மார்ச் 2015 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மார்ச் 2015 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 28 மார்ச், 2015

இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!

17-nowucanlistentomusic
மிக வேகமாக  செய்திகள்  பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான  டிவிட்டர், விரைவு  செய்திகளுக்கான தளமாகவே இயங்கி  வருகிறது. மிக சிறப்பான  செய்தி  ஊடகமாக  இருந்தாலும் அது  தனது  வருவாயை பெருக்குவதில் சில  சிக்கலை  சந்தித்து  வருகிறது. சமூக  வலைதளங்களை பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது  தளத்தில் தக்கவைக்கும்போதே  விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக  

நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை  எடுத்து வருகிறது.

  அதன் ஒரு கட்டமாக இப்பொழுது, பயனாளர்கள் தங்கள்  timelines மற்றும் செய்தி பிரிவுகளில் இருந்தபடியே பாடல், இசை அல்லது எதேனும் ஒரு ஒலி களை கேட்கும் வாய்ப்பினை அளிக்க உள்ளது.
 A portrait of the Twitter logo in Ventura
   இதற்காக பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.  ஒலிச் சேவை நிறுவனமான SoundCloud உடன் இணைந்து செயல்பட உள்ளது. SoundCloud ஆடியோவுக்காண  யூ டியூப் என்று கூட சொல்லலாம்.
 இந்த சேவைக்கு Audio Card என்று  பெயரிட்டுள்ளனர். மேலும் தற்பொழுது SoundCloud இணைந்து  துவங்கினாலும்,  வரும் காலத்தில் மேலும் பல நிறுவனங்களை தன்னுடன் இது  இணைத்து கொள்ளும் எனத் தெரிகிறது.
sdfsf
 அதே போல இந்த Audio Card சேவையில் இசை கலைஞர்கள்  தங்கள் சிறந்த படைப்புகளை  மக்களிடம்  எடுத்து செல்ல உதவுகிறது. இது  இசை கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மிக  சிறந்த வாய்ப்பாகும்.

ஆப்பிளின் iTunes ஆதிகத்திலேயே  இந்தத் துறை இருக்கிறது. இப்பொழுது SoundCloud உடன் இணைந்து  டிவிட்டர் இந்த துறையில் இறங்குகிறது. டிவிட்டர் நல்ல வாய்ப்பாக அதற்க்கு  வேகமாக செய்தி  பரப்பக் கூடிய கோடிக்கணக்கான பயனர்கள்  இருப்பதே  ஆகும்.

IBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…


IBM Logo
IBM Logo
நம்மில் பலருக்கும் இப்பிடி ஒரு கம்பெனி இருந்ததே மறந்திருக்கும். ஒரு காலத்தில் IBM Computer னு சொன்ன உடனே “அவளுகென்ன என் தங்கத்துக்கு” என கொஞ்சினர் மக்கள்.
கால ஓட்டத்தில் IBM என்றாலே அது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மென்பொருள் & வன்பொருள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என அடையாளப்படுத்தப்பட்டது.   கடைநிலை பயணர்களாகிய நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் ஆராய்ச்சிகளை IBM செய்து வருகிறது.
அந்த ஆராய்ச்சிகள், நமது மொபைல், கணினி, லேப்டோப் போன்றவற்றில் பல புதிய நோக்கிகளை (Sensors)  பொருத்தி, நமது கணினி / மொபைல் பயன்பாட்டை அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் ஆராய்ச்சிகள்.

1.  மொபைலில் உள்ள Vibrator இன் செயலாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம், நம் திரையைத் தடவிப் பார்த்தால், ஒரு துணி / சேலை போன்றவற்றின் மேற்பரப்பை தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.  (இது பல Online  துணி விற்பனை தளங்களுக்கு பெரியும் பயனாக இருக்கும்).

2.  வாசனையை நுகர்ந்து பார்க்கக் கூடிய புதிய Sensor களைப் பொருத்துவது.

3.  அறு சுவைகளை அறிந்து அதன் விகிததாச் சாரங்களை தெரிவிப்பது.

4. சுற்றுப் புறத்தில் உள்ள அதிர்வு, சப்தங்களை உணர்ந்து … எச்சரிகைகளை தெரிவிப்பது…

5. வெவ்வேறு கலாசார மக்கள் Call Center ஐ தொடர்பு கொண்டு பேசும் போது அவர்களின் ஒலியை  மற்ற கலாச்சார மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றுவது.

