2016 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil 2016 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 29 டிசம்பர், 2016

தேனீக்கள் - Theenikal Don't hesitate please forward to all.


தேனீக்கள்மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
இனிக்கும் செய்தியல்ல....!

தேனீ............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?
முதலில்... ஆச்சரியம்.

தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால்,
நிச்சயம் இதுதான்.

ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்தேனீ.

இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்..

ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.
உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை’யில்
சேகரித்துக்கொள்ளும்.

அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்’ என்பார்கள்.

அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக’ மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ORGANIC
FARMING
Don't hesitate   , please forward to all.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

மருந்து மாத்திரைகள் விலை குறைந்தது தெரியுமா?

********* ******** ******** **********

நேற்று மெடிக்கல்   ஷாப்புக்குச் சென்று

Omez -20 Capsule. வாங்கினேன்.

வழக்கமாக ஒரு கேப்சூல் 4.50₹ வாங்குவார்கள். நேற்றும் அதே விலையைச் சொன்னார்கள்.10 கேப்சூல் வாங்கினேன். பிறகு எக்ஸ்பைரி டேட்டை பின்னால் பார்த்தேன். அப்போதுதான் 15 கேப்யூல் விலை 36 ₹ என போட்டிருந்ததை கவனித்தேன் அவ்வாறு எனில் விலை குறைந்துள்ளது என கண்டு கொண்டு " என்னங்க விலை குறைந்துள்ளதே! பழைய விலையே சொல்றீங்க? என்றேன்.

அதன் பின் ஒரு கேப்சூல் 2.50₹ தந்தார்.

ஆக, ஏமாற்றப் பார்த்துள்ளார்.

பின் வீடு வந்து இன்டர்நெட்டில் சர்ச் செய்து பார்த்ததில்.

886 வகை மெடிசின்ஸ் விலை குறைந்துள்ளது தெரிந்தது. 15% முதல் 60% வரையிலான  விலை குறைந்துள்ளது.

இவை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அணைத்து நோயுக்குமான மருந்து,மாத்திரைகள்.

மத்திய அரசின் இந்த விலைக் குறைப்பை ஏன் ஊடகங்கள் மறைத்தது.அல்லது நம் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?
Forwarded as Received!

செவ்வாய், 8 நவம்பர், 2016

Flash News : Indian Gov Rs 500/and Rs 1000 note s are invalid from tomorrow onwards

இன்று  இரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது : பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

Jio 4G may remain free until March 2017 - ஜியோ 4ஜி : மார்ச் 2017 வரை எல்லாமே இலவசம் தான்!

ஜியோ சிம் வாங்கிட்டீங்கனா, இந்தச் செய்தி உங்களுக்கானது தான். ஜியோ சிம் இலவச சேவைகளை டிசம்பர் மாதம் வரை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் காலக்கெடு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட

ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜிசேவைகளை இலவசமாக வழங்கி மற்ற நிறுவனங்களின் சேவை கட்டணத்தையும் குறைக்க வைத்தது. ஜியோ பாதிப்பில் சிக்கிய நிறுவனங்கள் இன்று வரை தங்களின் சேவை கட்டணங்களைக் குறைத்து வருகின்றன. செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு காரணங்களைக் காட்டி புதுப்புது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜியோ சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. இந்நிலையில்ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை மேலும் சில காலம் வரை நீட்டிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல்

வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

வரவேற்பு

100 மில்லியன் என்ற பயனாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ தனது அறிமுகச் சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

டிராய்

டிராய் விதிமுறைகளின் படி எந்த டெலிகாம் நிறுவனமும் தனது சேவைகளை 90 நாட்களுக்கும் அதிகமாமக இலவசமாக வழங்க முடியாது, இருந்தும் அறிமுகச் சலுகையின் போது வழங்கப்படும் சலுகைகளுக்கு எவ்வித விதிமுறைகளும் இல்லை எனச் சந்தை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி

பயனர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பின்பற்றாமல் இருப்பது அவர்களை ஏமாற்றுவதற்குச் சமமானது என ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

ஜியோ சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஜியோ அறிவித்த சேவைகளைப் பயனர்கள் முழுமையாக அனுபவிக்கும் வரை ஜியோ சேவைகளை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு உள்ளது என டிராய் மற்றும் அரசாங்கத்திடம் ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோவின் திட்ட மேலாண்மை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அனுமதி

மேலும் பயனர்களுக்கு இலவச ஜியோ சேவைகளை வழங்க டிராய் அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்டர்கணெக்ஷன் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரை ஜியோ பல்வேறு வித்தியாச தீர்வுகளைப் பெற ஜியோ முயற்சிக்கும்.

