நவம்பர் 2014 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நவம்பர் 2014 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 25 நவம்பர், 2014

Android Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி?

Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விவரம்) நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்
1 மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது
3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது
2 application களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது
3 wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும்
ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும்
4 நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதிர்வீச்சு அதிகளவில் வெளிப்படும் இதன் இயக்கம் மின் ஆற்றலை விரைவில் செயலிழக்க வைத்து விடும்
5 display brightness தேவையான அளவு adjust செய்து உபயோகித்துக் கொள்ளுங்கள் இரவு நேரங்களில் அதிக அளவு வைத்து உபயோகிப்பது கண்ணுக்கு கெடுதலை விளைவிக்கும் மிகவும் கம்மியாக bright வைக்கும்.இதை பின்பற்றினாலே பொதும் தேவையான அளவு மின்சக்தியை சேமிக்கலாம்

Photo: Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விவரம்) நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் 
1 மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது
3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது 
2 aplication களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது 
3 wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும் 
ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும் 
4 நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதிர்வீச்சு அதிகளவில் வெளிப்படும் இதன் இயக்கம் மின் ஆற்றலை விரைவில் செயலிழக்க வைத்து விடும் 
5 display brightness தேவையான அளவு adjust செய்து உபயோகித்துக் கொள்ளுங்கள் இரவு நேரங்களில் அதிக அளவு வைத்து உபயோகிப்பது கண்ணுக்கு கெடுதலை விளைவிக்கும் மிகவும் கம்மியாக bright வைக்கும்.இதை பின்பற்றினாலே பொதும் தேவையான அளவு மின்சக்தியை சேமிக்கலாம்

படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!

இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!
அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ளமுடியும்.
இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
4.99 டொலர்களே பெறுமதியான இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி : -
https://play.google.com/store/apps/details…

Thanks to ThagavalGuru
ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.






ThagavalGuru's photo.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

பேஸ்புக்கில் TrustedContacts பற்றி அறிவீர்களா?

பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயில் மூலம் நம் கணக்கை திரும்ப பெறலாம். நம்மால் ஈமெயில் கணக்கை அக்செஸ் செய்ய முடியவில்லை என்றால் நம் Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற முடியியும்.

இதன் முக்கிய அவசியம் என்னவெனில் நம்மால் ஈமெயில், போன் மூலமும் நம் பேஸ்புக் கணக்கை திரும்ப பெற முடியவில்லை என்றால் Trusted Contacts இல்லை என்றால் நம் கணக்கை திரும்ப பெறுவது மிக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் இந்த வசதியை நாம் பயன்படுத்தினால் நம் கணக்கைதிரும்ப பெறுவது எளிதாகும்.

Trusted Contacts என்பதில் பெயருக்கு ஏற்றாற் போல் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் சேருங்கள், அதே போல பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்தும் நண்பராகவும் அவர் இருக்கட்டும்.எப்படி Trusted Contacts-ஐ சேர்ப்பது?உங்கள் பேஸ்புக் கணக்கில் Settings >> Security என்ற பக்கத்திற்கு செல்லவும். இப்போது கீழே உள்ளது போல Trusted Contacts என்ற ஒரு பகுதி இருக்கும்.
Security Settingsஅதில் “Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது எப்படி Trusted Contacts மூலம் நம் கணக்கை திரும்ப பெற இயலும் என்ற சொல்லப்பட்டிருக்கும். அதிலும் ”Choose Trusted Contacts” என்பதை கிளிக் செய்யுங்கள்.

Choose Trusted Contactsஇப்போது அடுத்த விண்டோவில் உங்களின் Trusted Contacts-ஐ நீங்கள் Add செய்யலாம்.Choose Trusted Contacts 2இதில் 3-5 நண்பர்களை நீங்கள் சேர்க்கலாம்.
இதன் மூலம் FACEBOOK கணக்கை இலகுவாக மீட்க முடியும்.
Sri Patan's photo.
Sri Patan's photo.
Sri Patan's photo.

வெள்ளி, 21 நவம்பர், 2014

அன்னை தெரேசாவின் சிந்தனைகள்...

* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.

* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.

* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.

* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.

* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.

* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.

* யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு.
அன்னை தெரேசாவின் சிந்தனைகள்...

* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.

* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.

* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.

* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.

* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி. 

* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.

* யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு. Thanks to
முழுநிலவு முழுமுதலோன்

புதன், 19 நவம்பர், 2014

உங்களது மொபைலின் இண்டர்நெட்டின் வேகம் உங்களுக்கு தெரியுமா ?


இது உங்களுடைய போனின் இண்டர்நெட் வேகத்தை நொடிக்கு நொடி தெரியப்படுத்திக்கொண்டே இருக்கும் monthly internet pack உபயோகிப்பவர்கள் இதில் தங்களின் ஆரம்பம் மற்றும் முடியும் நாளை செட் செய்துவிட்டால் போதும் ஒரு மாதம் முடிந்ததும் தானாக இனைப்பை நிருத்திவிடும் .limit pack உபயோகிப்பவர்களுக்கு இப்பொழுது 1GB உபயோகப்படுத்த அதில் செட் செய்தால் போதும் 1GB நீங்கள் உபயோகித்ததும் தானாக இண்டெர்நெட் இனைப்பை துண்டித்து mobile balance குறையாமல் பார்த்துக்கொள்ளும் இதனை பேற இங்கு செல்லவும் https://play.google.com/store/apps/details?id=com.internet.speed.meter.lite
ஜெக தீ ஷ்'s photo.

செவ்வாய், 18 நவம்பர், 2014

மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள்


 
ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியாதநிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின்றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட் போனை ஃப்ளைட் மோடில் வைக்கையில்,

அதன் செல்லுலர் ரேடியோ, வை பி, புளுடூத் ஆகியவை செயல்படுவதில்லை. செல்டவர்களுடன் போனால் தொடர்புகொள்ள முடியாது. பேச அழைப்பு விடுக்க முடியாது. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. அதாவது செல்டவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
போன் வை பி நெட்வொர்க்கில் இணைய முடியாது. இதனால், அந்த நெட்வொர்க் வழியே எந்த சாதனத்தையும் தொடர்புகொள்ள இயலாது. ஏற்கனவே, வை பி செயல்பாட்டை இயக்க நிலையில் வைத்திருந்தால், ஃப்ளைட் மோடில், அது தானாகவே செயல் இழக்கும்.

ஃப்ளைட் மோடில், புளுடூத் இயங்காது. பெரும்பாலானவர்கள், புளுடூத் இயக்கி தங்களுடைய ஹெட் செட்டினை இயக்குவார்கள். இது செயல்படாது. ஆனால், மவுஸ் மற்றும் கீ போர்ட் ஆகியவற்றை இயக்க முடியும்.
இந்நிலையில் ஜி.பி.எஸ். எனப்படும் நம்போன் இயங்கும் இடத்தை அறியும் தொழில் நுட்பம் இயங்காது. பொதுவாக விமான நிறுவனங்கள் இதனை இயக்குவதைத் தடை செய்துள்ளன. இந்தநிலை இயக்கப்படுகையில், ஸ்மார்ட் போனில், உள்ள ஃப்ளைட்மோட்ஐ கான் இயக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒளி விட்டபடி இருக்கும். ஐபோன், ஐபேட் மற்று ம் ஸ்மார்ட் போன்களில் இது மேலாகக் காட்டப்படும்.

