Tamilnadu | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tamilnadu

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மே, 2020

சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்திருப்பத்தூர் மாவட்டம்.

சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.

#திருப்பத்தூர்மாவட்டம்.

ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும்  ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.

ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.

உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள்  ஊர் (நாட்றம்பள்ளி  காமராஜ்)  தான்.

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.

500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.

பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
  
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.

கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.

தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.

 ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ்  எங்க ஊரு வாணியம்பாடிதான்.

நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க  ஆம்பூர்தான்.

குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்

உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்)  எங்கள் ஆம்பூர்தான்.

உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.

தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.

தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.

அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.

பயனுள்ள வலைத்தளங்கள்..!*

*பயனுள்ள வலைத்தளங்கள்..!* 

இன்று நாம் வீட்டில் முடங்கியிருக்கும் காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை பார்க்கும் போது எரிச்சலூட்டுகின்றன அப்படி இருக்கப் பல பயனுள்ள செயலிகள்,யூடியூப் லிங்குகள், வலைத்தளங்கள் போன்றவற்றைத் தொகுத்துள்ளேன். பலரும் நேரமே போகமாட்டேங்கிதுனு புலம்பல்களைக் கேட்டதன் விளைவாக இந்தத் தொகுப்பு. மேலும் போட்டித் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செயலிகள் (Apps):

Blinkist : புதினங்கள் அல்லாத சுய முன்னேற்றம், அறிவியல் போன்ற மற்ற புத்தகங்களின் சுருக்கங்களைக் கொண்ட ஒரு செயலி. இதில் ஒலிப்புத்தகங்களும் அடங்கும்

TED : இதைப்பற்றி பலரும் அறிந்திருப்பர். இதன் செயலியை டவுன்லோட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நமக்குப் பிடித்த வீடியோக்களை ஒரு Playlist ஆக உருவாக்க ஆரம்பித்தால் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பரிந்துரைக்கும்

Curiosity : நாம் நினைத்தே பார்க்காத பல சுவாரஸ்யமான தகவல்களைப் படிக்கலாம்

DailyArt தினமும் ஒரு ஓவியம் மற்றும் அந்த ஓவியத்தின் பின் இருக்கும் வரலாற்றை பற்றிக் கூறும் செயலி.

CuriosityStream டாக்குமெண்டரி வீடியோக்களின் இருப்பிடம் என்றே சொல்லலாம்.‌ அவ்வளவு இருக்கும்.‌

Reddit : இந்த செயலி கிட்டத்தட்ட கோரா போல தான். கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் ஒரு சில நாட்கள் பிடிக்கும் புரிவதற்கு. கொஞ்சம் கொசகொச என்று இருப்பது போல் கூடத் தோன்றும்

Stack Exchange இதுவும் கோரா, ரெட்டிட் போல் தான். கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வலைத்தளங்கள்:


Wikipedia : “அட என்ன தம்பி நீ?! இது கூட தெரியாதா?” என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஆனால் வீக்கிப்பீடியாவில் முதல் பக்கத்தில் தினம் ஒரு புதிய தகவலை Featured article என்று போடுவார்கள். இதை தினமும் படித்தாலே ஒரு வருடத்தில் 300+ விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். இது பலருக்குத் தெரிவதில்லை.

Wayback Machine மிகப் பழைய மற்றும் புதிய புத்தகங்கள் கூட பல கிடைக்கும். 

Top Documentary Films இதுவும் ஒரு டாக்குமெண்டரி களஞ்சியம்.

Listverse டாப் 10 இது, டாப் 10 அது, டாப் 10 எது, டாப் 10 ஏதேதோ என்று பட்டியலுக்கெல்லாம் பட்டியலாய் விளங்கும் ஒரு தளம்.

Neatorama இணையத்தில் உள்ள சுவாரசியமான விஷயங்களை ஒரே இடத்தில் குவிப்பது தான் இந்தத் தளம்.

HowStuffWorks இதில் பலதரப்பட்ட தலைப்புகள் பற்றிப் படிக்கலாம்.

Mental Floss : அவ்வப்போது சென்று வரலாம் ஏதாவது புதிதாக இருந்து கொண்டே இருக்கும் இத்தளத்தில். ஏற்கனவே அறிவியல், வரலாறு, உணவு, விலங்குகள் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் நிறைய இருக்கிறது அதையெல்லாம் கூட படித்துக் கொண்டிருக்கலாம்.