மாற்றம்

டிராய் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ விதிமுறைகளை வைத்துப் பார்க்கும் போது ஜியோ தனது சேவைகளை நீட்டிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெலிகாம் சந்தையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 24 அக்டோபர், 2016

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

How to use Hard disk in a RAM


1 ) உங்களது கணனியில் My Computer-ஐ Right click செய்து Properties செல்லுங்கள்.

2 ) அடுத்து Advanced System Settings > Advanced > Settings-இற்கு செல்லுங்கள்.

3 ) அடுத்து தோன்றும் திரையில் Advanced-ஐ கிளிக் செய்யுங்கள்.

4 ) அங்கே Virtual Memory-இல் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.

5 ) அடுத்து Automatically manage... எனும் டிக்கை எடுத்து விடுங்கள்.

6 ) அங்கே உங்களது கணனியின் C டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.

7 ) அடுத்து Recommended என்று இருப்பதில் C டிரைவ்-இலிருந்து எவ்வளவு MB அளவு வரை RAM ஆக உபயோகிக்கலாம் என்று காட்டப்படும்.

8 ) அங்கே Custom Size என்பதை தெரிவு செய்யுங்கள்.

9 ) அடுத்து Initial Size, Maximum Size என்று இருக்கும் இரண்டிலும் நீங்கள் ஹர்ட் டிஸ்க்-இல் இருந்து RAM-இற்கு மாற்ற நினைக்கும் MB அளவை டைப் செய்யுங்கள்.

10 ) அடுத்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

11 ) இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

Tech tamil

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

Do-not-clear-browser-cache-memory அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய Browser Cache Memory பற்றிய தகவல்

Browser Cache Memory என்றால் என்ன? 

உங்கள் கணனியில் உள்ள ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி நீங்கள் புதியதொரு இணையத்தளத்திற்கு பிரவேசித்த பின் மீண்டும் அதே தளத்திற்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளம் முன்னர் எடுத்துக் கொண்ட நேரத்தினையும் பார்க்க சற்று குறைந்த நேரத்தில் அதாவது வேகமாக திறக்கப்படுவதனை அவதானித்துள்ளீர்களா? இதற்கான காரணம் என்ன தெரியுமா?

நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி ஒரு இணையதளத்துக்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளத்தின் Logo, மற்றும் ஏனைய புகைப்படங்கள் மற்றும் கோப்புக்கள் போன்றன உங்கள் இணைய உலாவியின் மூலம் தானாக தரவிறக்கப்பட்டு தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றது. இதுவே "Temporary Internet Files" அல்லது Browser Cache Memory என அழைக்கப்படுகின்றது.

Browser Cache Memory இன் பயன் தான் என்ன?


முன்னர் பிரவேசித்த தளத்துக்கு நீங்கள் மீண்டும் செல்கையில் ஏற்கனவே தரவிறக்கப்பட்டு சேமிக்கப்பட்ட அவைகள் மீண்டும் தரவிரக்கப்படாமல் சேமிக்கப்பட்ட படங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பிரதி செய்யப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட தளத்திற்கு எம்மால் மிகவேகமாக பிரவேசிக்க முடிவதுடன் எமது தரவுப்பாவனையும் கட்டுப்படுத்தப் படுகின்றது.

இணைய உலாவியில் சேமிக்கப்பட்ட இவைகளை பார்க்க முடியுமா?


ஆம், இவைகளை குறிப்பிட்ட இணைய உலாவியில் பார்க்க விரும்பினால் Firefox இணைய உலாவியில் about:cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக. Google Chrome இல் chrome://cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

சேமிக்கப்பட்ட இவைகள் இவைகள் நீக்கப்பட வழியுள்ளதா?


