திங்கள், 30 டிசம்பர், 2019
சனி, 14 டிசம்பர், 2019
🤔🤔*மீண்டும் #காங்கிரஸ்_கட்சி_ஆட்சி ஏன் வேண்டும்???.. துல்லியமான விபரம்*
Author: Infomas | டிசம்பர் 14, 2019 |
செவ்வாய், 3 டிசம்பர், 2019
சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ?
Author: Infomas | டிசம்பர் 03, 2019 |
ஞாயிறு, 1 டிசம்பர், 2019
நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது..?" ங்கிறது ஒருத்தங்க கேட்ட கேள்வி...
Author: Infomas | டிசம்பர் 01, 2019 |
வெள்ளி, 29 நவம்பர், 2019
அதிர்ச்சியான_தகவல்-என்ன இது #அஸ்பர்டேம்?என்ன இது #அசேசல்பேம்_பொட்டாசியம்?
Author: Infomas | நவம்பர் 29, 2019 |
வெள்ளி, 22 நவம்பர், 2019
தேர்தல் ஆணையம் யார் கையில் ?
Author: Infomas | நவம்பர் 22, 2019 |
திங்கள், 18 நவம்பர், 2019
நீங்கள் 10அடிக்கு 10 அடிஅறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா?
Author: Infomas | நவம்பர் 18, 2019 |
ஞாயிறு, 17 நவம்பர், 2019
NEET மோசடி - தமிழ்நாடு
Author: Infomas | நவம்பர் 17, 2019 |
5 ஆண்டுளுக்கு ஒரு மருத்துவருக்கு செலவிடப்படும் தொகை ரூ.1.24 கோடிகள்
மாநில அரசின் மொத்த மருத்துவ இடங்கள்:
3,698
இத்தனை மருத்துவர்களை உருவாக்க 5 ஆண்டுகளுக்கான செலவு : 4,920.32 கோடிகள்
அதாவது, ஆண்டொன்றிற்கு சுமார் 984 கோடிகள் நமது வரிப்பணத்தில் இருந்து மருத்துவப் படிப்பிற்காக செலவிடப்படுகிறது.
தற்போது NEET கொண்டு வந்து தமிழக மாணவர்களின் இடங்களை வெளிமாநில & வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவதால்,
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் சுமார் 984 கோடிகள் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படாமல் ஆண்டுதோறும் தாரைவார்க்கப்படுகிறது.
என்ன மக்கா புரிஞ்சுச்சா!!!!
நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்
Author: Infomas | நவம்பர் 17, 2019 |
நடைபயிற்சி என்றால் என்ன?
🚶 நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.
🚶 நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.
மெதுவாக நடப்பது :
🚶 எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.
🚶 இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.
🚶 உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
🚶 உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.
பவர் வாக்கிங் :
🚶 கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.
🚶 இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.
🚶 தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.
🚶 இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.
ஜாகிங் :
🚶 நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.
🚶 அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.
🚶 அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
🚶 தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.
🚶 இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.
நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் :
🚶 சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
🚶 இரத்த ஓட்டம் சீரடையும்.
🚶 நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
🚶 நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
🚶 அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.
🚶 நரம்புகளை உறுதியாக்குகிறது.
🚶 எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.
🚶 எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
🚶 உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
🚶 கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.
🚶 மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
🚶 உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.
🚶 நன்கு தூங்கிட உதவுகிறது.
🚶 கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் - Tirupathur District
Author: Infomas | நவம்பர் 17, 2019 |
சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.
#திருப்பத்தூர்மாவட்டம்.
ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும் ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.
ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.
உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள் ஊர் (நாட்றம்பள்ளி காமராஜ்) தான்.
உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.
500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.
பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.
நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.
முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.
கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.
தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.
ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ் எங்க ஊரு வாணியம்பாடிதான்.
நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க ஆம்பூர்தான்.
குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.
ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.
திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.
டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.
சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.
முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்
உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.
1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்) எங்கள் ஆம்பூர்தான்.
உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.
தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.
தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.
பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.
அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.
**அருண்பிரசாத்**
வெள்ளி, 8 நவம்பர், 2019
#கர்மா_வலியது....
