Tamil Computer Tips | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tamil Computer Tips

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tamil Computer Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Computer Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜனவரி, 2017

How to stop your smartphone overheating !

Heating up and device getting bursted is not uncommon now, as we see several related things happening around. But let’s dig in to check what causes this. Lithium batteries have what we call it as “thermal runaway”. It is a situation where an already heating up battery makes it worse by generating more heat. How much ever the companies try to make adevice compact, maintaining all the safety for the battery, that isn’t enough to keep the opposite sides far, and the battery too doesn’t get space to properly dissipate the heat out.


It is altogether a different case if you are noticing heat while charging the phone overnight or for a long time, but if you see it getting heated for even gaming or using it with active screen for a long time, you might have to blame not just the battery but several other factors.

 



English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

Do-not-clear-browser-cache-memory அடிக்கடி இணையத்தை பயன்படுத்துபவர்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய Browser Cache Memory பற்றிய தகவல்

Browser Cache Memory என்றால் என்ன? 

உங்கள் கணனியில் உள்ள ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி நீங்கள் புதியதொரு இணையத்தளத்திற்கு பிரவேசித்த பின் மீண்டும் அதே தளத்திற்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளம் முன்னர் எடுத்துக் கொண்ட நேரத்தினையும் பார்க்க சற்று குறைந்த நேரத்தில் அதாவது வேகமாக திறக்கப்படுவதனை அவதானித்துள்ளீர்களா? இதற்கான காரணம் என்ன தெரியுமா?

நீங்கள் குறிப்பிட்ட ஒரு இணைய உலாவியை பயன்படுத்தி ஒரு இணையதளத்துக்கு பிரவேசிக்கையில் குறிப்பிட்ட தளத்தின் Logo, மற்றும் ஏனைய புகைப்படங்கள் மற்றும் கோப்புக்கள் போன்றன உங்கள் இணைய உலாவியின் மூலம் தானாக தரவிறக்கப்பட்டு தற்காலிகமாக சேமிக்கப்படுகின்றது. இதுவே "Temporary Internet Files" அல்லது Browser Cache Memory என அழைக்கப்படுகின்றது.

Browser Cache Memory இன் பயன் தான் என்ன?


முன்னர் பிரவேசித்த தளத்துக்கு நீங்கள் மீண்டும் செல்கையில் ஏற்கனவே தரவிறக்கப்பட்டு சேமிக்கப்பட்ட அவைகள் மீண்டும் தரவிரக்கப்படாமல் சேமிக்கப்பட்ட படங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பிரதி செய்யப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட தளத்திற்கு எம்மால் மிகவேகமாக பிரவேசிக்க முடிவதுடன் எமது தரவுப்பாவனையும் கட்டுப்படுத்தப் படுகின்றது.

இணைய உலாவியில் சேமிக்கப்பட்ட இவைகளை பார்க்க முடியுமா?


ஆம், இவைகளை குறிப்பிட்ட இணைய உலாவியில் பார்க்க விரும்பினால் Firefox இணைய உலாவியில் about:cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக. Google Chrome இல் chrome://cache என Address Bar இல் தட்டச்சு செய்து Enter அலுத்துக.

சேமிக்கப்பட்ட இவைகள் இவைகள் நீக்கப்பட வழியுள்ளதா?


நாம் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் Ccleaner, Glary Utilities போன்ற மென்பொருள்கள் இந்த Cache Memory இல் இருக்கக் கூடிய கோப்புக்களையும் நீக்கி விடுகின்றது. எனவே நாம் இணையதளங்களுக்கு பிரவேசிக்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக படங்கள் தரவிரக்கப்படுவதால் நமது தரவுப் பாவனையும் அதிகரிப்பதுடன் வேகமான இணைய உலாவளையும் மேற்கொள்ள முடிவதில்லை.

இவைகள் நீக்கப்படாமல் பாதுகாக்க முடியுமா?


எனவே நீங்கள் கணணியை பேணுவதற்காக பயன்படுத்தும் மென்பொருள்களில் Browser Cache Memory இனை தவிர்த்து ஏனையவைகளை மாத்திரம் நீக்கும் படி அமைத்திடலாம்.


Ccleaner மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

Browser Cache on ccleaner

  • நீங்கள் Ccleaner மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து Cleaner என்பதனை சுட்டி தரப்பட்டிருக்கும் இணைய உலாவிகளுக்குக் கீழே இருக்கும் Internet Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை மாத்திரம் நீக்கி விடுக.
  • அவ்வளவு தான். இனி உங்கள் Browser Cache Memory இல் உள்ள படங்கள் நீக்கப்படாது எனவே வேகமான இணைய அனுபவத்தினை பெற முடியும்.

