப் படங்கள் முதல், இக்காலத்தில் சமீபத்தில் வெளியிட்ட திரைப்படங்கள் வரை இந்த தளத்தில் காண முடியும் என்பது சிறப்பு. 
அதைப்பற்றி அந்நிறுவனத்தலைவர் கூறும்பொழுது, 1890 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் முதல், 2013 தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணத் திரைப்படங்கள் வரை அனைத்து திரைப்படங்களையும் வேர்ல்ட் ப்ளோட் தளத்தின் மூலம் இலவசமாக அனைவருமே பார்க்க முடியும் என்றார். 
இந்த இலவசமாக சேவையை லேப்டாப், ஐபேட், ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்ளட் போன்றவைகளிலும் கண்டுகளிக்கும் வகையில் தளத்தின் இன்டர்பேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாமர மக்களும் பார்க்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இத்தளத்தின் படங்களை பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
இத்தளத்தில் இணைந்து, இதில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தலாம். 
தளத்திற்கான முகவரி:http://worldfloat.com/
நன்றி.

சனி, 27 செப்டம்பர், 2014

ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு

technobuffalo--623--rettingers-riffs-android-vs-apple
இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.
வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது.
எனவே, புதிய வசதிகள் என ஐபோனில் அறிவிக்கப்பட்டவை, ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதியவையாக இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கி வருபவையாகவே உள்ளன. இரண்டிலும், எந்த வகை கூடுதல் சிறப்புடன் இயங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கூகுள் வாலட் என்ற பெயரில், மொபைல் போன் மூலம் பொருள் விற்பனை மையங்களில் பணம் செலுத்தும் முறை மூன்று ஆண்டுகளுக்கு முன், கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆப்பிள் பே (Apple Pay) என்ற பெயரில் ஆப்பிள்
நிறுவனமும் இதே முறையினைக் கொண்டு வந்துள்ளது.
என்.எப்.சி. தொழில் நுட்பத்தினை இயக்கும் சிப் மூலம் இது மேற்கொள்ளப்படும். கூகுள் இந்த தொழில் நுட்பத்தில் தொடக்கத்தில் செம்மையாகச் செயல்பட முடியவில்லை. ஆப்பிள் இதனைத் திறமையாக இயக்கி பெயர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆப்பிள் சிஸ்டத்தின் இயக்கத்தினை அதன் நிறுவனம் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில், கட்டுக் கோப்பாக வைத்துள்ளது. இதற்கான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அனுமதிக்க முடியும். ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களை, தர்ட் பார்ட்டி எனப்படும் நிறுவனங்களால், தொழில் நுட்ப வல்லுநர்களால், வாடிக்கையாளர்களுக்கேற்ப மாற்றி அமைத்துத் தர முடியும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல்வேறு இயக்க வகைகள் ஒரே நேரத்தில் இயங்கி வருகின்றன. 2013ல் வெளியான ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்க முறைமையை 21% போன்களும், ஜெல்லி பீன் வகையினை 54.2% போன்களும், 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் வகையினை 14% போன்களும் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு மாறாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 7 இயக்க முறைமையில், 92% ஆப்பிள் போன்கள் பயன்படுத்துகின்றன.
ஆனால், கூகுள் நிறுவனத்தின் திறந்த வெளி தொழில் நுட்பப் போக்கு தான், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பெரிய அளவில் பயன்படுத்த வைத்துள்ளது என்பதனையும், மக்கள் அதில் தான் தங்கள் பெரும்பாலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில், டிஜிட்டல் உலகில் வலம் வரும் மால்வேர் புரோகிராம்கள், ஆண்ட்ராய்ட் வழியாகத்தான் அதிகம் வருகின்றன. இந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கூடுதல் பாதுகாப்பினைத் தருகிறது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வெளியாகும் மற்றவர்களின் புரோகிராம்களே இந்த மால்வேர் பரவலுக்குக் காரணம் என்றாலும், கூகுள் அவற்றை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பலனைத் தரவில்லை. அதற்கென கூகுள் மேற்கொண்டு வரும் சில தொழில் நுட்ப கூறுகளும் மக்களைச் சென்றடையவில்லை.
