பிப்ரவரி 2016 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பிப்ரவரி 2016 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2016

ChampCash – The Biggest Network To Earn Unlimited Real Money From Your Smartphone

First Download Champcash Android App – CLICK HERE.

Enter Sponsor Id – 1556069  to get 1$ sign up bonus (only if it’s not showing automatically) and press submit.

 

Hey friends this time we are back with an awesome app just like Mcent , but this app is totally different and much better app. You can earn real money with android smartphone without any investment. The best thing about this app is that you can earn unlimited money upto 7 levels. i.e – you also earn money when your referred friends do referrals. You can refer as many friends you want under your network. Please read out the whole post to know more about the app and how you can make money online from this amazing app.
champcash-logo-1024x441

How To Join ChampCash & Start Making Money Online ?

Joining Champcash Is Very Easy Task, Just Follow Each & Every Steps Mentioned Below To Join Champcash & Start Earning Unlimited Money In Your Bank Account With This Awesome Android App.
  • First Download Champcash Android App – CLICK HERE.
  • Now open the app and register with ChampCash.
  • Enter Sponsor Id – 1556069  to get 1$ sign up bonus (only if it’s not showing automatically) and press submit.
  • After successful registration, you have to complete the challenge in order to unlock the dashboard of the app and to get your refer link.
  • Install The Apps Shown to you in Challenge Using Play Store. Click install and select Google Chrome to open , you will be automatically redirected to playstore now.
  • Remember to Open Installed App For At-Least 1 Min otherwise That Install will not be counted.
  • Again Come Back on Champcash and Repeat Step 2-3 Unless You See A Screen Written : “Great“.
  • Once you complete the challenge , the dashboard of the app will be unlocked.
NOTE : In order to get your referral link and start earning real money you need to complete the challenge and unlock the dashboard.
  •  Go To Invite And Earn tab and choose Any Message from the list and share it with your friends on social media.
  •  If any of your friend downloads the app using your refer link and completes the challenge then you will see money getting credited in your profile.
  • Now You will earn from referrals of your friends too and even of their Friends too. And you will earn upto 7 levels.The more you refer friends , the more you will earn money. 1f600

Earning Tip : After getting your referral link do minimum 20 referrals or ask your 20 friends to download app from your link and to complete the challenge. Expain you friends about this app so that they also start doing referrals and you get 10% of theirs earning. It takes 35 minutes to get money credited in your champcash account after your refer friends has completed the challenge. You will definetly love this app once you start generating money without doing any task and you can earn huge amount from this app. I easily make 10$/Day from this app by just doing 10-20 referrals.

ChampCash Earnings and Payment Proof

Check out below image for my earning and Payment proof.I have attached a recharge proof of 1.92$ = Rs 120 and bank transfer of 69$ = Rs 4278.I am currently on 2nd postion in the top 10 earners list.  You can too earn hell a lot of money with this app.
1f600
ChampCash-My-Earnings-Proof-1024x906

 

RECHARGE PROOF OF CHAMPCASH

ChampCash-Recharge-Proof-1024x906

 

BANK TRANSFER PROOF OF CHAMPCASH

Champcash-Fraud-or-Genuine-Payment-Proof

ChampCash will give you money up to 7 levels commission in your Network.
Below is the Example of Earning if We have to Distribute $2 Per joining and Every Publisher will Join 10 people in his network.
earning_chart-1024x630

Benefits of Joining Champcash

  • Earn Millions by just installing some apps.
  • Redeem Your Earned Money Via Paypal,Mobile Recharge and E-Gift Cards E-Gift cards of Amazon,Flipkart,etc.
  • You can do Mobile recharge of any Country.
  • 100% Free to use without any investment.