பொதுவாக மொபைல் போன்கள் செல்டவர்களை தங்கள் சிக்னல்களுக்காக சிரமத்துடன் தேடுவதால், விமானப் பயணங்களில், அதன் சாதனங்கள் இயக்கம் பாதிக்கப்படும். எனவே, ஃப்ளைட்மோடில், போன்களை அமைக்க வேண்டியதிருக்கும். பொதுவாகவே, செல்டவர்களிலிருந்து சிக்னல்கள் கிடைக்காததால், நாம் போனைப் பயன்படுத்துவது இல்லை. மேலே செல்லாமல், விமான நிலையத்தினுள் உள்ள விமானங்களில் அமர்ந்திருக்கையில், போன்கள் செல்டவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற சூழ்நிலைகளில், நாம் நம் செல் போன்களை இயக்கக் கூடாது என விமான ஊழியர்கள் தடுத்துவிடுவார்கள்.

நீங்கள் விமானத்தில் இல்லாத போதும், இந்த நிலை உங்களுக்கு உதவிடும். உங்கள் போனில் உள்ள பேட்டரி சக்தியைக் காப்பாற்ற இதனை இயக்கலாம். ஏரோ பிளேன் மோட் இயக்கப்படுவதால், பல வயர் லெஸ் நெட்வொர்க் பணி கள் மேற்கொள்ளப்படாது.

எனவே, பேட்டரியின் மின் சக்தி மிச்சமாகிறது. ஆனால், இதனை இயக்கினால், நமக்கு அழைப்புகளும் கிடைக்காது என்பதனை நினைவில்கொள்ளவேண்டு ம்.
சில பயணியர் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் பயணம்செய்வோரிடம், கட்டணம் பெற்றுக்கொண்டு, வை பி இயக்க அனுமதிக்கின்றனர். அப்போது அழைப்புகளை இயக்க முடியாது. ஆனால், வை பி இயக்க முடியும். அதன் மூலம் சில சாதனங்களைத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக இன்டர்நெட் சேவையினைப் பயன்படுத்த முடியும்.

விரைவில், பயணிகள் கட்டணம் செலுத்தி, மொபைல் போன்களுக்கான அழைப்புகளையும் மேற்கொள்ளக் கூடிய வசதியினை விமான நிறுவனங்கள் தரும் காலம் வரு ம் என அனைவரும் எதிர்பா ர்க்கின்றனர்.
- அழகன் மா. தேவி

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்:

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி ஜூஸ்:

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ ஜூஸ்:

 அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை ஜூஸ்:

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யா ஜூஸ்:

கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழ ஜூஸ்:

ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி ஜூஸ்:

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.
உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...

ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட  உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை  ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள்  கரையும். 

தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து  தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும். 

அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல  கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும். 

திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல்  எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும். 

கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும் 

ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க  வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். 

அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து  பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.
Karthikeyan Mathan

மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? -

சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம்

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்
சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம் 

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். 

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும். 

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும். 

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். 

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். 

* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும். 

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார். 

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும். 

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்·

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!

* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.

-எம். மரிய பெல்சின்

Thanks To
Vikatan EMagazine

திங்கள், 17 நவம்பர், 2014

பொடுகை நீக்க.. .Natural remedies to remove dandruff

பொடுகைப் போக்க வேப்பம்பூ: 
podugu thollai neenga
 
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வேப்பம்பூ பயன்படுகிறது.  இது கோடை காலம் ஆகையால் வேப்பம்பூ (Neem flowers) அதிகம் கிடைக்கும். நூறுகிராம் அளவுள்ள வேப்பம்பூவை , இருநூறு கிராம் தேங்காய் எண்ணையுடன் (Coconut Oil) கலந்து நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். 
காய்ச்சிய எண்ணெய் இளம் சூடாக இருக்கும்பொழுது எடுத்து தலையில் நன்கு தேய்த்து ஊறவைக்கவும். 

அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு வேப்பம்பூ கலந்த எண்ணையைத் தேய்த்து குளித்துவர, உங்களைப் பாடாய் படுத்திய பொடுகு தொல்லை போயே போய்விடும். 
எளிமையான இந்த இயற்கை வைத்தியத்தைப் பயன்படுத்தி பொடுகு தொல்லையை தவிர்த்திடுங்கள். 
 
பொடுகை போக்க மற்றொரு முறை: 
 
மருதாணி இலையை (henna leaves) ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம் (fenugreek seeds), வேப்பிலை (Neem leaves), துளசி (Tulsi), சீயக்காய்  (Soap nut) ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 
அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை (Lemon juice) அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். 
எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் (Curd) இதற்குப் பயன்படுத்தலாம். 
நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர  பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் ‘கருகரு’வென நன்கு வளரும். 
This post explained how to remove the Dandruff using in the natural system.  
நன்றி. 
 
- தங்கம்பழனி
 
Allso Read in English
 

தலைமுடி கொட்டுகிறதா? என்ன காரணம்?


தனி மனித வாழ்வில் அழகைக் கொடுக்கும் விடயம் ஒன்று உண்டென்றால் அது தலைமுடிதான். உடலின் நிறம் எதுவாக இருந்தாலும் தலையில் அதிக முடியுடன் சிலுப்பிக்கொண்டு செல்லும் அழகே தனிதான்.அது ஆண்களாகட்டும் பெண்களாகட்டும். அடர்த்தியான தலைமுடிதான் அழகைத் தரும். அடர்த்தியாக தலைமுடி கொண்டவர்களின் முகத்தோற்றமே ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும்.

முகத்தோற்றத்தை தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக முடி விளங்குகிறது. இவ்வளவு பெருமை மிக்க தலைமுடி ஒரு சிலருக்கு அதிகம் கொட்டும். ஒரு சிலருக்கு இலேசாக  முடிகொட்டும். முடிக்கொடுவதற்கு என்ன காரணம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள், யுவதிகளின் மத்தியில் முடி பராமரிப்பு என்பது இல்லையென்றே சொல்லலாம். காரணம் அவசர உலகம்… கண்ட கண்ட விளம்பரங்களில் வரும் ஷேம்பு வகைகள், ஹேர் லோஷன்கள், ஹேர் ஜெல்கள்தான்.
இயற்கையான முறையில் கூந்தலை பராமரிக்க அவர்களுக்கு நேரமுமில்லை..
இதுமட்டும்தான் முடி கொட்டுவதற்கு காரணமா? இன்னும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று பார்ப்போம்.