நாம் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் Ccleaner, Glary Utilities போன்ற மென்பொருள்கள் இந்த Cache Memory இல் இருக்கக் கூடிய கோப்புக்களையும் நீக்கி விடுகின்றது. எனவே நாம் இணையதளங்களுக்கு பிரவேசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக படங்கள் தரவிரக்கப்படுவதால் நமது தரவுப் பாவனையும் அதிகரிப்பதுடன் வேகமான இணைய உலாவளையும் மேற்கொள்ள முடிவதில்லை.

இவைகள் நீக்கப்படாமல் பாதுகாக்க முடியுமா?


எனவே நீங்கள் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் மென்பொருள்களில் Browser Cache Memory இனை தவிர்த்து ஏனையவைகளை மாத்திரம் நீக்கும் படி அமைத்திடலாம்.


Ccleaner மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

Browser Cache on ccleaner

  • நீங்கள் Ccleaner மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து Cleaner என்பதனை சுட்டி தரப்பட்டிருக்கும் இணைய உலாவிகளுக்குக் கீழே இருக்கும் Internet Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை மாத்திரம் நீக்கி விடுக.
  • அவ்வளவு தான். இனி உங்கள் Browser Cache Memory இல் உள்ள படங்கள் நீக்கப்படாது எனவே வேகமான இணைய அனுபவத்தினை பெற முடியும்.

Glary Utilities மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Glary utilities

  • இதனை Glary Utilities மென்பொருளில் மேற்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட மென்பொருளின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Menu என்பதனை சுட்டி Settings செல்க பின் திறக்கப்படும் சாளரத்தில் Temporary Files Cleaner என்பதனை சுட்டுக பின் Browser என்பதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Mozilla Firefox Cache, Google Chrome Cache, Opera Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக அவ்வளவு தான்.

அவ்வாறன்றி இது போன்ற தற்காலிக கோப்புக்களை நீக்க நீங்கள் மூன்றாம் நபர் மென்பொருளை பயன்படுத்தாமல் குறிப்பிட்ட இணைய உலாவியில் தரப்பட்டிருக்கும் வசதியை பயன்படுத்துபவர் எனின் இதனை Mozilla Firefox இல் மேற்கொள்ள பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

நீங்கள் Mozilla Firefox இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Firefox

  • Firefox ====> Option சென்று Privacy எனும் Tab ஐ சுட்டுக.
  • பின் History என்பதற்குக் கீழ் You may want to clear your recent history, or remove individual cookies.  என்பதில் clear your recent history என்பதனை சுட்டுக.
  • இனி தோன்றும் சாளரத்தில் Details என்பதனை சுட்டி Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.
  • அவ்வளவுதான்.

நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

  •  இதனை Google Chrome இணைய உலாவியில் மேற்கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் customize and control google chrome என்பதனை சுட்டி Tools ====> clear Browsing Data என்பதனை அலுத்துக அல்லது Ctrl+Shift+Del விசைகளை ஒரே நேரத்தில் அலுத்துக.
  • பின் தோன்றும் சாளரத்தில் Cached images and files என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.

ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்


வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.
வாட்ஸ்அப்  forward
அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.
மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும் இதனை கீழுள்ள  இணைப்பை பயன்படுத்தி APK மிர்ரர் தளத்தில் இருந்து இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகு. இருப்பினும் இதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்வது எப்படி?

படி 1: முதலில் வாட்ஸ்அப் செயலியின் 2.16.230  எனும் பதிப்பை உங்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு தரவிறக்கிக் கொள்க.
படி 2: பின்னர் வழமைபோல் வாட்ஸ்அப் செயலியை திறந்து பலருக்கு அனுப்பவேண்டிய ஒரு செய்தியை தெரிவு செய்க.
படி 3: இனி Forward செய்வதற்கான பட்டனை அழுத்தியதன் பின்னர் ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்புவதற்கான வசதி தோன்றும்.
வாட்ஸ்அப்  forward
படி 4: பின்னர் அதன் மூலம் தேவையான நபர்களையும் குழுக்களையும் தெரிவு செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு அந்த செய்தியை அனுப்பலாம்.

அவ்வளவுதான்.
பல புதுப்புது தகவல்களை உடனுக்குடன் அறிந்திட தொடர்ந்தும் இணைந்திருங்கள் எம்முடன்.