Video To Learn How To Make Money From ChampCash

I am marketing Head of Champcash . Champcash is a real business where no Shortcut will work. Payout Totally depends on Live rate which is in Dashboard. You will get direct 50% on direct referral and so on upto 7 levels.
Please Follow following Steps While Completing Challenge to Get Maximum Payout :
1. It is must to Open Installed App for 1 Min.(as Your friend to Must open for 1 min. one by one.)
2. Don’t Do multiple Joining from same Wifi or Hotspot (duplicate IP address issue)
3. If App Already exist then We wont pay for that app even you uninstalled it. Remember To take Maximum Payout.
4. And Guys The Main Reason Specially For you Techno Guys , Please don’t Use any shortcut with us. Clearly you wont get payout. Just Complete the Challenge on Real Devices Manually.
I am Sure If You follow these steps then You will get Full payout.

I am making some good amount of money daily with this awesome app. According to me this is the best app till date to earn money online using your android smartphone. I ♥ this app. Do comment below if you have any problem in using or downloading the app and also share this post with your friends using below social sharing buttons.

 First Download Champcash Android App – CLICK HERE.

Enter Sponsor Id – 1556069  to get 1$ sign up bonus (only if it’s not showing automatically) and press submit.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?

கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)

நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )

சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.

சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…

அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….

————-

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!

– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?

– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?

– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?

– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –

– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?

– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?

– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –

-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?

– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?

– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?

– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?

– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –

– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?

– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?

– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –

சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?

உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?

– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம்  விட்டுக் கொடுப்போம்…!!!

சனி, 6 பிப்ரவரி, 2016

வாட்ஸ் குரூப்பில் புதிய வசதி : உறுப்பினர்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரிப்பு

இலவச கால்கள் செய்ய, மெசேஜ் அனுப்ப என எல்லா வகையிலும் முதன்மையான இருக்கும் வாட்சப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

வாட்சப்பில் புதிய வசதி

இதில் உள்ள குரூப் வசதியை பயன்படுத்தி, நண்பர்கள் ஒரு குழுமத்தை அமைத்து, ஏராளமான தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த வகையில் வாட்சப் குரூப்பில் உறுப்பினர்களின் அதிகபட்சமாக 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வாட்சப் குரூப்பில் 50 பேர்தான் இருக்க முடியும். பிறகு அது 100 ஆக உயர்த்தப்பட்டது. தற்பொழுது அதிகபட்சமாக 225 உறுப்பினர்கள் இருக்கும்படி உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு போன் உள்ளவர்கள் மட்டுமே இப்புதிய வாட்ஸ்அப் வசதியை பெற முடியும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

Hike Messanger History..

உலக அளவில் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 100 கோடியைத்தாண்டி விட்டதாக நேற்று அறிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
2010 ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட வாட்ஸ் அப், இன்றைய ஆன்ட்ராய்ட் உலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. இப்படி இன்றைக்கு நாம் இணையத்தில் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எல்லாமே வெளிநாட்டு நிறுவனங்களே. இந்தியாவின் மிகப்பெரிய இணைய சந்தையை இந்த நிறுவனங்களே இதுவரைக்கும் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது முதல்முறையாக ‘மேட் இன் இந்தியா’ என்னும் பெருமையோடு வெற்றி பெற்றிருக்கிறது ஹைக் நிறுவனம். 2012 ல் தொடங்கப்பட்ட ஹைக்கின் பயனாளர்கள் எண்ணிக்கை சமீபத்தில் 10 கோடியைத் தாண்டி விட்டது. வாட்ஸ் அப் போலவே இளைஞர்களிடம், தற்போது மிகவும் பிரபலமாகி வரும், இந்த ஹைக்கின் நிறுவனர் 27 வயதே ஆன, கவின் பார்தி மிட்டல்.

