ஜூலை 2018 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஜூலை 2018 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 27 ஜூலை, 2018

*Ⓜ📗📗1முதல்12வரையிலும் பாடப்புத்தகங்கள்..தேடி எடுத்து கொள்ளலாம்…!*

🌐🌐🌐🌐🌐🌐

*Ⓜ📗📗1முதல்12வரையிலும் பாடப்புத்தகங்கள்..தேடி எடுத்து கொள்ளலாம்…!*

http://www.textbooksonline.tn.nic.in/Std1.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std2.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std3.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std4.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std5.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std6.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std7.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std8.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std9.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std11.htm

http://www.textbooksonline.tn.nic.in/Std12.htm

📗📗📗📗📗📗📗📗

சனி, 21 ஜூலை, 2018

1டிஎம்சி(TMC) தண்ணீர் என்றால் என்ன?

#1டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன?

ஒரு நிமிடம் இதை படித்து பாருங்கள்.

செய்தியை சரியாக சொல்லுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்த செய்தி சாமான்யனுக்கும் புரியும் அளவில் இருக்கவேண்டும் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும்..

காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம்.

தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது

கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்போம்.

மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்துதான் நேரடியாக கிடைக்கிறது.. ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை.. அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து திருமுக்கூடலு நர்சிபூர் என்ற கோவில் நகரத்தில் காவிரியுடன் கலந்துவிடுகிறது. பின்னர் அப்படியே ஒகேனெக்கலுக்கும் வந்து சேரும்..

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் பிரதான இன்னொரு அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ்.. இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து திருமுக்கூடலு நர்சிபூரில் கபினி தண்ணீரை ஸ்வீகரித்துக்கொண்டு முழுமையான காவிரியாக வலுப்பெற்று ஒகேனெக்கலுக்கு வரும்.

காவிரி என்றால் ஹேமாவதி, ஹாரங்கி என்று மேலும் இரண்டு அணைகள் பெயர் அடிபடுமே அவைகள் எங்கே? இந்த இரு அணைகளும் நிரம்பி அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும்.

கபினியிலிருந்து நேராகவும் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் மூலமாகவும் தமிழகத்திற்கு காவிரியில் கிடைக்கிறது..

காவிரியின் நான்கு அணைகளை திறக்காமல் கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் தேக்கிவைக்க முடியும்? கபினி அணை 15.67 டிஎம்சி.. ஹேமாவதி 35.76 டிஎம்சி ஹேரங்கி அணை 8.07 டிஎம்சி. கிருஷ்ண ராஜசாகர் அணை 45.05. என மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கலாம்.

தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டிஎம்சி என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும்..

ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எந்த அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன்.

இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று?

அடுத்து அணைகளின் கொள்ளளவை பார்ப்போம்.. ‘’ஒரே நாளில் ஐந்தடி உயர்ந்தது.. பத்து அடி உயர்ந்தது.. 80 அடியை தாண்டியது… 100 அடியை தொடப்போகிறது.. என்றெல்லாம் டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூசை அடிப்பார்கள். ஆழ்ந்து யோசித்தால் இந்த அடி கணக்கால் ஒரு பிரயோஜனமும் கிடையாது..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி. தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி. மேட்டூர் அணையின் உயரமோ 120 அடி. ஆனால் கொள்ளளவு 93.4 டிஎம்சி.. அதாவது மேட்டூரில் இரண்டு கேஆர்எஸ்சை வைத்துவிடலாம்.. மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாசர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம திருவண்ணாமலை சாத்தனூர் அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க, இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது என்று அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பத்தில் முழு அர்த்தம் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம். அதில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி.. 75 அடியை தொட்டால் 37 டிஎம்சி.. 100 அடி..100 அடி என்று சொல்வார்களே அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்.. ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும். அதாவது மேட்டூர் அணை 100 லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணை அளவுக்கு தண்ணீர் தேவை.

அப்படியென்றால் முல்லைப்பெரியாறு வைகை, கிருஷ்ணகிரி போன்ற அணைகளில் இத்தனை அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது..உயர்ந்துகொண்டே இருக்கிறது என்று அடிக்கணக்கை மட்டும் வைத்து தகவலைச்சொன்னால் அங்கே பரபரப்பை தவிர என்ன இருக்கப்போகிறது. என்னதான் புரிந்துவிடப்போகிறது?