இருப்பினும் சில தொழில் நுட்பங்கள் மற்றும் தரப்படும் வசதிகளில் ஐபோன் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. கீழே அவை சுட்டிக் காட்டப்படுகின்றன
.
1. தோற்றப் பொலிவு: ஐபோனின் வடிவமைப்பு எப்போதும் தனித் தன்மையுடன், மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் சிறப்பு கொண்டதாகவே உள்ளது. ஐபோன் 6ல் தரப்படும் ரெடினா டிஸ்பிளே, சூரிய வெளிச்சத்தில் டெக்ஸ்ட் உட்பட திரைக் காட்சியைத் தெளிவாகக் காட்டும். இது சாம்சங் போன்களில் இல்லை. காலக்ஸி எஸ் 3 போனை, நிழலில் வைத்துத்தான், திரையில் உள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.
2. நெட்வொர்க் இணைப்பு: முந்தைய மாடல்களைக் காட்டிலும், ஐபோன் 6 மாடல்களில், நெட்வொர்க் இணைப்பு வேகமாகவும், பல்வேறு வகை நெட்வொர்க் நிலைகளைத் தொடர்பு கொள்ள இயன்றதாகவும் உள்ளது.
இதற்கு இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பம் (LTE (long-term evolution, a wireless networking standard)) உதவுகிறது. இதன் மூலம் 150 Mpbs என்ற வேகத்தை எட்ட முடியும்.
3. என்.எப்.சி. வாலட்: ஆண்ட்ராய்ட் இயக்கும் கூகுள் வாலட் சிஸ்டத்தில் உள்ள குறைகள் எதுவுமின்றி, ஆப்பிள் வாலட் அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆப்பிள் தர இருக்கும் வாட்ச் செயல்பாட்டினையும் சேர்த்துக் கொள்ளலாம்.
4. பேட்டரியின் பலமுனை திறன்: ஐபோன் 6ல் தரப்படும் பேட்டரியில் தொடர்ந்து 50 மணி நேரம் ஆடியோ இசைக்கலாம்; 11 மணி நேரம் விடியோ பார்க்கலாம்; 11 மணி நேரம் வை பி அல்லது எல்.டி.இ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தலாம். 10 மணி நேரம் 3ஜி பிரவுசிங், 14 மணி நேரம் குரல் வழி தொடர்பு மேற்கொள்ளலாம். 16 நாட்கள் இதன் மின் சக்தி தங்கும் சக்தி கொண்டதாக உள்ளது. இதுவே ஐபோன் 6 ப்ளஸ் மாடலில், மேலே தரப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் கூடுதலான காலத்திற்கு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சாம்சங் புதிய பேட்டரிகளைத் தர வேண்டியதிருக்கும்.
5. ஒருங்கிணைப்பு: Integration என்று சொல்லப்படும் ஒருங்கிணைப்பு, ஆப்பிள் நிறுவன சாதனங்களில் கிடைக்கும் ஒரு நல்ல வசதியாகும். மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை தெளிவாக இணைத்துச் செயல்படுத்தலாம். ஆப்பிள் தரும் Handoff போன்ற வசதிகள், இதனை இன்னும் சிறப்பானதாக மாற்றி உள்ளன.
மூன்று வகை சாதனங்களிடையே இவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தலாம், செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம். கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் செயல்படுத்துகிறது.
Gmail, Chrome, Google Calendar, and Google+ ஆகிய அனைத்தும் இணைவாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்த வசதியைத் தருவதை ஆப்பிள் நிறுவனம் மக்களுக்கு நன்றாக எடுத்துச் சொல்லி வருகிறது. கூகுள் இவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பின் தங்கியே உள்ளது.
6. தன் ஆளுமை: ஆப்பிள் தான் தரும் வசதிகள் அனைத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இணைவான ஒரு நண்பனாகச் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்கள், வாடிக்கையாளர்களின் இசைவான வசதியைத் தர தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையே நம்பி உள்ளது.
இந்த வகையில், user-friendly மூல நிறுவனமாக ஆப்பிள் பெயர் எடுத்துள்ளது. வரும் நாட்களில், நிச்சயம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கு முறையில் பல மேம்படுத்தல்களை எதிர்பார்க்கலாம். ஆப்பிள் தந்துள்ள புதிய சவால்களை கூகுள் நிச்சயம் எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி- தினமலர்