(மதுரை தமிழ் to சென்னைத் தமிழ் , Indian English to  American accent)

இது போல் பல ஆராய்ச்சிகளை IBM  மேற்க் கொண்டு வருவதாகவும். சிறு சிறு மனித மூளையின் செயல்பாடுகளை ஒவ்வொரு Sensorராக மாற்றும் முயற்சிகள் இவை, என IBM India/South Asia இயக்குநர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (Cheif Technology Officer)  திரு. ரமேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
  கார்த்திக்

​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.

nest-thermostat
கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​
​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்   (திருடா திருடா படத்தில் வரும் லாரியை  நினைவில் கொள்ளவும்) ​
​ கொடுத்து  வாங்கியது.  TechTamil Karthi
வீட்டில்  தீப்பிடித்தால்  எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்  ஆள்  நடமாட்டம்  இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும்  இந்தப்  பெட்டியை  கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல  சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  அனைத்து  பெரிய  தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களிடம்  இருந்து அதன் அனைத்து  பயனாளர்  விவரங்களை  உளவு  பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம்  வீட்டை கண்காணிக்கும்  ஒரு  பொருளை  நம்  வீடுகளில்  (இப்பொழுதைக்கு  அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா  வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது  அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  மறைமுகமாக யார்  எந்த வீட்டில்  எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை  நாளாக  வீட்டில் இல்லை  போன்ற விவரங்களை சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால்  தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்  என கருத்து  தெரிவிகிறார்கள்.

தங்கக்  குடம்  எப்படி  மண்  குடமானது?


இத்தனை  கோடி  டாலர்  கொடுத்து வாங்கிய  ஒரு பொருளை , சரோசா  தேவி  பயன்படுத்திய  சோப்பு டப்பா  எனும் அளவில்  சொல்லும் விதமாக  நேற்று  ஒருவர்  Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி    ” திறந்த நிரல் மூல “​ ​ (Opensource) ஆக  வெளியிட்டு  கலவரத்தை  ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்  கிடைக்கும் பொருள்களை வைத்தே  உருவாக்கிய இந்த  பொருளை  யாராலும்  லினக்ஸ்  போல்  மேம்படுத்த முடியும்.
இது  நெஸ்ட்  செய்யும்  அனேக  வேலைகளையும், அதே மாதிரியான  இயக்கு நிரல்  (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே  நாளில்  புதிதாக  மற்ற  நிறுவனங்களால்  உருவாக்கக் கூடிய  ஒரு பொருளை வாங்கி ஒரே  வாரத்தில் மீளாத் தோல்வியில்  துவண்டுள்ளது  கூகள்.குறிப்பு : கூகள்  நிறுவனம்  முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக  செய்யவில்லை., அதன் அனைத்து  தயாரிப்புகளும்  விலை கொடுத்து வாங்கி  தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.

வெள்ளி, 27 மார்ச், 2015

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

* 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* 3. வயிற்றுப் புண் குணமாகும்.

* 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* 8. மலச்சிக்கல் நீங்கும்.

* 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* 10. உடல் இளைக்க உதவும்

* 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

* 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* 13. மூட்டு வலி நீங்கும்.

* 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

* 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

* 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

* 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

* 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

* அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
"அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள் - இயற்கை வைத்தியம்.

* 1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* 2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

* 3. வயிற்றுப் புண் குணமாகும்.

* 4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

* 5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* 6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

* 7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

* 8. மலச்சிக்கல் நீங்கும்.

* 9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

* 10. உடல் இளைக்க உதவும்

* 11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

* 12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

* 13. மூட்டு வலி நீங்கும்.

* 14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

* 15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

* 16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

* 17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

* 18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

* அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்."

வியாழன், 26 மார்ச், 2015

எஸ்.டி. மெமரி கார்டுகள் - சில தகவல்கள்
________________________________
செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன.மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள்மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம்.
இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனைஅமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது.ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO.இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை.எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையேஇவை சார்ந்திருக்கின்றன.
2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) andmicroSD (15 x 11 millimeters)
3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி.கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி.கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.
5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில்நுட்பம் உள்ளது.
6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.
7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட்வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில்நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.
10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனைமுறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாகஅழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.
நன்றி,

TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும்...

TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது 

புதிதாக இணைய:  https://www.tsu.co/Keshithasri

TSU வில் புதிதாக இணைந்தவர்களுக்கு .........

*உங்கள் நெட்வொர்கின் வலிமையை பொறுத்துதான் பணம் வரவு வைக்கப்படும்,(நெட்வொர்க் எனபது நண்பர்கள் + பின்தொடர்பவர்கள் +சில்ட்ரன்ஸ் = நெட்வொர்க் ஆவார்கள்),

உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 8000 பேர் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்டும் அவர்கள் செட்டிங்க்ஸ் ஐ பொருத்து 8000 பேருக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது,

புதிதாக இணைய:  https://www.tsu.co/Keshithasri

 ஆகவே முதல் ஒரு மாதம் நெட்வொர்கை பலப்படுத்த எடுத்துக்கொள்ளவும்,அதன்பின்பு தான் வருமானம் கணிசாமான அளவு உயரும் 2 நாட்கள் போஸ்ட் கலை போட்டுவிட்டு பணம் குறைவாக கிடைகிறது என்று எண்ணவேண்டாம்,உங்கள் வருமானத்தை உங்கள் நெட்வொர்கின் பலம் தான் நிர்ணயிக்கின்றது.

ஒரு நாளைக்கு 25 டாலர்கள் அதாவது சுமார் ரூ 1500/- வரை சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்
நன்றி


புதிதாக இணைய:  https://www.tsu.co/Keshithasri

சனி, 21 மார்ச், 2015

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம் சிறுநீரகக் கல் :

சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது.
சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்:

* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும்.

* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும்.

* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும்.

* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும்.

* வயிற்றுப் பிரட்டல், வாந்தி இருக்கும்.

* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

* ஜுரம் இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே
மருத்துவரை அணுக வேண்டும்.
 பொதுவில் சிறுநீரக கல் உருவாக பல காரணங்கள் உண்டு. கால்ஷியம், ஆக்ஸலேட், யூரிக் ஆசிட் போன்றவைகள் காரணமாகின்றன.

* பரம்பரை

* போதிய அளவு தண்ணீர் குடிக்காமை

* சிலவகை உணவு

* அதிக எடை

* செரிமான கோளாறுகள்

* சில வகை மருந்துகள் இவற்றால் சிறுநீரகக்கல் ஏற்படுகின்றது. ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் இவைகளால் சிறுநீரகக் கல் கண்டறியப்படுகின்றது. அளவுக் கேற்றபடி சிகிச்சை முறை கையாளப்படுகின்றது.

சிறுநீரக கல் வராமல் தடுக்க :

* தினம் 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.

* அசைவ உணவையும், உப்பையும் அளவோடு உண்ணுங்கள்.
"சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம் 

சிறுநீரகக் கல் :

சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது. 

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்:

* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும். 

* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும். 

* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும். 

* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். 

* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும். 

* வயிற்றுப் பிரட்டல், வாந்தி இருக்கும். 

* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

* ஜுரம் இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுக வேண்டும். 

பொதுவில் சிறுநீரக கல் உருவாக பல காரணங்கள் உண்டு. கால்ஷியம், ஆக்ஸலேட், யூரிக் ஆசிட் போன்றவைகள் காரணமாகின்றன. 

* பரம்பரை 

* போதிய அளவு தண்ணீர் குடிக்காமை 

* சிலவகை உணவு 

* அதிக எடை 

* செரிமான கோளாறுகள் 

* சில வகை மருந்துகள் இவற்றால் சிறுநீரகக்கல் ஏற்படுகின்றது. ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் இவைகளால் சிறுநீரகக் கல் கண்டறியப்படுகின்றது. அளவுக் கேற்றபடி சிகிச்சை முறை கையாளப்படுகின்றது. 

சிறுநீரக கல் வராமல் தடுக்க :

* தினம் 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். 

* அசைவ உணவையும், உப்பையும் அளவோடு உண்ணுங்கள்."

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.




முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 



உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 



பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  


இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 


1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும். 

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும். 

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். 



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும். 

5. Windows 7/Vista பயனாளிகள்
 
    • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும். 
    • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும். 
    • Language Bar க்கு வரவும். 
    •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும். 
    • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும். 
    •  
6.Windows XP பயனாளிகள்
    • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும். 
    • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.           

    • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.  
    • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும். 
    • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும். 

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும். 


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்: 

Amma - அம்மா, 
karpom - கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும். 

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.


காரணங்கள்:
  • மிகக் குறைந்த Hard Disk Space
  • நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
  • Data Corruption
  • அதிக சூடாகுதல்
  • Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  • Hardware Problems
  • Driver பிரச்சினை

இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.

Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space

இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.

Hard drive corrupted or fragmented

இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.

Run ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs

சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள்

இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்

உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்

இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்

மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்

உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்

பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.

Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

பழைய கணினி

உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன்.

வெள்ளி, 20 மார்ச், 2015

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் // படித்து பகிருங்கள் //

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.

அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number  Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :

உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..
http://www.tnvelaivaaippu.gov.in/
www.tnvelaivaaippu.gov.in
Thanks :
Balaguru Sfl
"Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் // படித்து பகிருங்கள் //

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.

குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.

குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : RPD2013M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..
http://www.tnvelaivaaippu.gov.in/
www.tnvelaivaaippu.gov.in

Thanks :
Balaguru Sfl 

@[297395707031915:274:Relaxplzz]"

மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி:
தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை,
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ்
ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின்
உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறிய கடந்த காங்கிரஸ் தலைமையிலான
மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தத்தை, ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கியது. ஆனால், இந்த மீத்தேன் திட்டத்தால்
இயற்கை வளங்கள் நாசமாகி விடும் என்றும், டெல்டா மாவட்டங்கள்
பாலைவனமாகி விடும் என்றும் விவசாயிகள் மற்றும் அப்பகுதி
மக்களிடையே கடும் எதிர்ப்பு  கிளம்பியது.


இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,
விவசாயிகளும் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
நடத்தினர். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன்
இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான்
செலவிட்டார். பல ஊர்களில் அவரது  தலைமையில், மக்கள் குழாய்களைப்
பிடுங்கி எறிந்தனர்.  இந்நிலையில், மாநிலங்களவையில்
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுப்யிய
கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான், இந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
SPV
Siravai Singam
"=====மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய
அரசு அறிவிப்பு!=====

புதுடெல்லி: தமிழகத்தில் தொடர்ந்து
எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று
வரும் மீத்தேன் திட்டம் ரத்து
செய்யப்படுவதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில்
மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை,
திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய
மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ்
ஏராளமான மீத்தேன் வாயு
உள்ளதாகவும், அதை எடுத்து மின்
உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறிய
கடந்த காங்கிரஸ் தலைமையிலான
மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தத்தை,
ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்
லிமிடெட் (Great eastern energy corporation Ltd.)
என்ற நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்த மீத்தேன் திட்டத்தால்
இயற்கை வளங்கள் நாசமாகி விடும்
என்றும், டெல்டா மாவட்டங்கள்
பாலைவனமாகி விடும் என்றும்
விவசாயிகள் மற்றும் அப்பகுதி
மக்களிடையே கடும் எதிர்ப்பு
கிளம்பியது.

இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,
விவசாயிகளும் மீத்தேன் திட்டத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
நடத்தினர். 'இயற்கை வேளாண்
விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன்
இருந்தபோது, தனது கடைசி நாட்களை
மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான்
செலவிட்டார். பல ஊர்களில் அவரது
தலைமையில், மக்கள் குழாய்களைப்
பிடுங்கி எறிந்தனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில்
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுப்யிய
கேள்விக்கு பதிலளித்த மத்திய
பெட்ரோலியத்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான், இந்த மீத்தேன் திட்டம்
ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

SPV
Siravai Singam"

புதன், 18 மார்ச், 2015

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது.

அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள்.

இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில்,

உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம்.
இதனைப் பெற https://www.digilocker.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகச் செய்தி தரும். அதனைப் புறக்கணித்து தொடரவும். ஏனென்றால், அரசு இந்த தளத்திற்கான பாதுகாப்பு சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிகிறது.

முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தரவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும் பணியில் ஒன்றாக, உங்கள் மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் வழங்கப்படும். இதனை தளத்தில் அதற்கெனத் தரப்பட்டுள்ள இடத்தில் அமைத்து on “Validate OTP” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும். பின்னர், உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, டிஜிட்டல் லாக்கரை இயக்கலாம்.