முடிகொட்டுவதற்கான காரணங்கள்: (Reasons for Hair Falling )
பரம்பரை: (Descent)

வழி வழியாக பரம்பரை மூலம் வருவது. உடலில் உள்ள மரபு ஜீன்கள் மூலம் முடிகொட்டும் பிரச்னை தொடரும். இதை தடுக்க முடியாது. என்றாலும் முடிகொட்டுவதை மிக குறைந்த அளவாக குறைக்க முடியும்.

ஹேர்ஸ்டைல்: (Hairstyle:)

நீங்கள் அழகு நிலையங்களில் உங்கள் கூந்தலுக்கு சாயமேற்றுதல், சுருள் முடியாக்குதல், கூந்தலை நேராக்குதல் போன்றவைகளை அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்படியெனில் வெகு விரைவில் நீங்கள் உங்கள் தலைமுடியை இழக்க வேண்டியதுதான்.
இதனால் கூந்தலில் உலர்வுத் தன்மை ஏற்பட்டு கூந்தல் உதிர்வது அதிகரிக்கும்.

ஹார்மோன் : (Hormone)

வழக்கத்துக்கு மாறான ஹார்மோன் மாற்றங்களால் முடி உதிர்வு ஏற்படும்.  பிரசவ காலங்களில் பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னை இருக்கும். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் நிகழும். தைராய்டு பிரச்னையால் முடிகொட்டும்.

இராசயனங்கள்: (Chemicals:)

வேதிப் பொருட்களால் முடி கொட்டும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இது அதிகமாக இருக்கும். காரணம் இராசயணம், வேதிப்பொருட்களால் உடல் அதிக வெப்பமடைவதோடு, தலை முடியும் தனது வேர்கால்களின் வலுவை இழக்கிறது.
மேலும் தற்காலத்தில் பயன்படுத்தும் அனைத்து ஷாம்பு வகைகள், கண்டீஷனர் வகைகளாலும் தலைமுடி பாதிக்கப்பட்டு கொட்ட ஆரம்பிக்கிறது.

உணவு வகைகள்: (Cuisine types:)

பாக்கெட் உணவு வகைகள் எடுத்துக்கொள்பவர்கள் முடி கொட்டும் பிரச்னை அதிகம் இருக்கும். காரணம் இவர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும இந்த பாக்கெட் உணவு வகைகளில் கிடைப்பதில்லை. அதனால் முடிகொட்டும் பிரச்னை ஏற்படும்.

சுற்றுப்புறச்சூழ்நிலை, வெப்பம்; (The environment, heat;)

சுற்றுப்புறச்சூழ்நிலைகளாலும் (தூசிகள், அழுக்குகள்), வெப்பம் மிகுந்த வானிலையாலும் தலைமுடி அதிக வெப்பமடைந்து சிதைவுற்று, உடையும் தன்மை ஏற்படும். இதனாலும் அதிகமாக முடிகொட்டும் பிரச்னை ஏற்படும்.

ஆண்கள்: Hair loss for men 

பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் முடி கொட்டுகிறது. காரணம் இயற்கையான உடலமைப்பு மற்றும் ஹார்மோன் விகிதங்கள் மாறுபாடு.

தூக்கமின்மை: (Insomnia)

சாதாரணமாகவே தூக்கமின்மையால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும். சீரற்ற தூக்கம், அதிக தூக்கம், போதுமான அளவு தூக்கமில்லாமலை ஆகிய காரணங்கள் முடிகொட்டும். சீரற்ற தூக்கத்தின் வெளிப்பாடாக முடிகள் அதிக அளவு கொட்டத்தொடங்கும். விரைவில் வழுக்கை தலையாக மாறிவிடும்.

மருந்துகள், மாத்திரைகள்: (Medicines, tablets:)

உடல் நோய்களைத் தீர்க்க எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளில் முக்கியமானது முடி கொட்டுதல். எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் வீரியத்தைப் பொறுத்து முடிகொட்டும் பிரச்னை இருக்கும்.

மன அழுத்தம்: (Mental stress:)

உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தாலும், மன ரீதியாக அதிக உளைச்சல், மன அழுத்தம் ஆகியவைகளால் முடி கொட்டும்.

உடம்பைக் குறைக்கும் வழிமுறைகள்…!

undefined 
 
தற்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து, மூளைச்சார்ந்த உழைப்பே அதிகரித்துள்ளது. இதுவே உடல் பருக்க மிகப்பெரிய காரணமாக உள்ளது.
ஆம். நண்பர்களே..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள், ஆண்டுகள் முதல் பெண்கள் வரை அனைவருமே இக்காலத்தில் ஒரு அவசரகதியில், தங்களுடைய வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். 
காரணம், பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகள் தான்.  
அலுவலகங்களில் எட்டுமணி நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்தல், வீட்டில் உள்ள பெண்மணிகள் வீட்டு வேலையை செய்து முடித்து, குடும்ப நபர்களை பள்ளிக்கு, அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, மீதமுள்ள ஓய்வு நேரங்களில் டி.வி பார்ப்பது. அப்படியே ஒரு குட்டித் தூக்கம் போடுவது என்பன போன்ற செயல்களால் பெண்மணிகளும் தங்களுடைய உடம்பை பருமனாக்கிக்கொள்கின்றனர். 
குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகே,தன்னுடைய உடம்பு பருமனாவதை உணர்வார்கள். அந்த உணர்வைப் பெற்றவுடனே, “அட்டா… இவ்வளவு குண்டாயிட்டமே… உடம்பை குறைக்க வேணுமே…” என்று அவர்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள்.
ஒரு சிலர், கண்டிப்பாக உடம்பை குறைத்தே ஆக வேண்டும். உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால் அதைச் செயல்படுத்தாமல் வெறும் எண்ணத்துடனே இருந்துவிடுவார்கள். காரணம் அதற்கான நேரம் இல்லை.. என்று சொல்லித் தனக்குத் தானே சமாதானம் செய்துகொள்வார்கள்.
இப்படி சூழ்நிலைகளும், மனதின் என்ன ஓட்டங்களும் இருக்குமானால் எப்படி உடம்பைக் குறைக்க முடியும்?
முதலில் நீங்கள் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக,முறையான செயல்பாடுகளைச் செய்தால், நிச்சயம் உடம்பு எடை குறைய ஆரம்பித்துவிடும்.
சரி.. எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்:
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 
2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 
3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 
4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும். 
5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம். 
6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும். 
7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம். 
8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது. 
9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும். 
மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே…உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி வரும் பதிவுகளில் காண்போம். 
மிக்க நன்றி. 
- தங்கம்பழனி.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

YouTube ல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்


money-making-from-youtube-using-your-own-videos-tips-and-tricks
நீங்க உங்களோட மொபைல் மூலம் எடுத்த வீடியோக்கள்... உங்கள் கண்முன்னே நகைச்சுவையான சம்பவங்கள்...குழந்தைகளின் குறும்புத்தனங்கள்....இயற்கைக் காட்சிகள்... விலங்குகளின் நடவடிக்கைகள்....இப்படி உங்களுக்குத் தோன்றுகிற காட்சிகளை அப்படியே நீங்கள் வீடியோவாக பதிவு செய்வீர்களல்லவா?
அந்த வீடியோக்களையும் யூடியூப் தளத்தில் அப்லோட் செய்துவிடலாம். அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் அதிக ஹிட் வாங்கினால் உங்கள் காட்டில் பணமழைதான் போங்க...

