அடைகோழிகளை நோய்களிடமிருந்து பாதுகாக்க இதை செய்து பாருங்கள் !!
அடைக்காக்கும் கோழி மற்றும் இளம் குஞ்சுகள் பராமரிப்பு !!
நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும், குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம்.
அடைக்காக்கும் கோழி பராமரிப்பு :
சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது.
ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.
அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான ஈர மணல் மீது வைப்பதால் பொரிக்கும் தன்மை அதிகரித்து, பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்காமல் இருக்கும்.
அடையில் உட்காரும் கோழி தான் விரும்பிய பொழுது எழுந்து வெளியில் சென்று வருமாறு இருக்க வேண்டும். மூடி வைக்கும் நிலையில் இருக்குமானால், அதை 1 நாட்களுக்கு ஒரு முறை திறந்துவிட வேண்டும்.
அடையில் இருந்து வெளியே வந்த கோழிகள் உடனடியாக குடிக்கும் வகையில் தண்ணீரை தயாராக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
காய்ந்த மிளகாய்கள் இரண்டினை முட்டைகள் அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுண்ணிகள் கோழிகளை தாக்காது.
21-வது நாள் குஞ்சுகள் அனைத்தும் பொரித்து விடும். 21 நாட்களில் முட்டைகள் அனைத்தும் பொரிக்கவில்லை எனில், அதே கோழியை மறுபடியும் வேறு முட்டைகள் மீது உட்கார வைக்ககூடாது.
ஏனெனில் அடைக்காக்கும் கோழிகள் சரியாக உண்ணாது. எனவே தொடர்ந்து முட்டைகள் மீது உட்கார வைப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழி இறக்க வாய்ப்பு உள்ளது.
கோழிகள் அடையில் இருக்கும் போது பெரும்பாலும் நோய்கள் அவற்றை தாக்காது. ஏனெனில் எந்த நோய்களும் முதலில் வலுவான கோழிகளை மட்டுமே தாக்கும்.
இளம்குஞ்சுகள் பராமரிப்பு :
பொரித்த குஞ்சுகளுக்கு தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து வைக்கலாம். கம்பு போன்ற சிறு தானியங்களை உணவாக தர வேண்டும்.
நாட்டு கோழி குஞ்சுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றிருந்தாலும் கண்டிப்பாக தடுப்பு+சி கொடுக்க வேண்டும்.
குஞ்சுகள் பொரித்த பதினைந்தாவது நாள் ராணிக்கட் அதாவது, வெள்ளை கழிச்சல் தடுப்பு+சி போன்றவை போடுவதன் மூலம் குஞ்சுகள் இறப்பதை முற்றிலும் தவிர்க்க முடியும்.
குஞ்சு பிறந்த இருபது நாட்கள் கழித்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
பிறந்த குஞ்சுகளுக்கு சிறிது வேப்பிலை, துளசி, தும்பை இலை மற்றும் சிறிது பிரண்டையை சேர்த்து அரைத்து, அரைலிட்டர் தண்ணீரில் கலந்து, அதை இரண்டு நாட்கள் ஒரு முறை கொடுப்பதன் மூலம் பல வியாதிகளை தடுக்கலாம். இது குடற்புழு நீக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
இளம் குஞ்சுகளுக்கு மீன் அமிலம் தண்ணீரில் கலந்து கொடுப்பதன் மூலம் வேகமான வளர்ச்சி கிடைக்கும்.
அதேபோன்று கரையான்களை இளம் குஞ்சுகள் சாப்பிடுவதால், விரைவில் இறக்கை முளைத்து அதிவேக வளர்ச்சிபெறும்.
இதுபோன்ற மேலும் பயனுள்ள விவசாயத் தகவல்களை இலவசமாக பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்!
https://goo.gl/9AZRL7
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Awareness.Tamil Awareness, info, Tamil Awareness, Tamil Awareness News, Tamil health tips, Tamil News