யூடியுப் சேனல்கள்:

Biography பல பிரபலமானவர்களின் சரித்திரங்களை சுருக்கமாகச் சொல்லும் ஒரு சேனல்.

Veritasium பல வாழ்க்கை மற்றும் அறிவியல் உண்மைகளை பதிவிடும் ஒரு சேனல்.

NASA நாசாவின் official யூடியுப் சேனல்.

minutephysics இயற்பியலை அழகாக படமெல்லாம் வரைந்து விளக்குவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்


TEDx Talks TED என்பது உலகளாவிய மக்களை கருத்தில் கொண்டு பேசுவது. TEDx என்பது எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊர் மக்களை கருத்தில் கொண்டு பேசுவது. இதில் இருக்கும் வீடியோக்களும் அருமையாக இருக்கும்.

DOCUMENTARY TUBE மறுபடியும் டாக்குமெண்டரி வீடியோ விரும்பிகளுக்கான ஒரு புதையல்.

SciShow தினம் ஒரு அறிவியல் தகவல்.

Kurzgesagt – In a Nutshell இதுவும் அறிவியல் பற்றிப் பேசும் ஒரு சேனல். இந்த சேனலின் Animationகாகவே மெய்மறந்து பார்ப்பேன்


Numberphile எண்கள் எண்கள் எண்கள் மட்டுமே! எண்களைப் பற்றிய வீடியோக்கள்.

Big Think ஏதாவது ஒரு தலைப்பு பற்றி தினமும் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு பதிவிடுவார்கள்.

IT'S HISTORY வரலாற்றில் நடந்த அனைத்தைப் பற்றியும் பதிவிட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படும் ஒரு சேனல்.

வெள்ளி, 22 மே, 2020

_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*

*_அனைவரும் படித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு இது._*


         *🙏🏻நமசிவய🙏🏻*

*உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு தமிழ்நாடுதான், இங்கு மட்டும், நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன, அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?*

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???*

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????*

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ???*

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

  #இப்படி கோவிலை கட்டி சிற்பத்தை தெய்வம் ஆக்கி, அந்த தெய்வம் தான்எல்லா மனிதர்கள் மற்றும் ஜீவர்களுக்கும் ஜீவனம் செய்ய படி அளக்கின்றன, தெய்வத்தின் கீழ்தான் நாம் அனைவரும்,தெய்வம் தான் முதன்மை என்ற மெய்ஞானம் போதித்தி ஆச்சி செய்து வந்த நம் அரசர்கள்#

*இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது‌.*

          🙏🏻ஆத்ம வணக்கம்🙏🏻

*🌞திருச்சிற்றம்பலம்🌙*

வியாழன், 21 மே, 2020

மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?

மது அருந்தும்பொழுது 
உடலில் என்ன நடக்கிறது?

*நாம் மது 
(இனி ஆல்கஹால் அல்லது 
சாராயம் என்று சொல்வோம்) 
அருந்தும்பொழுது 
சிறிது அளவினை 
நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். 

பெரும்பாலான அளவை 
சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். 

அதனால்தான் 
உணவு உண்டபின்னர் 
மது அருந்தினால் 
போதை ஏற சற்று நேரமாகின்றது.*

*சாராயத்தின் 
செறிவினைப் பொறுத்து 
அது எத்தனை வேகத்தில் 
நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். 

உதாரணமாக 
பீரை விட 
விஸ்கி, 
பிராந்தி, 
வோட்கா 
போன்றவைகள் 
அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.*

*உறிஞ்சப்பட்ட சாராயம் 
உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து 
உடலெங்கும் ஓடத் துவங்கும். 

அதே சமயத்தில் 
நம் உடலும் அதனை வெளியேற்ற 
சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். 

சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். 

நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். 

(அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)*

*கல்லீரல் தன் பங்கிற்கு 
பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். 

இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?*

*அதனால்தான் 
அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. 

இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.*

*சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. 

இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.*

*அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.*

*BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், 

தான் ஒரு பெரிய பலசாலி, 
தன்னால் எதுவும் முடியும் என்று 
ஒரு எண்ணம் வரும். 

உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். 

இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. 

ஏனெனில், 
மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். 

அந்தச் சூழ்நிலையில் 
யாராவது எதாவது சொன்னாலும், 
அதற்கேற்றவாறே 
மனம் செயல்படத் தோன்றும்.*

*BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், 
தூக்கம் தூக்கமாக வரும். 