வீடியோக்களுக்கு சில மேக்கப் வேலைகள் செய்தால் இன்னும் சிறப்பா இருக்கும்.

இப்படி நீங்கள் எடிட் பண்ணி அழகூட்டின வீடியோவை YouTube தளத்தில் அப்லோட் பண்ணலாம். 

அதுக்கு உங்க்கிட்ட google account இருக்கணும்.. இப்பதான் எல்லோரும் ஜிமெயில் யூஸ் பன்றோமே.. அது இருந்தாலே போதும். 

இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.

இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். இங்கிலீஸ்ல தலைப்பு வச்சா இன்னும் சூப்பரா இருக்கும். அதுதான் நிறைய வியூஸ் கொண்டுவரும்..தலைப்பு சிம்பிளா இருந்தாலே போதும். 

வீடியோவில் எதைப்பற்றியது என்று கூறிப்பிட Description பகுதியில் சொல்லுங்கள். 

Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். 

இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.

அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.

அதற்கான சுட்டி:  YouTube Partner Program: Interest Form - http://www.youtube.com/partners/contact_info?page=start&partner_type=C

இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

Adsense Approval கிடைத்தவுடன் உங்கள் வீடியோ பிளே ஆகும்போது Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்.

1. Overlay in-video ads  - இந்த டைப் விளம்பரம் வீடியோவின் கீழ்பகுதியில் காட்டப்படும் விளம்பரம். சிறியது. 

TrueView in-stream ads – இந்த டைப் விளம்பரமானது வீடியோ ஒளிபரப்புவதற்கு முன்பு சில நொடிகள் அட்வான்சாக தோன்றும் விளம்பரம். 

நீங்க எத்தனை  வீடியோக்கள்  upload செய்றீங்கன்னு பொறுத்துதான்  உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ப தான் வருமானம்தான் கிடைக்கும்.. ரொம்ப ரொம்ப கம்மியாதான் இருக்கும். 

எந்தெந்த  மாதிரியான வீடியோக்களை Upload செய்யலாம் ? 

நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான்.... சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.

ஆங்கில அறிவு இருந்தால் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். ஆனால் தமிழ் வீடியோக்கள் பார்வையிடும் வீதம் குறைவாகவே இருக்கும். 

முக்கியமான குறிப்பு: 

சினிமா படம், சினிமா பாடல்..வீடியோக்களை இதில் பயன்படுத்த கூடாது. அப்படி நீங்கள் ஏதாவதுத எடிட்டிங் செய்து பயன்படுத்தினாலும் அதற்கு ஆட்சென்ஸ் வருமானமெல்லாம் கிடைக்காது. . எந்த வீடியோவாக இருந்தாலும் உங்கள் சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்...

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்த கூடாதுங்க... காரணம் அந்த ஆடியோ ஸ்வாப் வசதியைப் பயன்படுத்துற வீடியோவுக்கு காட்டப்படற வீளம்பரங்களுக்கான வருமானம் சத்தியமா உங்க கணக்குல வந்து சேராது.. அது கூகிள் கணக்குலதான் போய் சேரும். 

நன்றி: பிரபு கிருஷ்ணா.

புதன், 12 நவம்பர், 2014

லிபர்டேசியா (LIBERTAGIA) எந்த ஒரு முதலிடும் இல்லாமல் இணையத்தில் வருமானம் பெறும் நிறுவனமாகும்.

லிபர்டேசியா (LIBERTAGIA)

லிபர்டேசியா (LIBERTAGIA)  எந்த ஒரு முதலிடும் இல்லாமல்  இணையத்தில்
வருமானம் பெறும் நிறுவனமாகும்.

இங்கு நீங்கள் குறைந்தபட்சமாக மாதம் 60$ பெறலாம்.

இங்கு நீங்கள் தினமும் ஒரு 15 விளம்பரங்களை மட்டும் பார்க்க வேண்டும்.
ஒருநாளைக்கு 3$ வருமானமாக கிடைக்கும். வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும்
விளம்பரங்களை பார்த்தால் போதுமானது. நீங்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு
பார்த்தாலும் 5 நாட்களின் வருமானம் மட்டுமே கிடைக்கும்...

குறைந்தபட்ச பணம் பெறும் தொகை 300$ ஆகும்.

வருமானம் பெற நீண்ட நாட்கள் ஆகுமோ என என்னுகிறிர்களா...!

அந்த கவலை தேவையில்லை.  லிபர்டேசியா  நிறுவனம் நமக்கு  6 நிலைகளில்
வருமானத்தை தருகிறது.


அதாவது 6 நிலை வருமானம்  என்பது நமக்கு கீழே நேரடியாக இணையும் அத்தனை
நபர்களும்  நம் முதல் நிலை ஆவார்.... அவருக்கு கீழ் இணையும் அனைவரும்
நமக்கு இரண்டாம் நிலை ஆவார். இப்படியே 6 நிலைகள் வரை நமக்கு வருமானம்
கிடைக்கும்.

நமக்கு கீழ் 6 நிலைகளிலும் உள்ள அனைவரும் பெறும் வருமானத்தில் இருந்து
நமக்கு 1% ரேபிரெல் கமிஷனாக மாத மாதம் கிடைக்கும்.

உதாரணமாக உங்கள் கீழ் நிலையில் ஒருவர் மாதம் 100$ வருமானம் பெறுகிறார்
என்றால் அதில் 1% அதாவது 1$ உங்களுக்கு ரேபிரெல் கமிஷனாக கிடைக்கும்

எத்தனை நபர்கள் உங்கள் குழுவில் இணைகிறார்களோ அதற்கு ஏற்றார்போல் உங்கள்
வருமானம் அதிகமாகும். அப்பொழுது உங்களுக்கு 300$ என்பது சாதரணமாக
பெறகூடிய வருமானமாக இருக்கும்.

உங்களுக்கு மேலும் வருமானம் பெற எண்ணம் இருந்தால் Free membership- ல்
இருந்து upgrade செய்து அதிக வருமானம் பெறலாம்.


இதில்  வருமானத்தை பெற LIBERTAGIA  நிறுவனம். தன் நிறுவனத்தின் பெயரிலே
நமக்கு மாஸ்டர் கார்டை  வழங்குகிறது. அதன் முலம் நம் வருமானத்தை
பெற்றுகொள்ளலாம்.