ஆண்ட்ராய்டு ரூட் என்றால் என்ன? அதை செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன?

android-rooting


நாம் உபயோகிக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனத்தால் பூட்லோடர் செய்யப்பட்டிருக்கும். நமக்கு பயன்படாத சில application inbuilt ஆக இருக்கும். அதை முழுவதும் நம்ம control க்கு கொண்டுவர அன்லாக் செய்வதையே ரூட் என்கிறோம்.
இதன் பயன்கள்:
* மொபைலில் இன்பில்ட் ஆக இருக்கும் apk வை அன்இன்ஸ்டால் செய்யலாம்.
* ram மெமரியை sd card க்கு மாற்றலாம்.
* வேர்சன் மாற்றலாம்
*சில தனிப்பட்ட அப்ளிகேசன் ரூட் செய்த மொபைலில் மட்டும் இயங்கும். ex: root browser,wi-fi hacks.
* இலவசமாக இணையம் உபயோகிக்க droid apn அப்ளிகேசன் ரூட் செய்த மொபைலில் மட்டுமே இயங்கும்.
More Info===>>>Click This

HOW TO ROOT YOUR ANDROID MOBILE WITH COMPUTER..(கணினி இருப்பது அவசியம்)


HOW TO ROOT YOUR ANDROID MOBILE WITHOUT COMPUTER..(கணினி இல்லாமல்) II


ROOT செய்த மொபைல்களில் இருக்க வேண்டிய அதிமுக்கியமான ஐந்து அப்ளிகேஷன்ஸ் ..

பெண்களுக்கான சிறப்பு பதிவு facebook -தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பது எப்படி ...?-...!

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.
நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.
1. பேஸ்புக் பிளேசஸ் ( Facebook Places ): இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த: உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் ( Profile ) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர்.
முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize )இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா? : பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and applicationactivity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.
Error: 103
4. அப்ளிகேஷன்களுக்குத் தடா: பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.
5. அணுகுவதற்குத் தடை: உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites சென்று Edit your settings- ய் கிளிக் செய்யவும். இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.
6.இறுதி நடவடிக்கை: பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது.https://ssl.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே.

பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

New Moto G Smartphone with 5-inch HD Display, Dual SIM Launched for Rs.12999

Motorola has launched its new second generation Moto G Dual Sim in India, the successor to the Moto G smartphone. It’s also called as Moto G but some are called as Moto G2. The phone comes with an affordable price of Rs.12999 for the 16 GB model. Moto G comes with 5-inch HD display with 1280x720p resolution and Corning Glass protection. It runs on Android 4.4 KitKat operating system and powered by 1.2 GHz Snapdragon 400 quad-core processor with 1 GB of RAM.

New Moto G Smartphone with 5-inch HD Display, Dual SIM Launched for Rs.12999

Moto G features 8 MP rear camra with 720p video recording and 2 MP front facing camera for video call support. It has 16 GB of internal storage and external storage can be extended with microSD cards. For the connectivity, It has 3G, Wi-Fi, Bluetooth 4.0 and GPS options. The phone has Dual SIM card support and packed with 2070 mAh battery.

New Moto G / Moto G2 Specifications: 

SIMDual SIM (GSM+GSM)
Operating SystemAndroid 4.4 KitKat
Display5-inch HD display with 1280px720p resolution
Corning Glass protection
Processor1.2 GHz Quad-core Snapdragon 400 processor
RAM1 GB RAM
Memory16 GB internal memory, External with microSD
Camera8 MP rear camera with LED Flash, 720p recording, 2 MP front facing camera
Connectivity3G, Wi-Fi,Bluetooth 4.0, GPS
Battery2070 mAh battery
Dimensions10.9 mm thick, Weight: 149 grams

New Moto G / Moto G2 Price & Availability:

Moto G2 is an upgraded version of Moto G with improved specifications. Moto G comes in Black and white colors and it has the removable back covers so you can change it anytime. The phone is exclusively available in Flipkart for the price of Rs. 12999.