புதன், 3 ஆகஸ்ட், 2016

Payoneer MasterCard மற்றும் $25 USD இலவசமாக பெற்றுக் கொள்வது எவ்வாறு..?



அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றைய காலத்தில் ஆன்லைன் மூலமா கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவது சின்ன விசயமாக போயிடு. கொடுக்கல் வாங்கல் செய்யும் போது நமக்கு ஆன்லைன் Account அல்லது Visa Or MasterCARD தேவைப்படும்.
இன்று எல்லா வங்கிகளும் Visa Card கொடுத்தாலும் ஆன்லைன் Activation கிடைப்பத்தில்லை அதுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் இலவசமாக MasterCARD பெற்றுக்கொள்ள Payoneer என்ற இணையதளம் வழங்குகின்றது.

அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது என்று இன்று நாம் கற்றுகொல்ல்வோம்.

முதலில் உங்களுடைய முகவரி எல்லாத்தையும் சரி செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளவாறு.

EX:
AL Mohamed Raseem
Batticaloa Road,
Alim Nager,
Mutur - 02
Potal Code: 31200 ( கட்டாயம் )
+94757680204 / +94776014112 

மேல் உள்ளது போல உக்களுடைய முகவரி எல்லாத்தையும் சரியாக எடுத்து கொண்ட பினர் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து ஒரு Application form fill Up செய்து கொள்ளுங்கள்.

Sign up




நான் Already Register பண்ணிட்டன் So என்னுடைய ஈமெயில் எடுக்காது முதலில் நீங்கள் கொடுக்கும் பொது சரியாத முகவரி மற்றும் ஈமெயில் கொடுத்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரி என்றால் நிச்சயமாக பத்து நாட்களுக்குள் உங்களுடைய Card கையில் கிடைக்கும்.

இந்த பதிவு மூலம் பயன்பெற்றால் என்னுடைய வாட்ஸ்ஆப் நம்பர் ஒரு Msg போடுங்க கட்டாயம் என்னுடைய தகவல் எந்த அளவு பயனாக உள்ளது என்று பாக்க வேண்டும்.

மேலும் தகவல் தேவை என்றால் என்னுடைய Number இருக்கு Call or Call பண்ணுங்க.


சனி, 30 ஜூலை, 2016

Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவது எப்படி…???


Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked  செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.

Android N - ஆன்ராயிடு என் 7.0 இயங்குதளத்தின் பெயர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு விடயம், பிரிஸ்மா போட்டோ செயலி. அடுத்தவர் கண்களை கவரும் வண்ணத்தில் எமது போட்டோகளை உண்மையான ஓவியம் போலவே மாற்றும் இந்த செயலி அதிகாரபூர்வமாக ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டும் வெளியாகி உள்ளது. அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களையும் கவர்ந்திருக்கும் இந்த ப்ரிஸ்மா அப்ஸ் தரும் ஓவிய எபெக்ட்-ஐ இப்போது உங்களது ஆன்ராயிடு போனிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஆன்ராயிடு ப்ரிஸ்மா செயலியை பெற்றுக்கொண்டு உங்களது போட்டோக்களையும் அழகிய ஓவியம் போல மாற்றிடுங்கள்.

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் ஒரு இயங்குதளமாக ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படுகின்றது. இன்று சந்தைக்கு அறிமுகமாகி நியாயமான விலையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆன்ராயிடு இயங்குதளத்தினுடனேயே வெளிவருவது நாம் யாவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் ஆன்ராயிடு 7.0 இயங்குதளம்.

ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிட்கான டிவிலப் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது இது குறித்தான அதிகாரபூர்வ செய்தியை கூகுள் வெளியிட்டு இருந்தது.


ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் வைரலாக பரவிய இந்த செய்தியில் கூகுள் சிறியதொரு விளையாட்டையும் சேர்த்திருந்தது. அதாவது ஆன்ராயிடு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பின் பெயர் N எழுத்தில் தான் அமையும் என்றும் உலகம் முழுதிலும் உள்ள ஆன்ராயிடு பாவனையாளர்கள் N எழுத்தில் ஆரம்பிக்கும் எந்தவொரு இனிப்பு பண்டத்தின் பெயரையும் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து உலகம் முழுதிலும் உள்ள கோடிக்கணக்கான ஆன்ராயிடு பாவனையாளர்களால் பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. அவற்றிலே ஆன்ராயிடு இயங்குதளம் 7.0-வின் புதிய பெயராக 'நாடெல்லா' எனப்படும் பெயர் வைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு 7.0 இயங்குதளத்தின் புதிய பெயரை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதாவது ஆன்ராயிடு நகட் (7.0) என்பதாகும்.