குறிப்பு -  இத்தளத்தில் ஒரு கணினியில் ஒருவர்  ஒரு கணக்கு மட்டுமே
வைத்திருக்க  வேண்டும் என்ற நிபந்தனை இல்லை...உங்கள் குடும்ப
உறுபினர்களுக்கு ID PROOF மற்றும் BANK AC இருந்தால் அனைவருக்கும் கணக்கை
துவங்கி நீங்கள் வருமானம் பெறலாம்.
இந்த தளத்தில் எப்படி உறுப்பினர் கணக்கு தொடங்குவது? எப்படி பணம்
சம்பாதிப்பது? என்பதை பற்றி பார்ப்போம்

Step1:பின்வரும் Register button கிளிக் செய்யவும்

http://libertagia.com/arunice

Step2: பிறகு confirm பட்டன் கிளிக் செய்யவும்


Step3: இப்பொது பின்வரும் திரை ஒன்று தோன்றும்.அதில் உங்கள் விவரங்களை
சரியாக கொடுங்கள்.

Step4:

Member  Info இங்கு உங்களுக்கு விருப்பமான யூசர்நேம்   கொடுங்கள்

Personal Info

First  name  and  Surname: இங்கு உங்கள் பெயரை கொடுங்கள்

 Document: உங்கள் ட்ரிவிங் லிசென்செஸ்(Driving licence), வோட்டர்
ஐடி(voter id), பான் கார்டு(pan card)  இதில் ஏதோனும் ஒன்று ID PROOF
நம்பர் கொடுங்கள்

 Date of birth: உங்களுடைய பிறந்த வருடம்,மாதம்,தேதி கொடுங்கள்

Email: இங்கு உங்கள் மின்னசல் முகவரியை கொடுங்கள்

Confirm email::திரும்பவும் மின்னசல் முகவரியை கொடுங்கள்

Password: இங்கு உங்களுக்கு தேவையான Password  enter
செய்யுங்கள்.password enter செய்யும்  போது  எண்கல்,குறியீடுகள்  சிறிய
abcd மற்றும் பெரிய ABCD  ஆகியவற்றை   கலந்து பயன்படுத்துங்கள்

Confirm password: திரும்பவும் உங்கள் Password  enter  செய்யுங்கள்

Pincode: உங்கள் பின்கோடு(pincode no )  எண்கல் கொடுங்கள்

Confirm pincode:மீண்டும் உங்கள் பின்கோடு(pincode no)  எண்கல் கொடுங்கள்

Captcha:ஆருகிலுல்ல எழுத்துகளை அப்படியா பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள்

இறுதியாக Register  என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது உங்களுடைய
libertagia தளத்தில் இருந்து ஒரு confirmation மெயில் வரும்.உங்கள்
libertagia கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.இனிமேல் உங்கள்
வேலையை தொடங்கலாம்.

இனி உங்கள் அக்கௌன்ட் login  செய்யுங்கள்.


Step5:  libertagia தளத்தில் login  செய்த பிறகு.task  button கிளிக் செய்யவும்.

Step6  பிறகு.click here to do task  button கிளிக் செய்யவும்

Step7:  பிறகு.click here to  do   task  button கிளிக் செய்தவுடன் .do
task captacha code வரும் பிறகு go to task click செய்தவுடன் நியூ window
ஓபன் ஆகும்


Step8: அதில் 90 நிமிடங்கள் வரும்.பின்பு captacha  code டிபே  செய்து
submit பட்டன் கிளிக் செய்யவும்.இத போல் 15 task பண்ண வேண்டும்.15 task
ஒரோ நரத்தில் செய்து முடிக்க வேண்டும்

http://libertagia.com/arunice

https://libertagiareview.files.wordpress.com/2013/10/cropped-libertagia12.jpg

ஞாயிறு, 9 நவம்பர், 2014

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த..

மென்பொருளின் பெயர் : Blue Stacks

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்பயூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்த பயன்படுகிறது இந்த மொன்பொருள். இந்த மென்பொருள் windows, mac இயங்குதளங்களில் இயங்கக்கூடிய கட்டமைப்பை பெற்றுள்ளது. 


இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் வைத்துக்கொண்டால், ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸ், மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும். 

உதராணமாக ஆண்ட்ராய்ட் போன்களில் எத்தனையோ புத்தம் புதிய கேம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் இயங்கூடிய சாதனங்களில் அவற்றை விளையாடி மகிழ்வோம். அந்த கேம்களையே கம்ப்யூட்டரில் விளையாட நினைப்போம். அவ்வாறு விளைவாடுவதற்கு நேரடியாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாது.


கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நிறுவம் பயன்படும் ஒரு முக்கியமான மென்பொருள்தான் இந்த Blue Stacks. இந்த மென்பொருளைப் போல வேறு சில மென்பொருள்களும் இருக்கின்றன. என்றாலும் இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானதும், இலவசமானதுமாகும்..

bluestacks-software-to-use-android-apk-in-windows-mac-pc-laptop


மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:download bluestacks for mac and windows pc

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி? 


  • முதலில் புளூஸ்டாக் மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.
  • தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவ, புளூஸ்டாக் மென்பொருளைத் திறந்து அதில் உள்ள search box -ல் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரைக் கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்.
  • உங்களுடைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சரியான பெயரை கொடுத்து தேடினால் அந்த அப்ளிகேஷன் புளூஸ்டாக் மென்பொருளில் காட்டும். காட்டுகிற அந்த ஆண்ட்ராய் அப்ளிகேஷன் மீது கிளிக் செய்தால் தானாகவே அந்த அப்ளிகேஷன் ரன் ஆகத்தொடங்கிவிடும். 
  • அல்லது நீங்கள் தரவிறக்கம் செய்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மீது ரைட் கிளிக் செய்து ஓப்பன் வித் ப்ளூஸ்டாக் என்பதைத் தேர்ந்தெடுக்க அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும். 