உங்கள் ஆவணங்களை மின்னணு நகலாக, XML பார்மட் பைலாக இதில் சேமித்து வைக்கலாம். சான்றிதழ் நகல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பெற்ற நாள் கொண்டு பைலின் பெயரை அமைக்கவும். இதன் மூலம், நாம் நம் விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் லாக்கர் எண்ணைத் தந்துவிட்டால், அவர்கள் இந்த ஆவணங்களைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற வகையில் டாகுமெண்ட் நகல்களை இணைத்து எதற்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
இதில் பதிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு Issuer ID வழங்கப்படும். இது வழங்கப்பட்ட பின்னர், அவர் தன் ஆவணங்களை XML பார்மட்டில் பதியலாம்.

பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு uniform resource identifier (URI) தரப்படும். அது நம் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். நம் ஆவணங்களைக் காட்ட விரும்புபவருக்கு இந்த முகவரியைத் தரலாம். அவர் இதே போல, பயனாளராக ஓர் அக்கவுண்ட் திறந்து ஆவணங்களைப் பார்வையிடலாம். ஒவ்வொருவருக்கும் 10 எம்.பி. இடம் கொண்ட டிஜிட்டல் லாக்கர் தரப்படுகிறது.

அரசு அண்மையில் தான் இந்த திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதனைச் சோதனை முறையில் மட்டுமே பயன்படுத்திப் பார்க்கலாம். இது முழுமையான பின்னர், இது குறித்த மத்திய அரசின் ஆணை வெளியிடப்படும். இதன் வெற்றி, நம் அரசு துறைகள் மற்றும் நம்மிடம் உள்ளது.கூடுதல் தகவல்களை அறிய http://cdn.mygov.nic.in/bundles/frontendgeneral/images/beta-release-of-digital-locker-system.pdf என்னும் இணைய தளம் செல்லவும்.

SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதாவது சாம்சங் ஒரு தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம். இதில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன, டேப்லெட் கணினிகளும் கிடைக்கின்றன. இவ்வளவு தான் தெரியுமா? போங்க பாஸ் இதெல்லாம் ரொம்ப பழசு...!
 
சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய அன்மைத்தகவல்களை உங்களுக்காகவே இங்கே வழங்கியுள்ளோம். பெரும்பாலானோருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ சாம்சங் பற்றிய விரிவான மற்றும் அறிய 11 தகவல்கள்...

http://img.talkandroid.com/uploads/2012/03/Samsung-Logo-800.jpg
 
  1. சாம்சங் ஆரம்பிக்கப்பட்டது 1938ல். தற்பொழுது சாம்சங் குரூப் செய்யும் வியாபாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 80ற்க்கும்  மேல்
  2. சாம்சங் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு தான் உலகின் உயரமானகட்டிடமான துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீஃபாவை கட்டியது.
  3. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டும் உலகம் முழுவதும் 370,000பணியாளர்கள் உள்ளனர்.
  4. 2011ல் சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் கொடுத்த சம்பளத்தின் அளவு 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்!!
  5. சாம்சங் நிறுவனம், கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் பங்களித்திருக்கிறது.
  6. கடந்தவருடம் சாம்சங் சாதனங்களை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2000 கோடிகளை செலவழித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூ.2,500 கோடிகள்!! [கோடிகள் தோராயமாகவே இருக்கும்.
  7. 2011 ஆம் ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் ரூ.1247000 கோடிகள். இதில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருமானம் மட்டுமே 9 லட்சம் கோடிகள் என்கிறது சாம்சங்கின் அறிக்கை.
  8. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் சென்ற காலாண்டின் நிகர லாபம் மட்டுமே 827 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,600 கோடிகள். இதே சமயம் கூகுளின் மொத்தவருமானமே 340 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே!
  9. கடந்தவருடம் மட்டும் சாம்சங் விற்பனை செய்த செல்போன்களின் எண்ணிக்கை 215.8 மில்லியன்.
  10. சாம்சங் இணையதளத்தில் செல்போன்களுக்கான பிரிவில் மொத்தம் 145 போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் 3 போன்களை 2 வேறு வண்ணங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளது.[தளத்தில்]
  11. டிவி விற்பனையில் கடந்த 6 ஆண்டுகளாக சாம்சங் டிவிக்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்திலேயே உள்ளது.

Popular Posts

Facebook

Blog Archive