யார் இந்த கவின்?....🍃

இந்தியாவின் புகழ்பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டலின் மகன்தான் இந்த கவின் மிட்டல்.
தனது தந்தையிடம் இருந்து, 20,000 ரூபாயை மட்டும், முதலீடாக வாங்கிக்கொண்டு போய் தொழில் தொடங்கிய சுனில் மிட்டல் நிறுவியதுதான் தற்போதைய ஏர்டெல் நிறுவனம்.
அவரைப்போலவே கவினுக்கும் சுயதொழிலில்தான் ஆர்வம். 2009 ல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் மின்னியல் பிரிவில் உயர் படிப்பை முடித்த கவின், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்தியாவிற்கு திரும்பினார்.
முதலில் 2009 ல் திரைப்படங்களுக்கு மொபைலில் புக் செய்ய , ஆப்பிள் ஸ்டோரில் ‘ஆப்ஸ்பார்க்’ என்னும் அப்ளிகேஷனை உருவாக்கினார். அந்த அப்ளிகேஷனுக்கு கிடைத்த வரவேற்பு, உற்சாகம் தர அடுத்த முயற்சியாக தொடங்கியதுதான்

ஹைக் மெசெஞ்சர்.
எப்படித் தோன்றியது....🍃

இந்த ஹைக் ?
2010 ல் வெளியான வாட்ஸ் அப், இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் பிரபலமாகிக் கொண்டிருந்தது.  விசாட், ஃபேஸ்புக் மெசெஞ்சர், வாட்ஸ் அப், லைன் என அடுத்தடுத்து மெசேஜிங் அப்ளிகேஷன்கள் பெரும் வெற்றியடைந்து கொண்டிருந்தது. மொபைல் இன்டர்நெட் வளர்ந்துகொண்டிருந்த அந்த நேரத்தில், இந்தியாவுக்கென பிரத்யேகமாக ஒரு மெசேஜிங் அப்ளிகேஷன் வேண்டுமே? என யோசித்ததில் உருவானதுதான் ஹைக்.
2012 டிசம்பர் 12 ல் முதன்முதலில் ஹைக் வெளியானது. இதற்கான முதலீடுகளை ஏர்டெல் மற்றும் ஜப்பானிய தொலைத் தொடர்பு நிறுவனமான சாஃட் பேங்க் ஆகிய இருவரிடம் இருந்து பெற்றார். ஆரம்பத்தில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தாலும், அந்த அளவு வெற்றிபெற்று விடவில்லை ஹைக். இரண்டு வருடத்தில் 35 மில்லியன் பயனாளர்கள் மட்டுமே கிடைத்தார்கள்.
ஆனால் அதற்குள்ளாக வாட்ஸ் அப் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி, வலுவாக காலூன்றிவிட்டது. வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மாற்றாக உருவாவது கடினம். அதே சமயம் வாட்ஸ் அப் இருக்கும் ஒரே மொபைலில் ஹைக்கையும் இன்ஸ்டால் செய்ய வைப்பது எளிது என முடிவு செய்தார் கவின். இந்தியாவின் நிறுவனம் எனப் பெருமையாக சொல்லிக்கொள்வது போல, இந்தியாவின் நேட்டிவிட்டிக்கு ஏற்ப, தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என வழக்கமான பாதையை மாற்றினார்.
ஸ்டிக்கருக்கு இவர்தான் முன்னோடி
ஹைக் பயனாளர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் கூப்பன்கள், இந்திய மொழிகளில் 9 மொழிகளை பயன்படுத்தும் வசதி, 100 MB வரை எல்லா வகையான கோப்புகளையும் பரிமாறிக்கொள்ளும் வசதி, லைவ் ஸ்கோர் பார்க்கும் வசதி, செய்திகள் பார்ப்பது என அடுத்தடுத்து அப்டேட் ஆக, பயனாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.
வாட்ஸ்அப்பில் எப்படி எமோஜிக்கள் ஹிட் அடித்ததோ, அதைப்போலவே ஹைக்கிற்கு சூப்பர்ஹிட் ஸ்டிக்கர்கள். இதுவரைக்கும் சிரிப்பது, அழுவது என ஸ்மைலி போட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் இந்த ஸ்டிக்கர்கள்,  ஹைக் பக்கம் ஈர்த்தன. கோலிவுட், பாலிவுட் பன்ச் டயலாக்குகள், வடிவேலு, சந்தானம் போன்றவர்களின் ரியாக்ஷன்கள் , ஆஹான் போன்ற ட்ரெண்டியான வசனங்கள் என அதகளம் செய்தது ஹைக். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்த தற்போது 100 மில்லியன் என்ற மைல்கல்லைத் தொட்டிருக்கிறது ஹைக்.