நன்றி

இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் மென்பொருள்..!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்களில் தேவையில்லாமல் விளம்பரங்கள் குறுக்கீடு செய்யும். ஒரு முக்கியமான செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றி அந்த செய்தியை படிப்பதிலிருந்து மறைக்கும்.
இந்த முறையில் விளம்பரங்கள் வைத்து அதன் மூலம் அதிக வருமானத்தை, அதிக கிளிக்குகள் பெற முடியும் என்ற எண்ணத்தில் அந்த இணையத்தளங்கள் அவ்வாறு விளம்பரங்கள் தோன்ற நிரல்களை எழுதியிருப்பர்.
இதுபோன்ற செயல்களால் தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக சிரமத்தையும், சில நேரங்களில் எரிச்சலடையச் செய்யும்.
ad blocking addon
அதே போன்று உலகில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள், தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை யூடியூப்  தளத்தின் மூலம் கண்டு களிக்கின்றனர். விளையாட்டுச் செய்திகள் முதல், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் வரை எந்த ஒரு நிகழ்வாகட்டும் உடனுக்குடன் யூடியூபில் வீடியோவாக தரவேற்றப்படுகிறது.
ஒரே நாளில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் தரவேற்றப்படும் யூடியூப் தளத்தில் இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பயன்மிக்க வீடியோக்களும் அதில் அடங்கியுள்ளன.
இவ்வாறு உள்ள யூடியூப் வீடியோக்களை தற்பொழுது அதிகம் விளம்பரங்கள் சூழத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வீடியோவைப் பார்ப்பதற்கு முன்பும், பார்த்துக்கொண்டே இருக்கும்போது இடையிடையேயும் விளம்பரங்களும் தோன்றும். இப்படி வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே விளம்பரங்களும் தோன்றுவதால் வீடியோவை பார்ப்பதில் ஒரு வித சலிப்பு, வெறுப்பு ஏற்படும்.
இவ்வாறு இணையத்தில் பல்வேறு தளங்களில் பல பயன்மிக்க தகவல்கள் இருப்பினும், அவற்றை காணும்போது சில நேரங்களில் இதுபோன்ற விளம்பர இடையூறுகள் ஏற்படும். விளம்பர இடையூறு இல்லாமல் ஒரு வீடியோ முழுவதையும் பார்க்கவும், விளம்பர இடையூறின்றி இணையதளங்களை வாசிக்கவும் உதவுகிறது ADD Block போன்ற Add On தொகுப்புகள்.
இத்தொகுப்புகளில் வேலை என்னவென்றால் நாம் வாசிக்கும் இணையதளம், அல்லது வீடியோ பார்க்கும் இணையதளமொன்றில் தோன்றும் விளம்பரங்களைத் தடைசெய்வதுதான். காட்சிக்கு விளம்பரங்கள் தோன்றாமல் தடைசெய்துவிடுவதால் விளம்பர இடையூறு ஏதுமின்றி விரைவாக அத்தளத்தை வாசிக்க முடியும்.
கூகிள் குரோம், பயர்பாக்ஸ் போன்ற பிரசித்திப் பெற்ற வலை உலவிகளுக்கென அத்தளங்களே இத்தகைய ஆட்ஆன் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.
நீங்கள் கூகிள் குரோம் பிரௌசர் பயன்படுத்துபவர்களெனில் இந்த முகவரியில் சென்று உங்கள் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
ஃபையர் பாக்ஸ் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்ய
இந்த ஆட்ஆன் தொகுப்புகளை எப்படிப் பயன்படுத்துவென அத்தளங்களிலேயே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நன்றி.
- தங்கம்பழனி

வியாழன், 6 நவம்பர், 2014

கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!

தினமும் புதிய  புதிய வைரஸ்களும், மால்வேர்களும் உருவாக்கப்பட்டு இணையம் கணினிகளைத் தாக்கி, கணினிகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.
ஹேக்கர்கள் என அழைக்கப்படும் இணைய வழி நுட்ப திருடர்களின் வேலை இது. ஏதாவது ஒரு இணைப்பின் (Link) மூலமாகவோ அல்லது தரவிறக்கம் மேற்கொள்ளும்பொழுது (Download) அதனுடன் இணைந்து இந்த தீங்கிழைக்கும் மென்பொருளும் கணினியில் நுழைந்துவிடுகிறது.
To protect your computer from malware attack Microsoft's System Sweeper
இது நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. இதனை ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் மூலமே கண்டறிய முடியும்.

சில சமயம் இந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் தொகுப்பையும் (Anti virus sofware) மீறி சில மால்வேர்கள் கணினியில் தம்முடைய வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இத்தகைய மால்வேர்களை கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் ஆண்டி வைரஸ் மென்பொருளால் கண்டறிந்து அழிக்க முடியாது.
அதுபோன்ற சமயங்களில் மால்வேர் தொகுப்புகளை கண்டறிந்து நீக்குவதற்காகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் System Sweeper என்ற மென்பொருளை வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமே..
இந்த மென்பொருளை உங்களுடைய கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் பதிந்திருந்தாலும் கூட பயன்படுத்த முடியும். அவ்வாறு பயன்படுத்துவதால் மால்வேர் பாதிப்பிலிருந்து உங்களுடைய கணினியை நீங்கள் பாதுகாத்திட முடியும். ஆண்டி வைரஸ் மென்பொருளுடன் மைக்ரோசாப்டின் சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளையும் பயன்படுத்துவதால் உங்கள் கணினிக்கு கூடுதல் பாதுக்காப்பு கிடைக்கும்.

சிஸ்டம் ஸ்வீப்பர் மென்பொருளின் பயன்கள்: (Features of System sweeper)

  • இது மால்வேர் மற்றும் ஸ்பைவேர் நச்சு நிரல்களுக்கு எதிராக திறமையாக செயல்பட்டு அவற்றை நீக்கிட உதவுகிறது.
  • மைக்ரோசாப்டின் தயாரிப்பு என்பதால் நம்பகத்தன்மை அதிகம்.
  • இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இம்மென்பொருளைப் பயன்படுத்த முடியும். எனவே இணைய இணைப்பு இல்லாத கணினியில் நிறுவியும் பயன்படுத்தலாம்.
  • நேரடியாக கணினியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாது என்றாலும் Removal Device களான Pendrive, CD, DVD போன்றவைகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
  • அதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் இதை எளிதாக எடுத்துச்  செல்லலாம்..
  • நீங்கள் வெளியிடங்களில் மற்ற கணினிகளைப் பயன்படுத்தும்பொழுதும் அக் கணினியை  இம்மென்பொருள் மூலம் மால்வேர் உள்ளதா என சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
  • வைரஸ் பிரச்னை காரணமாக உங்களுடைய கணினி Boot ஆகவில்லை என்றால் இம் மென்பொருளைப் பதிந்து வைத்திருக்கும் சிடியைப் பயன்படுத்தி பூட் செய்து கொள்ள முடியும் என்பது இம்மென்பொருளின்  கூடுதல் பயன். அவ்வாறு கணினியை தொடங்கச் செய்யும்பொழுது, கணினி boot ஆகாமல் தடுத்த வைரஸ், மால்வேர்களை, அழித்து, கணினி பூட் செய்கிறது.
  • இந்த  மென்பொருள் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் (Malware and spyware attacks) தாக்குதலிருந்து கணினி பாதுகாக்க மட்டுமே அன்றி ஒரு முழுமையான ஆண்டி வைரஸ் மென்பொருள் இல்லை. அதனால் ஏற்கனவே உங்கள் கணனியில் உள்ள ஆண்டி வைரஸ் மென்பொருளை அப்படியே பயன்படுத்துங்கள்..
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:Download Free Microsoft’s System Sweeper Sys32Bit

 Download Free Microsoft’s System Sweeper Sys64Bit
 
நன்றி.
-தங்கம்பழனி

Informations
Read More
Englisn==>> http://masinfom.blogspot.in/

வயிற்றுப் போக்கைத் தடுக்கும் புதிய தடுப்பூசி..!

குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.
 