Glary Utilities மென்பொருள் பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Glary utilities

  • இதனை Glary Utilities மென்பொருளில் மேற்கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட மென்பொருளின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் Menu என்பதனை சுட்டி Settings செல்க பின் திறக்கப்படும் சாளரத்தில் Temporary Files Cleaner என்பதனை சுட்டுக பின் Browser என்பதற்குக் கீழ் தரப்பட்டிருக்கும் Mozilla Firefox Cache, Google Chrome Cache, Opera Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக அவ்வளவு தான்.

அவ்வாறன்றி இது போன்ற தற்காலிக கோப்புக்களை நீக்க நீங்கள் மூன்றாம் நபர் மென்பொருளை பயன்படுத்தாமல் குறிப்பிட்ட இணைய உலாவியில் தரப்பட்டிருக்கும் வசதியை பயன்படுத்துபவர் எனின் இதனை Mozilla Firefox இல் மேற்கொள்ள பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

நீங்கள் Mozilla Firefox இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

 
Browser Cache on Firefox

  • Firefox ====> Option சென்று Privacy எனும் Tab ஐ சுட்டுக.
  • பின் History என்பதற்குக் கீழ் You may want to clear your recent history, or remove individual cookies.  என்பதில் clear your recent history என்பதனை சுட்டுக.
  • இனி தோன்றும் சாளரத்தில் Details என்பதனை சுட்டி Cache என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.
  • அவ்வளவுதான்.

நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின்.

  •  இதனை Google Chrome இணைய உலாவியில் மேற்கொள்ள குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மூலையில் தரப்பட்டிருக்கும் customize and control google chrome என்பதனை சுட்டி Tools ====> clear Browsing Data என்பதனை அலுத்துக அல்லது Ctrl+Shift+Del விசைகளை ஒரே நேரத்தில் அலுத்துக.
  • பின் தோன்றும் சாளரத்தில் Cached images and files என்பதில் இருக்கும் Tick அடையாளத்தினை நீக்கி விடுக.

சனி, 23 ஜூலை, 2016

Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்

பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
மெசெஞ்சர்_பலூன்
அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.



பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில் பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.


எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?

படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.
பேஸ்புக்_மெசெஞ்சர்_இமொஜி
படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.
படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!


நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



 
 

செவ்வாய், 12 ஜூலை, 2016

இதுவரை நீங்கள் அறிந்திராத பேஸ்புக் மெசெஞ்சரில் மறைந்துள்ள ஒரு வசதி!

மாதாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது பல தனித்துவமான வசதிகளையும் தன்னகமாக கொண்டுள்ளது.
பேஸ்புக் மெசெஞ்சர் வசதிகள்
அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமான ஏராளமான வசதிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

அதேபோன்று உங்கள் அன்புக்குரிய ஒருவரை ஆச்சரியப்படுத்துவதற்கான ஒரு வசதியும் மெசெஞ்சர் செயலியில் மறைந்துள்ளது.
அன்பிற்கு அடையாளமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற இதய இமொஜியை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்புவதன் மூலம் அவைகள் கீழிருந்து மேலாக பறந்து செல்வது போன்ற ஒரு காட்சியை பேஸ்புக் மெசெஞ்சரில் ஏற்படுத்த முடியும். (அனுப்பும் போது உங்களாலும் அதனை காணலாம், பார்க்கும் போது அவராலும் அதனை காணலாம்)
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீலுள்ள இனைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்க.
மேலும் குறிப்பிட்ட இமொஜியை உங்கள் கீபோர்டு செயலியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


கூகுள் இன்டிக் கீபோர்ட் உட்பட இன்னும் பெரும்பாலான கீபோர்ட் செயலிகளில் இந்த இமொஜி தரப்பட்டுள்ளது.


குறிப்பு:
பேஸ்புக் மெசெஞ்சரில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்பிய போது மேற்குறிப்பிட்ட விளைவு ஏற்படவில்லை. எனவே கீபோர்ட்டில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்புக.

ஞாயிறு, 19 ஜூன், 2016

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?


உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .

Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும் >>Team Viewer 7.0
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.

உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போதுவிண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/ அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால்உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமேசெயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவைஇல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும்Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Download:  Team Viewer 

Do you Like Share To Social Networks

My Page : 

Computer Tips & Tricks

வெள்ளி, 10 ஜூன், 2016

Memory History அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (விளக்கப்படம் மூலம்.)