“ஐபோன் முதன்முதலில் வெளிவந்த சமயம் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. போன் வாங்கியவுடன் நண்பர்கள் பலரும் ‘Movies Now’செயலியை பதிவிறக்கம் செய்தார்கள். லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பயன்படுத்தினர். அப்போதுதான் இது போன்ற அப்ளிகேஷன்கள் வளர்ந்துவந்தன.
அவை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்த்தேன். மொபைல்
இன்டர்நெட் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என நம்பினேன். அப்போதே ஹைக்கை உருவாக்க சிந்தனை வந்துவிட்டது. சுயதொழில் தொடங்க நிறையபேர், நிறைய யோசனைகளோடு வருகிறார்கள்.ஆனால் சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். அதற்கு காரணம் விடாமுயற்சி இல்லாததுதான்.
ஹைக் நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் முதலீடு திரட்ட நிறைய சிரமப்பட்டேன். நிறுவனத்தை மூடிவிடலாமா என்று கூட யோசித்தேன். ஹைக்கில் முதலீடு செய்யவே பலரும் தயங்கினர். ஆனால் அதையெல்லாம் தாண்டிதான் தொழிலதிபராக ஆக முடியும்.
அப்படித்தான் நான் கடந்து வந்தேன். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் வளர்ச்சியையும் ,கற்றுகொள்ளும் திறமையையும் பொறுத்தது. எனவே என்னை தினமும் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன்.
ஹைக்கிற்கு போட்டியாக நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவை எப்படி செயல்படுகிறது என்பதைப்பொறுத்தே எங்கள் வளர்ச்சி இருக்கிறது. இந்தியா போன்ற தனித்துவமான நாட்டிற்காக நாங்கள், புதிய விஷயங்களை ஹைக்கில் சேர்க்கிறோம். தற்போது ஹைக் பயன்படுத்துபவர்களில் 90 % பேர் 25 வயதுக்கும் குறைவானவர்களே ! இந்தியாவில் பல கோடி பேர், இணையத்திற்கு முதன்முறையாக வருகின்றனர். அவர்கள் இன்னும் 2G வசதிதான் பயன்படுத்துகின்றனர். மெமரி குறைவான ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். இப்படி எல்லா தரப்பையும் மனதில் வைத்தே நாங்கள் ஹைக்கை வடிவமைக்கிறோம்.
என்னைப்பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே இரண்டு மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். முதலாவது எளிமையாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் செயலியாக இருக்கும். அது வாட்ஸ்அப். இரண்டாவது மேம்பட்ட வசதிகளுடன் கூடிய, முழுமையான தகவல்தொடர்பு செயலியாக இருக்கும். அது ஹைக்” என்கிறார் கவின்.
இந்திய சந்தைக்கு என எடுத்துக் கொண்டால், ஹைக்கிற்கு பலம், பலவீனம் இரண்டுமே வாட்ஸ் அப்தான். மிகப்பெரிய நிறுவனமாக இருப்பதால், நிறைய முதலீடுகள், வருங்கால திட்டங்கள் வாட்ஸ் அப் வசம் இருப்பது பலவீனம். ஒரே ஒரு புதிய எமோஜியை தனியாக சேர்க்க வேண்டுமென்றாலோ, நீக்க வேண்டுமென்றாலோ கூட, அதை வாட்ஸ் அப் உலக அளவில் மாற்ற வேண்டும். ஆனால் இந்தியாவின் நாடித் துடிப்பிற்கு ஏற்ப மாற்றங்களை செய்துகொண்டே இருக்க ஹைக்கினால் முடியும் என்பது பலம்.
கவினின் கனவுகள் நனவாகட்டும் !

.🍃Arun

Popular Posts

Facebook

Blog Archive