அணை தொடர்பான செய்தி என்றால் பாமரர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாக இருக்கவேண்டும். எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது என்பதோடு, அணையின் கொள்ளளவில் எவ்வளவு நீர்,  எத்தனை சதவீதம் நீர் இருக்கிறது என்று சொன்னால் சுபலத்தில் புரிந்துவிடும்..

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடியை தொட்டுவிட்டது. நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57சதவீதம்.. அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120 அடியில் 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு.. 100 அடியை தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை..

ஞாயிறு, 15 ஜூலை, 2018

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

வெள்ளி, 13 ஜூலை, 2018

தமிழ்மொழியின் சிறப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!

தமிழ்மொழியின் சிறப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) - தமிழின் தனிப்பெருந்தன்மை 🌿 இயல்பாகத் தோன்றிய தமிழ்மொழியின் உயரிய பண்புகள், தன்மைகள் பற்றி ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். தொன்மை 🌿 உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. 🌿 அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் கூறுகிறது. ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். மென்மை 🌿 தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகின்றது. 🌿 தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாக அதனைக் கற்கவும் பேசவும் இயலுகின்றது. 🌿 எக்காலத்தும் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை எல்லாம் தெரிவிக்கத்தக்க சொற்களைக் கொண்டதாகத் தமிழ்மொழி விளங்குகிறது. தாய்மை 🌿 பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில்நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன. தமிழ்ச்சொல் இல்லாத உலகப் பெருமொழி யாதொன்றும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தூய்மை 🌿 தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நு}ல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் மறைந்து போயின. எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்பப் புதுச் சொற்களைப் புனைந்தும் பிறமொழித் துணையின்றித் தமிழால் தனித்து இயங்க இயலும். 🌿 தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல். செம்மை 🌿 மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களுக்குத் திருந்திய வடிவும் இன்றியமையாதன. இவற்றைத் தமிழில் உள்ளதுபோல், வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், செந்தமிழ் எனப்பட்டது. மும்மை 🌿 முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிNழாடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நு}ல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன. இலக்கண நிறைவு 🌿 எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது. நு}ல் சிறப்பு 🌿 ஆயிரக்கணக்கான தமிழ் நு}ல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தனவற்றுள் சங்ககால நு}ல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன. 🌿 இத்தகைய விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நு}ல்களையும் கொண்டது தமிழ்மொழி. அத்தகைய உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை உணர்ந்து கற்றுப் போற்றிக் காப்போம். ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(TET Exam) வினா - விடைகள், பாடத்திட்டங்கள், பள்ளி புத்தகங்கள், வருடாந்திர வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நித்ராவின் TET செயலியை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். http://bit.ly/2IZoRml

புதன், 4 ஜூலை, 2018

*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்*

*நான் படித்த சில செய்திகளை உங்களுக்கு தருகின்றேன். இதை நாம் அனைவரும் படித்தால் மிகவும் நல்லது.*

1. 2000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தப்பட்ட சங்க இலக்கியங்களை படிக்கும் போது தமிழ் மக்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் யார் என்றால்

1. துடியன்
2. பாணன்
3. பறையன்
4. கடம்பன்

இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்று புறநானூறு 335 தெளிவாகக் கூறுகின்றது.

இது தவிற வேறு எந்த சாதி பெயரும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. *தமிழ் மக்கள் அனைவரும் இந்த நான்கிற்குள் அடங்குவர்.*

2. உலக பிரசித்தம் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் தலைமை குருவாக இருந்தவர் நந்தனார் என்பவர். இவர் ஒரு பறையர் குடியை சார்ந்தவர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவரை ஆரியர்கள் உயிருடன் எரித்துவிட்டு சிதம்பரம் கோயிலை கைப்பற்றினார்.

3. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பறையர் குடியை சேர்ந்தவர்.*(ஐரோப்பியர்களின் ஆட்சியில் தமிழக அரசு இத்தகவலை வெளியிட்டது. ஆண்டு 1905. வெளியிட்டவர் W.பிரான்சிஸ் - Civil Service)*

மேற்கண்ட தகவலின்படி பறையர்கள் என்பவர்கள் கீழ்சாதி என்று எப்போதுமே கண்டதில்லை. தமிழகத்தில் கீழ் சாதியென்றும் மேல் சாதியென்றும் ஒருவரும் இருந்ததில்லை.

அப்படியிருக்க எப்படி ஒரு கூட்டம் மேல் சாதியென்றும் மற்றொரு கூட்டம் கீழ் சாதியென்றும் ஆனாது என்னும் கேள்வி எழும்புகின்றது.