கணனியின் வருகையின் பின் தகவல்  தொழில்நுட்பத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பேனையும் கையும் என்றிருந்த நிலைமை மாறி இன்று அணைத்து துறைகளும் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளது. கணனியின் பிரதான வன்பொருளான வன்தட்டிலே அணைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றது. இந்த வன்தட்டின் கொள்ளளவு MB, GB என்பதனை தாண்டி TB (1000GB) வரை வளர்ந்திருப்பதுடன் இணைய சேமிப்பகம் என்ற முறையும் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் ஏற்பட்ட வேகமான மாற்றத்தால் இந்த வன்தட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. இதனை பின்வரும் விளக்கப்படம் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.
The History of Digital Storage 
English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

திங்கள், 30 மே, 2016

How to Remove undeletable files in windows using cmd ? உங்களது கணனியில் அழிக்க முடியாமல் எரர் வரும் பைல்-களை அழிப்பது எப்படி?

தற்போதைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக கணனிகளுக்கான வைரஸ் தாக்குதை கூறலாம். இந்த பிரச்சினையில் இருந்து எமது கணணியை பாதுகாத்து கொள்ள நாம் ஏதேனும் சிறந்த ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பயன்படுத்தி வருகிறோம். என்ன தான் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எமது கணனியில் இருந்தாலும், வைரஸ்-கள் எப்படியாவது கணனியில் வந்து தொற்றிக்கொள்கின்றன.

ஏற்கனவே எமது தளத்தில் நீங்கள் கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக தொழிட்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள ஒரு உபாயத்தை கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.




ஆகவே இவ்வாறான சூழலில் வைரஸ் காரணமாகவோ அல்லது வேறு சில​ காரணங்களால் நமது கணனியில் இருக்கும் சில​ பைல்களை அழிக்க​ முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாறான நேரத்தில் எந்தவிதமான மென்பொருளையும் உபயோகிக்காமல் எமக்கு தேவையான​குறித்த பைல்-ஐ அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த வேலையை செய்து கொள்ள நாம் கணனியில் இருக்கும் CMD-ஐ பயன்படுத்த போகிறோம். ஆகவே கணனியில் இருக்கும் CMD மூலம் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-களை அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் முதலாவதாக உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு குறித்த பைல்-ஐ அழிக்க முயற்சித்து பாருங்கள். அது வெற்றிபெறாவிட்டால் அடுத்த​ படிமுறைக்கு செல்லுங்கள்.
உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று cmd-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள். அடுத்து "ரன் ஏஸ் எட்மினிஸ்டேடர்" என்பதை தெரிவு செய்து cmd-யை ஆரம்பியுங்கள்.


அடுத்து உங்களது கணனியில் cmd ஆரம்பிக்கப்படும்.


அதிலே DEL /F /Q /A C:\\Users\\உங்கள் யூசர்நேம்\\பைல் இருக்கும் இடம் (லொகேஷன்)\\அழிக்க​ வேண்டிய​ பைலின் பெயர்.
இவ்வாறு டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள். இப்போது குறித்த பைல் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் டிலீட் செய்யப்பட்டு விடும். உதாரணமாக : DEL /F /Q /A C:\\Users\\Tech\\Desktop\\Test.txt

ஆகவே இந்த இலகுவான முறை மூலம் உங்களது கணனியில் குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-ஐ அழித்து விட முடியும்.

Share this

www.masinfom.blogspot.com


சனி, 1 ஆகஸ்ட், 2015

விண்டோஸ் 10க்கு பலத்த வரவேற்பு- வெளியான ஒரே நாளில் 1.5 கோடி பேர் டவுன்லோட்!

நியூயார்க்: மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்புக்கு மக்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

அப்பதிப்பு வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ் 10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை அடுத்து விண்டோஸ் 10 பதிப்பை விண்டோஸ் 7, 8 மென்பொருட்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 பதிப்பை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்கள் உட்பட வெளியான இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் சுமார் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கத் துவங்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
விண்டோஸ் 7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ் 8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ் 9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியான விண்டோஸ் 10 பதிப்பு பல்வேறு வகையான நவீன அம்சங்களுடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 10 ஜூலை, 2015

2500 இந்திய ரூபாய் பெறுமதியான Icecream PDF Converter மற்றும் PDF Split & Merge மென்பொருள்கள் இலவசமாக.

இன்று அதிகமான ஆவணங்கள் PDF வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றது.