Check & Buy Moto G Black 

Turbo C++ நிறுவும் வழிமுறைகள்

டர்போ சி ப்ளஸ் பிளஸ் நிறுவும் முறை:

சி பிளஸ் பிளஸ் கற்றுக்கொள்ள உதவும் ஒருமென்பொருள் turbo C++. இம்மென்பொருள் உங்களுடைய கணினியில் எவ்வாறு நிறுவுது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Turbo C++

install method of turbo c++

install method of turbo c++

Zip பார்மட்டில் இருக்கும் கோப்பை விரித்து கொள்ளவும். அதில் உள்ள install.exe கோப்பினை இயக்கவும்.     சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும்.
அடுத்து திரையில், Install.exe இருக்கும்போல்டர் காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும்.
அடுத்து தோன்றும் திரையில் சில ஆப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாம் F9 பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான் இப்பொழுது டர்போ சி பிளஸ் பிளஸ் நிறுவப்பட்டுவிடும்.
முக்கியமாக செய்ய வேண்டிய மாற்றம் ஒன்று உள்ளது. அது கமாண்ட் பிராம்பட்டில் எந்த போல்டரில் இருந்தும் TC என தட்டசிட்டு enter கொடுத்தால் turbo c++ இயங்க வேண்டும். அதற்கு Path variable – இல் C:/TC/BIN என்று சேர்க்க வேண்டும்.
ஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளின் முடிவில் ஒரு செமகோலன் உள்ளீடு செய்து அதற்கு பிறகு C:\TC\BIN என உள்ளீடு செய்ய வேண்டும்.
இறுதியில் பாத்வேரியபிள் அப்டேட் செய்வதற்கு உங்கள் கம்ப்யூட்டரை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.

ரீஸ்டார்ட் ஆகி முடிந்தவுடன் டர்போ சி ++ பயன்படுத்தத்தொடங்கலாம்.

நன்றி.

கம்ப்யூட்டரில் உங்களுடைய ஆவணங்களை பாதுகாக்க அருமையான வழி

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் வைரஸ் பிரச்னை வந்துவிடும்.
முக்கியமாக கம்ப்யூட்டரில் வைத்திருக்கும் ஆவணங்களை கோப்புகளை பதம் பார்த்துவிடும்.
ஒரு சிலர் எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரு ஆபிஸ் டாக்குமெண்ட்டோ அல்லது ஏதேனும் ஒரு படமோ இப்படி உருவாக்கிய ஆவணத்தை சேமிக்கும்பொழுது தானாகவே டீபால்டாக மை பிச்சர் போல்டர், மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேமிக்கப்படும்.ways-to-protect-your-documents-in-computer
பிரச்னை என்னவென்றால் இவ்வாறுக C டிரைவில் சேமிக்கப்படும் கோப்புகள் பாதுகாப்புக்கு உகந்ததல்ல..என்பதுதான். எப்படியென்றால் ஏதாவது ஒரு சமயத்தில் உங்களுடைய கம்ப்யூட்டரை பார்மட் செய்திடும்பொழுது, C டிரைவிலுள்ள கோப்புகள் அனைத்துமே அழிந்துபோய்விடும்.
பார்மட் செய்திட்ட பிறகு அந்த கோப்புகளை மீண்டும் எடுக்கவே முடியாது.
அதுசரி.. மைடாக்குமெண்ட், மைபிக்சர், மை ஸ்கேன், மை மியூசிக், மை வீடியோஸ் (My Document, My Picture, My Scan, My Music, My Videos) போன்ற போல்டர்களெல்லாம் சி டிரைவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
அதை உங்களுடைய விருப்பத்திற்கு தகுந்தவாறு மற்ற டிரைவ்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணமாக My documents போல்டரை நீங்கள் சி டிரைவிலிருந்து D டிரைவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

வழிமுறை:
முதலில் My Documents போல்டரின் மீது ரைட் கிளிக் செய்யுங்கள்.
இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில்
டார்கெட் என்ற இடத்தில் உங்களுக்கு எந்த டிரைவில் போல்டர் இடம்பெற வேண்டுமோ அதை உள்ளீடு செய்யவும்.
பிறகு Move என்பதைக் கொடுத்தால், அந்த போல்டரானது D டிரைவிற்கு மூவ் ஆகிவிடும்.
இனி நீங்கள் சேமிக்கும் எந்த ஒரு டாக்குமெண்டும் தானாகவே டி டிரைவில் உள்ள போல்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.
நன்றி.