’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
 
என்கிறார் வள்ளுவர் பெருந்தகை. அதாவது இசை என்பது நோயைக்கூட விரட்டும் சக்தி படைத்தது, இனிமையானது. அதைக் காட்டிலும் இனிமையானது குழந்தை பேசும் மழைலை வார்த்தைகள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
Rotavirus Vaccine to prevent diarrhea

மழலை மொழியில் மயங்காதார் யாருமே இருக்க முடியாது. அத்தகைய மழைலைச் செல்வங்களை நோயிலிருந்து காத்து, பேணி வளர்ப்பது பெற்றோர்களின் கடமை.
நம் நாட்டில் பல்வேறு நோய்களால் பாதிகப்பட்டு ஒன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் இறந்து போகின்றனர். குறிப்பாக வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு 1.60 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர் என்று புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஆண்டுக்கு வயற்றுப் போக்கால் இத்தனை குழந்தைகள் இறந்துவிடுகின்றனரா? என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனினும் வயிற்றுப் போக்கைத் தடுக்க 1985ம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடந்து வந்துகொண்டிருந்ததன் பலனாக தற்போது வயற்றுப் போக்குக்கான தடுப்பூசி கண்டு  பிடிக்கப்பட்டுள்ளது.
“ரோட்டோ வைரஸ்” என்ற இத்தடுப்பூசி மிக குறைந்த விலையில் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டிருக்கிறது. இனி வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பது இரண்டாண்டுகளில் வெகுவாக குறைந்து, வயிற்றுப் போக்கால் குழந்தைகள் இறப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என உறுதியாக நம்பலாம்.

ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கை தடுக்கும் தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்:

(features of the rotavirus vaccine )
  • முழுக்க முழுக்க, இந்திய மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து, இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பயோ டெக்னாலஜி துறையும், ஐதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோ டெக்-(Bharat Bio Tech) என்ற நிறுவனமும் இணைந்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.
  • வேலூர் மருத்துவமனை, புனே மருத்துவமனை மற்றும் டில்லி மருத்துவமனை என, மூன்று இடங்களில், இந்தத் தடுப்பூசிகளின் பரிசோதனை நடைபெற்றது.
  • பரிசோதனையின் போது, சர்வதேச நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. மிக, மிக எச்சரிக்கையாக நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.
  • அடுத்த, எட்டு மாதங்களுக்குள், “ரோட்டா வைரஸ்’ தடுப்பூசி (Rotavirus vaccine) சந்தைக்கு வந்து விடும். குழந்தை பிறந்ததில் இருந்து, 6வது வாரம், 10 வது வாரம் மற்றும், 14வது வாரம் என, மூன்று முறை, இந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு போட வேண்டும்.
  • மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின், அனுமதி கிடைத்ததும், ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில், 150 ரூபாய்க்கு, இந்த தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
  • இந்த தடுப்பூசி மருத்துவ உலகில், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில், சந்தேகம் இல்லை. நம்நாட்டில் மட்டுமின்றி, ஏழை நாடுகளும், இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள முன்வரும்.
பலருக்கும் பயன்படும் என்பதால் இச்செய்தியை பகிர்ந்திருக்கிறேன். செய்தியைத் தந்த தினமலருக்கு நன்றி.
 
InformationsRead More
Englisn==>> http://masinfom.blogspot.in/

 

ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ், விண்டோஸ் ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...

ஸ்மார்ட் போன்களுக்கான மெசேஜிங் அப்ளிகேஷன்கள்...

1. வாட்ஸ்அப் (WhatsApp)


மிகப் பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன்களில் ஒன்று இது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் இயங்க கூடியது. இந்த அப்ளிகேஷன் 3G, Wifi கனெக்சனைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள், வீட்டு நபர்களுக்கு தகவல் அனுப்ப அல்லது பேச  பயன்படுகிறது. இவை கூடுதல் எதுவும் கட்டணம் இல்லாமல் செயல்படுவதால் அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் இதை விரும்புகின்றனர். 

5-messaging-apps-for-android-ios-windows-smartphones


வாட்ஸ் அப்ளிகேஷன் மூலம் pictures, audio notes மற்றும் வீடியோ மெசேஜ்களை அனுப்ப முடியும். 


2. வைபர் (Viber)

இந்த வைபர் அப்ளிகேஷனும் மிக பிரபலமான மேசேஜிங் அப்ளிகேஷன்தான். இதில் வீடியோ மேசேஜ், அழைப்புகளை மேற்கொள்ள, டெக்ஸ்ட் மேசேஜ் அனுப்ப முடியும். இவை அனைத்தையும் 3G, wifi மூலம் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் உலகளவில் 200 மில்லயனுக்கும் அதிகமான பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களில் பயன்படுத்துகின்றனர். 

5-messaging-apps-for-android-ios-windows-smartphones



3. ஸ்கைப் (Skype)

அந்த அப்ளிகேஷனைப்பற்றி சொல்லவே தேவையில்லை. பெரும்பாலான நண்பர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர. இது டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ்போன், ஆண்ட்ராய்ட் போன்ற மொபைல் ப்ளாட்பார்ம்களில் பயன்படுத்தப்படுகிறது. 663 மில்லியன் பயனர்கள் இப்பொழுது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். 

5-messaging-apps-for-android-ios-windows-smartphones



4. லைன் (Line)

மற்றுமொரு  பிரபலமான மெசேஜிங் அப்ளிகேஷன் இது. உலகளிவில் 250 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமும் free messages, free voice calls ஆகியவற்றைச் செய்ய முடியும். இருநூற்றி முப்பத்தொரு நாடுகளில் இந்த அப்ளிகேஷன் பயன்பாட்டில் உள்ளது.




5. பேஸ்புக் மெசன்ஜர்  (Faceboo Messenger)

பேஜ்புக் மேனேஜர் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பலாம். இதன் மூலம் photos, stickers, smileys போன்றவற்றையும் அனுப்ப முடியும். விண்டோஸ்போன்களுக்கு இந்த அப்ளிகேஷன் தற்போது இல்லையென்றாலும், விண்டோஸ் டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியும். 



பேஸ்புக் மெசேஜிங் அப்ளிகேஷன்: ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு | ஐஓஎஸ் பயனர்களுக்கு | விண்டோஸ்போன் பயனர்களுக்கு


இவை அனைத்தும் கூகிள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும். 

நன்றி.

Missed Calls reminder Android apps மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆண்ட்ராய் அப்ளிகேஷன்

Missed Calls reminder Android apps

மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆன்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷன் இது. நீங்கள் பிசியாக இருக்கும்போது உங்களுக்கு வரும் மிஸ்டுகால்களை நினைவூட்ட இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.

அனிடூ என்ற பெயர் கொண்ட இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். இந்த மென்பொருளில் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.

Missed Calls reminder Android apps

பேச்சு மூலம் ஆண்ட்ராய்ட் போனை செயல்படுத்துவது, ஜிமெயில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

தவறிய அழைப்புகளை நினைவூட்டுவதற்கும் பயன்படுகிறது.