இவ்வாறு PDF வடிவில் உருவாக்கப்படும் ஆவணங்களை எமக்குத் தேவையான ஆவன வடிவங்களுக்கும் அல்லது வேறு வடிவங்களில் இருக்கக் கூடிய ஆவணங்களை PDF வடிவத்திற்கும் மாற்றிக்கொள்ள ஏராளமான மென்பொருள்கள் மற்றும் இணையதளங்கள் எமக்கு துணை புரிகின்றன.

அந்த வகையில் மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் பல்வேறு இணையதளங்களையும் மென்பொருள்களையும் அறிமுகப்படுத்தி இருந்தோம்.
இதனடிப்படையில் Icecream PDF Converter எனும் மென்பொருளும் எமது PDF ஆவணங்களை நிர்வகிப்பதற்காக ஏராளமான வசதிகளை தருகின்றது.

இதில் இலவச பதிப்பு கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பு என இரு வேறு பதிப்புகள் உள்ளன. இதன் இலவச பதிப்பில் வரையறுக்கப்பட்ட வசதிகளையே பெற முடிகின்றது என்றாலும் இதன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பின் மூலம் வரையரற்ற இலவச பதிப்பை விட மேலதிக வசதிகளை பெற முடியும்.

இதன் இலவச பதிப்பில் ஆகக் கூடியது 10 பக்கங்களை கொண்ட PDF ஆவணங்களையே ஏனைய ஆவன வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் ஏனைய வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை PDF வடிவிற்கு மாற்றும் போது ஆகக் கூடியது 5 பக்கங்களையே கொண்டிருத்தல் வேண்டும். எனினும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பில் இது போன்ற வரையறைகள் இல்லை.

Icecream PDF Converter Pro பதிப்பின் மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.

DOC, DOCX, XLSX, ODS, JPG, PNG, EPUB, MOBI, BMP, XLS, TIFF, ODT, HTML போன்ற எந்த விடிவில் அமைந்த ஒரு ஆவணத்தையும் PDF வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
எந்த ஒரு PDF ஆவணத்தையும் JPG, BMP, DOC, ODT, HTML, TIFF, PNG, GIF, EPS,WMF, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை ஒரே PDF ஆவணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் PDF ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் கடவுச்சொற்களை இடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ள இந்த Icecream PDF Converter Pro எனும் மென்பொருளானது சுமார் 20 அமெரிக்க டொலர்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய மென்பொருளாகும்.

இருப்பினும் chip1507icecream@chip.cz எனும் முகவரிக்கு ஒரு வெற்று மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம்  Icecream PDF Converter Pro  மற்றும் Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருள்களுக்கான இலவச Licence Key ஐ பெற்றுக்கொள்ள முடியும்.

Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருளானது வெவ்வேறுபட்ட PDF ஆவணங்களை ஒன்றாக இணைத்துக் கொள்வதற்கும் ஒரு நீண்ட PDF ஆவணத்தை வெவ்வேறாக பிரித்துக்கொள்ளவும் உதவுகின்றது. மேலும் நீங்கள் ஒன்றிணைக்கும் PDF ஆவணத்திற்கு கடவுச்சொல் இடுவதன் மூலம் அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.

இதனை பின்வரும் இணைப்புகள் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.

Icecream PDF Converter Pro (118MB)

Icecream PDF Split & Merge Pro (8.5MB)

மேலே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் இருந்து இலவச பதிப்பை தரவிறக்கி கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளின் Settings பகுதிக்கு சென்று நீங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்ட Licence Key ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை முழுமையான (Pro) பதிப்புக்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

வைரஸிற்கு ஆப்பு வைப்பது எப்படி?


A user's photo.


முதலில் உங்கள் கணினியின் Desktop ல் Flash எனும் பெயரில் அல்லது உங்கள் பெயரில் Folder அதன்பின் நீங்கள் Shift key ஐ அழுத்திக் கொண்டு Flash அல்லது Momory Card ஐ கணினியில் இணைக்க வேண்டும்.(வைரஸ் தானாக பரவாமல் தடுக்க..)

My Computer ல் Right Click செய்ய வரும் Window ல் Manage ல் Click செய்ய Computer Management வரும். அதில் Disk Management ஐ தெரிவுசெய்தால் உங்கள் கணினியில் இருக்கும் Drive கள் தோன்றும். அதில் உங்கள் Flash ஐ Right Click செய்ய வரும் Window ல் Change Drive Letter and Paths ல் Click செய்ய வரும் Window ல் Remove எனும் Button ஐ Click பண்ணியபின் வரும் Confirm Message Box ல் Yes ஐ தெரிவு செய்யுங்கள்.