*சாதி தோன்றிய வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்ப்போம்* 


கி.பி.900 பின் ஆரியர்கள் தமிழகத்திற்குள் படையெடுத்து வந்து தமிழகத்தை வென்றனர். இப்படி படையெடுத்து வந்தவர்களை ஒரு கூட்ட மக்கள் அண்டி பிழைத்தனர். ஒரு கூட்ட மக்கள் அமைதி காத்தனர். ஒரு கூட்ட மக்கள் எதிர்த்தனர். ஒரு கூட்ட மக்கள் மலைகளுக்கு ஓடி சென்றனர்.

1. யாரெல்லாம் அண்டி பிழைத்தனரோ அவர்களுக்கு சகல செல்வாக்கு வழங்கப்பட்டது. அவர்கள்தான் இன்றைய உயர்சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

2. யாரெல்லாம் அமைதி காத்தனரோ அவர்கள்தான் இன்றைய இடைசாதி என்று அழைக்கப்படுகின்றனர்.

3. யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களது நிலங்கள் மற்றும் உடைமைகள் பிடுங்கப்பட்டு ஊருக்கு புறம்பே தள்ளப்பட்டனர். அவர்கள்தான் இன்றைய கீழ்சாதி என்று அழைக்கப்படுகின்றவர்கள்.

4. யாரெல்லாம் பயந்து மலைகளுக்கும் காடுகளுக்கும் ஓடினார்களோ அவர்கள் மலைசாதி ஆயினர். (இத்தகவலை சொன்னவர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்)

*சாதிப்பிரிவு இப்படிதான் இந்தியாவிற்குள் வந்தது. எதிர்த்தவன் கீழ்சாதியானான். அண்டி பிழைத்தவர்கள் உயர்சாதியானார்கள்.*

கால்ட்வெல் ஐயா அவர்கள் கூறுவது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

செவ்வாய், 3 ஜூலை, 2018

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...

தமிழர்களின் கண்டுபிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...

தினசரி காலண்டரில் " கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன். அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?.

சிலர் காலண்டரின் பின் பக்கம் என்றைக்கெல்லாம் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும் போதெல்லாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் .

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல.

உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழை கணிப்பு முறை.

அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது.

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்ற படுகிறது

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.

அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது.

இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டு கொள்ளலாம்.

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

அதாவது

மழை கரு கொள்ளும் நாள் அல்லது மேகம் சூல் ஆகும் நாள்.

இதனை பெண்ணின் பத்து மாத கர்ப்ப காலத்துடன் ஒப்பிடுங்கள்.மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழை பொழிவு அளவும் முறையாக இருக்கும்.

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது.

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம் எல்லாம் தெரியாது இல்லையா??.

எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.

எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கன மழை பெய்து சூறைக் காற்று வீசினாலோ கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்து விட்டது என்று பொருள்.

எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்கும் என அர்த்தம்.

இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவ நிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது.

இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்.

சூரியன்  வடக்கு நோக்கி நகர்வதற்கு.முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இதுதான் கர்ப்போட்டம் சங்க கால நூலில் உள்ளது..இந்த காலத்தில் எத்தனை மிமீ மழை எங்கே, எவ்வளவு பதிவு ஆகிறதோ.அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும். உதாரணம் 5மிமீ × 180=900 மிமீ சராசரியாக பெய்யும்..அதற்கு தகுந்தால் போல் நீர் மேலாண்மை செய்வார்கள்.
பயிரை தேர்வு செய்வார்கள்.

நாம் இது பற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல நம் பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழை வரும் நாட்களை தெரிந்து கொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்கிறோம்.

புதுமையின் மோகத்தில் எத்துணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!.

ஆராய்ந்து உன் முன்னோரின் யுத்திகளை கையாழு என் தமிழா.

இது போன்ற நுணுக்கங்கங்களை விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டிய நம் தமிழக அரசுக்கு.

இங்கு மெத்த படித்த அறிவியலுக்குதானே அரசு வேலையே !!.

இனியாவது கர்ப ஓட்டத்தை காண்போம்.

காவேரி புஷ்ர விழாவை அடுத்து இந்த மழை 144 ஆண்டுகளுக்கு பிறகு வரப் போகும் தாமிரபரணி புஷ்கர மழை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆற்றின் மகிமையை போற்றும் தாமிரபரணி புஷ்கர விழாவில் அவசியம் நாம் சந்திப்போம்...நீராடுவோம்.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

தமிழகம் சிறக்க தீரா தாகத்துடன் உங்கள்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

பகிர்வது நம் கடமை.

Popular Posts

Facebook

Blog Archive