Missed Calls reminder Android apps

Any.Do அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய சுட்டி; Download Android missed call alert apps

செவ்வாய், 4 நவம்பர், 2014

உங்கள் Pen Driveவை பாதுகாக்க மிக முக்கியமான கம்ப்யூட்டர் மென்பொருள் !

ஒன் line சொல்லுவேன் ! இது உங்க systemத்துக்கு கண்டிப்பா தேவை !!!!l

இன்று கம்ப்யூட்டர்ரில் USBல் pen drive or Memory Cord Reder பயன்படுத்த ஆளே இல்லை ! என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு ! அதன் பயன்பாடு அவசியம் நமக்கு தேவைபடுகிறது !!

அந்த தேவையுடைய ,,,,சின்ன pen drive வை சரியான
முறையில் கையாழுகிறோமா என்று பார்த்தால் !
இல்லை ! என்ற தான் சொல்லவேண்டும் !!!!

வேகமாக வருவோம் ! pendrive USBல் வேகமாக மாட்டுவோம் ! file copy ஆனத ,,,,,,டக் என்று கழட்டிவிட்டு  ஓடிவிடுவோம் !! வயதானவர்கள் தான் safety remove
கொடுத்து pendrive தருவார்கள் !!!!

இதானால் என்ன பாதிப்பு வரபோகிறது என்று கேட்பிர்கள் ?

இதனால் நாம் pendrive உள்ள file Data, இழந்துவிடுவோம் ! ஏன் pendrive ஒட்டு மொத்தமாக இழந்து தூக்கி ஏறிய வேண்டிய நிலை வரும் !!! device errors, data corruption .,,
இதை தடுக்க தான் safety removeவை கொடுத்து pendrive
கழட்டுகிறோம் .

safety remove கொடுக்காமலே pendrive கழட்ட
ஒரு மென்பொருள் உதவியாக இருக்கிறது !

+++++++++ USB Disk Ejector+++++++++

இது மிக எளிமையாக வடிவமைக்கபட்டுள்ளது!
இதை install செய்ய தேவை இல்லை . இந்த மென்பொருளின் அளவு 2.74 MB.

இதன் சிறப்பு : ( உங்கள் pendriveவில் வைரஸ் தாகிருந்தாலோ அல்லது small error problem இருந்தால் நமது pendrive கம்ப்யூட்டர்ரில் இணைத்தால் அது open ஆக சில மணி நேரம் ஆகும் , இதனை சரியான முறையில் சரி செய்துகொள்ள உதவுகிறது ! உங்கள் pendrive pcல் உடனே open செய்ய பயன்படுகிறது ) .

Download link :

https://docs.google.com/file/d/0B4RkWC6UtqWrUUtKWkg1bVktZ1U/edit

இதை நிறுவிய பிறகு !! pendrive remove செய்யவேண்டிய உங்கள் pendrive device யை mouse மூலம் தேர்வு செய்து double- கிளிக் or ender பத்தானை தட்டினால் போதும் !

தானாகவே safe remove செய்துவிடும் !! 
Plzz Share
தொடர்ந்து இணைத்து இருங்கள்  Computer Tips & Tricks

Android recycle bin pro FOR FREE

 
Hellow சகோ 
இன்றைய பொழுது இனிமையாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
Android Mobileகளின் விற்பனை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதை தொடர்ந்து அதனுடைய Applicationகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது .
அதில் நமக்கு உபயோகமானதாக இருப்பது மிகவும் குறைந்த அளவே உள்ளன அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பதுதான் இந்த Android recycle bin( pro )
இது பல மொபைல்களில் inbuiltஆகவே கொடுக்கப்பட்டிருக்கும்
இதனுடைய வேளை நாம் நமது போனில் ் Delete செய்த Fileகளை இதிலிருந்து திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்
Uninstall செய்த Applicationகளையும் இதிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் இது install செய்யப்பட்ட காலத்திலிருந்து எந்தெந்த File delete செய்யப்பட்டதோ அது அத்தனையையும் இது தன்னுடன் இனைத்து வைத்திருக்கும் நாம் தேவைப்படும் நேரத்தில் அதை restore செய்து பெற்றுக்கொள்ளலாம்
Play Storeல் கட்டண முறையில் கிடைக்க கூடிய இந்த Android recycle bin pro இன்று ஒரு நாள் மட்டும் இங்கு இலவசமாக கிடைக்கும் வேகமாக Download செய்து அனைவருக்கும் இது உபயோகப்படும்படி Share செய்யுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது
Download details

File Name - Android recycle bin pro

version - 1.5

File Size - 6.42 MB

File Format - Zip (please use z Archiver To Extract this file )

Download link .........  PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS

சனி, 1 நவம்பர், 2014

உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு புதிய சாப்ட்வேர்!

சார்,,, இத  நல்ல பாருங்க  வருசையா படிச்சு சொல்லுங்க,,,,,?

அ ,,,ஆ,,,, , இ,, ,ஈ,,,,,,,, அப்புறம் என்ன இருக்குனு தெரியல மேடம்!!!!

இப்படி  கம்யூட்டருடன் தினமும் குடும்பம் நடத்தி  தன் கண்னின் ஒலியை பறிகொடுத்தவர்களின் நிலை இது !

10 முதல் 60  வயது உடைய ஆண்,பெண் அனைவருக்கும் கம்யூட்டரில் இருந்து தன் கண்களை பாதுகாப்பது என்பது, ஒரு மிக பெரிய சவலாகவும், ஒரு பெரிய சோதனையாகவும்  இருப்பதை இன்று பார்க்கிறோம்!

இதற்கு ஒரு அழகான வழியை காட்டுகிறது EyeDefender எனற மென்பொருள்.

மென்பொருளின் பயன்பாடு :

  • மிக எளிமையாக வடிவமைக்கபட்ட  மென்பொருள் இது .அதனால் அனைவரும் பயன்படுத்த முடியும். 
  • Take a Break  என்னும் option நாம் கம்யுட்டரை தொடர்ந்து பார்ப்பதை தடுத்து.குறிப்பிட்ட நேரம் இடைவெளியில் நம் கண்ணிற்கு தேவையான பயிற்ச்சியை கொடுக்கிறது.(or) வண்ண படங்களை திரை முன் தோன்றசெய்து. உங்கள் கண்களை சிறிது நிமிடம் ஓய்வு எடுக்க விழிப்புணர்வு செய்கிறது .
  • நமக்கு தேவையான வகையில் இதன் நேர அளவினை மாற்றி அமைக்க முடியும்.

கம்யுட்டரின் தினமும் பல மணி நேரம் கண் அசையாமல் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்குறேன் !   

உங்கள் கம்யூட்டரில் பயன்படுத்த டவுன்லோட் செய்யவும்.

http://eyedefender.software.informer.com/download/?caeae8



இவன் :

அ. முகமது நஸ்ருதீன் .

Popular Posts

Facebook

Blog Archive