ஆன்ராயிடு நகட் இயங்குதளத்திட்கு உங்களது போனை அப்டேட்  செய்வது எப்படி?

ஆன்ராயிடு நகட்-இன் முழுமையான பதிப்பு அதிகாரபூர்வமாக இன்னும் வெளிவராத போதிலும் கூகுள் நிறுவனம் ஆன்ராயிடு நகட் இயங்குதளத்தின் டிவளப்பர் பதிப்பை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

டிவளர் பதிப்பாக வெளியிடப்பட்ட ஆன்ராயிடு என் நகட் இயங்குதளத்தை உங்களது போனுக்கு டவுன்லோடு  செய்வது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு நகட் 7.0 இயங்குதளம் பற்றிய மேலதிக செய்திகளை எமது தளத்தில் எதிர்பாருங்கள்.

Share this

மெமரி கார்டின் வகைகள்

மெமரி கார்டின் வகைகள்:

எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO

SD CARD என்பது ஒரு solid state டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.

SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.

மெமரி கார்டின் அளவுகள்: 

பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.

1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)

எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.

எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.

அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Record-able Media என்பதாகும்.

SD கார்டின் சிறப்பு;

இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.

Branded SD cards ஒருசில…
Sasmung microSD card
Sandisk Ultra microSD card
Transcend microSD card
Sandisk mobile ultra
Toshiba microSD card
Sony microSD card
Tech in தமிழ்'s photo.

சனி, 23 ஜூலை, 2016

Download Prisma App For Android ப்ரிஸ்மா ஆப்: இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்....

எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும் "ப்ரிஸ்மா" எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான செயலியாகும்.
மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.


இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம் 
முறை 1:
படி 1: ப்ரிஸ்மா இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
படி 2:  இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம்.
முறை 2: 
படி 1: முறை 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால் பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
தரவிறக்க இங்கே சுட்டுக
படி 2: நிறுவும் போது Security > Unkown sources என்பதை டிக் செய்து கொள்க.
நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் தரவிறக்க இங்கே சுட்டுக.
அவ்வளவுதான்! உங்கள் ப்ரிஸ்மா அனுபவம் எப்படி இருந்தது என்பதற்கான கருத்தை எழுதிவிட்டுச் செல்லுங்கள்!
 

Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்

பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
மெசெஞ்சர்_பலூன்
அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.



பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில் பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.


எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?

படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.
பேஸ்புக்_மெசெஞ்சர்_இமொஜி
படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.
படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!


நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



 
 

Background Image for Keyboard in Android Mobile -உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

Android ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.
ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட்
அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.


கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட  Keypad கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.
இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

  • கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.

  • பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.

  • இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


அவ்வளவுதான்! இவ்வாறு உங்கள் அன்புக்குரிய நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே!
கூகுள் இன்டிக் கீபோர்ட் ஆண்ட்ராய்டு 

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



செவ்வாய், 12 ஜூலை, 2016

நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை”

நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை”




என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டுப்பசுக்களின் சிறப்பு சொல்லி மாளாது.
இதில் நாட்டுப்பசு இன்றைய விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் அவசியம் தேவை.

நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவைகள் என்னென்ன?

இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் இது.
நாட்டுப்பசுவின் குடலில் தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் (Antibiotic) உருவாகின்றன. இவை நாட்டுப்பசு வெளிப்படுத்தும் பால், சாணி, மூத்திரம், போன்றவைகளுக்கு வலிமை தரும் மிக முக்கிய பொருட்களாகும்.
இந்த நல்ல எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டீரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன.

லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டீரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லியுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பாக்டீரியாக்களாகும்.

நாட்டுப்பசுவின் குடலில் நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு, கல்லீரல், முன் சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகளும் குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன.