சனி, 6 செப்டம்பர், 2014

Windows 9 Desktop Evolution Concept

Microsoft is apparently finally going to reveal Windows 9 on the 30th of September.
The #technology -giant has long been said to focus more on the desktop again with this next big iteration of #Windows .

I guess it’s rather hard to come up with great changes to an interface that hasn’t changed much since decades and that you might even think of as perfect, but #Microsoft did an overwhelming job with Windows 7. A lot of small enhancements to old elements made it a great evolution of the desktop and a big step forward for Windows.

The feature I want to present you within this article - the so-called Pin-functionality - is also just one small update. This concept is not about guessing what #Windows9 will actually be like - Start Menu, Windows Store apps on the desktop, etc - but only about explaining this one idea and discussing its impact and advantages.


What’s your opinion? Do you also think the possibility to pin windows would add much value to the desktop? Have you ever taken serious advantage of Vista’s Desktop Gadgets?




Download A.R.Rahman Official App Available for Android and iOS

Are you Diehard fan of A.R Rahman’s music, then here is good news to you. A.R.Rahman is one of the best music directors in the world and he released his official mobile app recently. This is surely for his fans and followers can connect with him and his music easily through the app. The app is named as “AR Rahman app” and it is available for Android and iOS users.


There are over 24 million fans for his on Facebook and Twitter now and they will able to follow him through this AR Rahman app. The app is developed in partnership with an online multi-channel network Qyuki which is founded by A.R.Rahman and his friends. The Music King Rahman also gets in touch directly with his fans and followers with this app by providing exclusive content and merchandise.

Download A.R.Rahman Official App Available for Android and iOS
Key Features of AR Rahman Official app: 

  • Social feed including Twitter, Instagram and Facebook Posts made directly by A R Rahman
  • Photo and Video galleries
  • Latest news and press releases
  • Exclusive content only available on the app

A.R.Rahman told in a statement to the news, “I wanted to thank my fans for their support by offering them a new and convenient way to stay in touch with me and my music. I am looking forward to a more engaging experience with my friends and well-wishers.” If you are always like his songs and music you can surely download this app and enjoy  
Download AR.Rahman app for Android | iOS

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க..



எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க
இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு APPS இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும் இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால் 1 மணி நேரம் எந்த ஒரு வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்..

Anroid


iphone

இலவச E-Set Anti virus (NOD32) (2050 வரை)

Download Here - Eset 2050

Link 2 Download Here - Eset 2050

காலாவதியாகும் திகதி 2050

35 வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்


எவ்வாறு Downlod செய்வது ?

முதலில் Click TO SKIP AD

 


  Regular Download என்பதை Click செய்யவும்


undefined


59 வினாடி காத்திருக்கவும்


undefined


பெட்டியில் இருப்பதை பார்த்து கீழே Type செய்யவும்



undefined


Continue என்பதை Click செய்யவும்

இப்போது Download File  என்பதை Click  செய்தால் உங்கள் File Download ஆகும்


undefined
 LIKE & SHARE

மொபைலில் உங்கள் படத்தை நீங்களே வரைந்து கொள்ளலாம் – புதிய மென்பொருள்

undefined


நீங்கள் விரும்பியவாறு உங்கள் படங்களை நீங்களே வரைந்து கொள்ளாலாம். அதும் உங்கள் Phone மூலமாக வரைந்து கொள்ளாலாம்.
உங்கள் நண்பர்களின் புகைப்படத்தின் தலை மட்டும் இருந்தால் போதும், அவர்களை காமெடியா வரைந்து அவர்களுக்கே அனுப்பி மகிழலாம்.

MomentCam எனும் மென்பொருள் தான் இந்த அசத்தல் வேலைகளை செய்கின்றது. Android மற்றும், iOS சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய இம் மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களை வரைந்தது போன்று மாற்றிக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. bluestack என்னும் மென்பொருள் மூலம் நீங்கள் கணினியிலும் இதை உபயோகப்படுத்தலாம்.

மேலும் இந்த மென்பொருள் 52.8MB கோப்பு அளவுடையதாகக் காணப்படுவதுடன், கேலி சித்திர உருவங்களுக்கு Animtion கொடுக்கும் வசதியினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
download for ios mobiles:- Apple

download for android mobiles:- Android

tnx to sarfan

Popular Posts

Facebook

Blog Archive