அதன் திருப்ப உங்கள் Flash I Right Click செய்து Change Drive Letter and Paths ல் Click செய்து பின் Add எனும் Button ஐ Click பண்ணுங்கள். பின் Mount in the following empty NTFS folder ஐ தெரிவு செய்தபின் Browse ஐ Click பண்ணுங்கள். அதன்பின் தோன்றும் Window ல் நீங்கள் Desktop ல் உருவாக்கிய Folder ஐ தெரிவு செய்யுங்கள். பின் OK ஐ click பண்ணுங்கள். இப்போது உங்கள் கணினியின் My Computer ல் இருந்து உங்கள் Flash மறைந்துவிடும். Desktop ல் நீங்கள் உருவாக்கிய Folder உங்கள் Flash ஆக மாறிவிடும்.

உங்கள் Flash ல் வைரஸ் இருந்தால் உங்கள் Flash ஐ உங்கள் கணியுடன் இணைக்கும் போது Auto வாக உங்கள் கணினிக்கு வைரஸ் வராது தடுக்கப்படும். அதேபோல் உங்கள் கணினியில் வைரஸ் இருந்தால் கணினியின் My Computer ல் Flash இல்லாததால் Flash ற்கு வைரஸ் வராது தடுக்கப்படும். இதனால் Flash மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். உங்களுக்கும் Open செய்யவும் இலகுவாக இருக்கும். Open with பிரச்சனையும் வராது.

seee more: www.masinfom.blogspot.com

வியாழன், 9 ஏப்ரல், 2015

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?


alt 

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் | Computer Maintenance Methods in Tamil

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES(Monitor Energy Saver). இதனை  
1.
https://code.google.com/p/monitores/downloads/detail?name=MonitorESLite.exeஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
2.
https://github.com/ukanth/monitores
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன்
 http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

MICRO SD - எஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்

 செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன. மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.
 
செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 


செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. 
இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
 
1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.
 
2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)
 
3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. 
 
4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.
 
5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது. 
 
6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.
 
7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?
எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
 
8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
 
9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.
 
10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.
 

கணினியில் இருந்து வரும் Beep ஒலி

கணினியில் ஒலிக்கும் Beep ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.


இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
Timer ல் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
Processer ல் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.



6 முறை பீப் சத்தம்:
Keyboard, Keyboard Controlல் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள Jumpers சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
Cach Memory சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
Memory தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணினி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
  கணினி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.

இப்போது கணினியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணினியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

வியாழன், 26 மார்ச், 2015

எஸ்.டி. மெமரி கார்டுகள் - சில தகவல்கள்
________________________________
செக்யூர் டிஜிட்டல் (Secure Digital) அல்லது எஸ்.டி. கார்ட் எனப்படும் மெமரி கார்டுகள், தற்போது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்ட்டு வருகின்றன.மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள்மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம்.
இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனைஅமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது.ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO.இவை குறித்து அறிய முற்படுகையில் பல சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை.எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையேஇவை சார்ந்திருக்கின்றன.
2. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) andmicroSD (15 x 11 millimeters)
3. SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி.கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
4. ஒரு வீடியோ பதிவில், எஸ்.டி. கார்டின் வேகத்திறன் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது என்பது சரியா? ஆம், உண்மையே. ஒரு எஸ்.டி.கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.
5. எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில்நுட்பம் உள்ளது.
6. எஸ்.டி. கார்டில் உள்ள லாக் சிஸ்டத்தை இயக்கிவிட்டால், மீண்டும் அதில் எதுவும் எழுத முடியாதா? இந்த பூட்டு சிஸ்டம் பூட்டவும், மீண்டும் திறந்து இயக்கவும் என்ற வகையில் உள்ளது. மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.
7. எந்த வகை மிகச் சிறிய எஸ்.டி. கார்ட்?எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட்வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.
8. பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க இயலுமா? தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த எஸ்.டி.கார்ட் ரீடர், அதன் கெபாசிட்டி பார்மட்டினைப் படித்து தகவல்களைத் தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
9. எஸ்.டி.கார்ட் ஒன்றை பார்மட் செய்திட, எஸ்.டி.கார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கும் வழி என்ன? இந்த அசோசியேஷன் SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமினை இதற்கென வழங்குகிறது. ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில்நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.
10. ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனைமுறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம்? இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாகஅழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.
நன்றி,

Popular Posts

Facebook

Blog Archive