அது போன்றே நாட்டுப்பசுவின் குடல்களிலும் செயல்பாடுமிக்க நுண் உயிர் குடியிருப்புகள் பல்கி பெருகி உள்ளன. அவைகள் உடலில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை.

இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும்,லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவைகளாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் உயிர் துடிப்புடன் இருக்கும். இவைகள் நம் நாட்டுப் பசுவின் குடலின் இருக்கும் தனித்தன்மையாகும்.
நீங்கள் கேலண்டர்களில் அச்சிட்டு வருகின்ற நாட்டுப் பசுவின் படங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக காணப்படும்.

உண்மையில் அவர்கள் முப்பத்து முக்கோடி முயற்சி மிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களாகும்.

நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பைரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பாக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும் பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவைகளும், சல்பரை கரைக்கும் தைஆக்ஸிடண்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும் (எங்கும் கிடைக்காத முயற்சி மிக்க நுண்ணுயிர்) டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பூஞ்சான வகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளும் உள்ளன.

நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில் ஒரு கிராம் அளவில் 300 – லிருந்து 500 கோடி வரை நன்மை தரும், முயற்சிகள் கொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன. 

நாட்டுப்பசு மாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது.

மேலும் நாட்டுப்பசுமாட்டின் பால், சாணி, மூத்திரம் போன்றவைகள் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இதில் பஞ்சகவ்யம் எனும் பஞ்ச அமிர்தங்கள் மனிதனில் அனைத்து வகையான உயிர் கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்தாக பயன்பாட்டில் உள்ளது.

இதில் பால் மூலம் பெறப்படும் தயிர், நெய் போன்றவைகள் மற்றும் பால், சாணி, மூத்திரம் என இந்த ஐந்தும் பஞ்சகவ்யம் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை:
-------------------------------------------------
பால் – 7 லிட்டர், தயிர் – 4 லிட்டர், நெய் – 1 லிட்டர், கோஜலம் (பசு மூத்திரம்) – 1 லிட்டர், கோமயம் (சாணம்) – கை கட்டை விரல் அளவு, தர்பைப் புல் ஊற வைக்கப்பட்ட நீர் – 1லிட்டர் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.

வேத சாஸ்திரங்கள் கூறியுள்ள இந்த பஞ்சகவ்ய முறையை அனைத்து தர மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சகவ்யம் செய்து ஒரு மணி நேரத்தில் குடிக்கப்படவேண்டும், வைத்து சாப்பிட நினைப்பவர்கள் பஞ்சகவ்ய கிருதம் செய்தோ, வாங்கியோ சாப்பிடலாம்.

இந்த பஞ்சகவ்யம் சாத்வீக குண நலன்களை தந்து மனிதனை தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. என்பது சான்றோர் கருத்து.

அதுபோலவே “சாமியில்லையேல் சாணியைப் பார்!” என்ற பழமொழிக்கு ஏற்ப தெய்வப்படங்கள் இல்லாத சூழ் நிலையில் பசு மாட்டுச் சாணியை பிள்ளையார் போன்று பிடித்து வைத்து வழிபாடு செய்த வழக்கம் நம் நாட்டில் உண்டு.

இத்தகைய நாட்டுப் பசு மாட்டின் சாணிக்கே இந்த பெறுமை என்றால் அந்த நாட்டுப் பசுவின் பெறுமையை இனியும் சொல்லித் தெரிய வேண்டுமா?.
ஆனால் இந்த நாட்டுப் பசு மாடு இன்று நம் மக்களிடையே குறைந்து போனதற்கு காரணம், மக்களின் அறியாமைதான் ஆகும்.

இனியும் இதுபோன்ற உண்மைகளை அறியாமல் இருந்தால் நம் நாட்டுப் பசு இனத்தை நாமே முற்றிலும் ஒழித்துவிட்டு, சீமை பசு வின் பாலை குடித்து, குடித்து பல நோய்களை சேர்த்துக் கொண்டு, (டாஸ்மாக் சரக்கு குடிப்பதினால் வரும் நோய்கள் தனி) சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளின் வியாபாரத்தில் போட்டு விட்டு பல மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் உயிருக்கு ஊசலாடும் கூட்டத்தினை பார்த்தால் ?

பார்க்க... பார்க்க...

நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கையிலே...

Posted by 
Arunprasath M

Popular Posts

Facebook

Blog Archive