Author: Infomas | நவம்பர் 08, 2019 |
ஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..?????
Author: Infomas | நவம்பர் 08, 2019 |
ஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..?????
உங்கள் வீட்டில் மனக்க மனக்க சமையல் தயாராகிகொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றி சுற்றி ஏன் வருகிறது?????
வீட்டிற்க்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..????
சாலையோர கடையிலோ தள்ளு வண்டிகடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லை தவிற வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..????
#குறிஞ்சி , #முல்லை என நகர்ந்து #மருதநிலத்திற்க்கு மனிதகுலம் இடம்பெயருகிறது.மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்குகி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்திசெய்கிறது.
குகையில் வாழ்ந்து பழகியவன் வீடுகட்டி வாழ பழகுகிறான்.சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது.காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை,அறிவியல்,குற்ற வழர்ச்சியில் உச்சத்தை எட்டிவிட்டான்.
“#நாய்களுக்கும்_இதற்க்கும்_என்ன_சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
சொல்கிறேன்….
ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும்போதும் அவன் மட்டும் வரவில்லை.தனக்கு பயன்படகூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகலான #ஆடு,#மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.
அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.
மனிதன் social animal ( சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது.
உங்களோடு அதற்கு பேச மட்டும் தான்தெரியாது. உங்கள் மொழியை புரிந்து கொள்ளும்,.நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ளும்,.உங்கள் நண்பர் யார் பகைவர் யார் என தெரியும்,....
உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்ட தெரியும்.உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சினுங்கத்தெரியும்.
உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பி தாக்காமல் விளையாட்டு காட்ட தெரியும்.உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டுவாங்கியிருக்கும் ஆனால் அவள் திருமணமாகி சென்றுவிட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.
வெளியூருக்கு போய் வந்த நம் அப்பா வை பார்ததும் முன்னங்கால்களை தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும்.வாலை ஆட்டிக்கொண்டு மளிகை கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும்.
உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?..ஒரு கை பார்த்துவிடும்.இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.
ஆயிரம் வெளிநாட்டு நாய்கள் இருப்பினும் நம்
#நாட்டுநாய்களுக்கு இடாகுமா???
கண்ணீருடன் எல்லா தாயுக்கும் சமர்ப்பனம்....
Author: Infomas | நவம்பர் 08, 2019 |
ஞாயிறு, 3 நவம்பர், 2019
பார்த்தீனியா..வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்டமிட்டே கலந்து விடபட்டவிஷ விதை..
Author: Infomas | நவம்பர் 03, 2019 |
சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய் கறிகளை பற்றி பார்ப்போம்.
Author: Infomas | நவம்பர் 03, 2019 |
திங்கள், 28 அக்டோபர், 2019
யார்_கண்டுபிடித்தது_மூன்று_வேளை_நேரத்துக்கு_சாப்பிடணும்_என்று.????
Author: Infomas | அக்டோபர் 28, 2019 |
வியாழன், 10 அக்டோபர், 2019
கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...
Author: Infomas | அக்டோபர் 10, 2019 |
"A Lot Can Happen Over A Cup Of Coffee"...
2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்..
இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்..
" ... இதெல்லாம் பந்தா.. எவன் அப்பன் வீட்டு சொத்து ... வேஸ்ட்... மேலேர்ந்து அழைப்பு வந்தா போயிடணும்...."
இது தான் நிதர்சனம்.. ரஜினி பட டயலாக் களில் எனக்கு மிகவும் பிடித்தது .
விழிப்பது போலும் பிறப்பு.
மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.
ஒரே செக்குக்கு ரெண்டு இடத்தில் ஃபைன் GST- கொடுமை
Author: Infomas | அக்டோபர் 10, 2019 |
#இன்று உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...
அப்படி என்ன பிரச்னை...?"
300 ரூபாயே பெரிய கொள்ளை.
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்...
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்...
இதோ அப்பாடல்,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
புறநானூறு_184
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று...!
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...
-
சிலர் உபயோகம் இல்லாத Facebook பக்கங்களை Deactivate செய்து வைப்பார்கள். ஆனால் Deactivate செய்த F acebook ...