நினைவுகள் மழுங்கும். 

சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. 

வேகமாக இயங்க முடியாது. 

கையில் இருக்கும் மதுவைத் 
தடுமாறிக் கொட்டிவிட்டு 
அதனை வெறித்துப் பார்ப்பார்கள். 

உடல் ஒத்திசையாது. 

நிலை தடுமாறும். 

நடக்கையில் உடல் தள்ளாடும். 

கண் பார்வை மங்கும். 

கேட்கும் திறன், 
சுவை உணர்தல், 
தொடுதல் போன்ற 
உணர்வுகளில் தடுமாற்றம் 
அல்லது இல்லாமல் போய்விடும்.*

*BAC 0.18ல் இருந்து 
0.30 சதவீதம் இருக்கையில், 
தான் என்ன செய்கின்றோம் 
என்று அவருக்கே தெரியாது. 

குழப்பமாக இருக்கும். 

ஒன்று அதீத பாசக்காரராக 
மாறி விடுவார் அல்லது 
அதீத கோபக்காரராக மாறிவிடுவார். 

அதிகம் உணர்ச்சிவசப்படுவார். 

பார்வை தெளிவாக இருக்காது. 
பேச்சுக் குளறும். 

உடலின் Reflex செயல்படாது. 

தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். 

எதையேனும் எடுக்க வேண்டும் 
என்றால் 
கை அந்தப் பொருளின் பக்கத்தில் 
போய்த் துழாவிக்கொண்டிருக்கும். 

காரணம் 
பார்வை, 
மூளை, 
கை 
இவற்றிற்கிடையேயான 
ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். 

வலி தெரியாது.*

*BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார்.

எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. 

எழுந்து நிற்க முடியாது, 
நடக்க முடியாது. 

வாந்தி எடுக்கலாம். 
நினைவு தப்பிவிடலாம்.*

*BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். 

Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. 

உடல் சில்லிட்டுப் போகும். 
மூச்சு விடுதல் குறைந்து போகும். 

இதயத் துடிப்பு குறைந்து விடும். 
இறந்து போக அதிக வாய்ப்புள்ளது...

நன்றிகளும்
பிரியங்களும்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

பாய் (கோரை) விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்....

பாய் (கோரை) விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்....

1.பொதுவாக தரையில் பாய் விரித்து நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்" எனலாம்.

2.பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும் ]

3.கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும். [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது. இடுப்பு எலும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்.]

4.மூட்டுவலி,முதுகுவலி,தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும்.

5.பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாக தருகிறது. [பாயில் தலையணை இல்லாமல் உறங்குவதே சாலச் சிறந்தது.]

6.ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் மற்றும் தசைகள் தளர்ந்து விரியும்.

7.பாய் உடல்சூட்டை உள்வாங்கக் கூடியது.

8.பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசைசாமான்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.

9.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.

10.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்
உடல் உஷ்ணம் அடைவதையும்...

உடலின் வளர்ச்சியையும்...

ஞாபக சக்தியையும்...

மன அமைதியையும்...

நீண்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது.....

புதன், 25 மார்ச், 2020

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

1) இந்த வைரசு சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் முறடு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்ற்றை அடைந்து சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

2)  இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும்,  உப்பு அல்லது எலுமிச்சம் சாறு  அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)

3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தனமாய் உள்ளது. எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக்  கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல்  செய்யுங்கள்  அல்லது தோயுங்கள்.

4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக்  கூடியது.     

5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள்.   ஏனெனில், உலோக  தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6) கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7) புகை பிடிப்பதை தவிருங்கள்.

😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

9)  மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.

10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம்    தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13)    covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம்  எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
(நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து...)

புதன், 18 மார்ச், 2020

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்  

1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.

2. வாசல் முற்றத்தில்  நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.

3. மாவிலை தோரணங்கள் கட்டியது.

4. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.

5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.

6. வாழை இலையில் உணவு பரிமாறியது .

7. வேப்பங்குச்சி உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.

8. வேப்பம் இலையில் புகை போட்டது.

9. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.

10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
     
11.எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.

12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.

13. வெற்றிலை பாக்கு போடுவதும்.

14. கசாயம் ஊறல் குடிப்பதும்.

15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.

16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.

17.இறந்த பிரேதத்தை எரித்தது.

18. அம்மை வந்தால் வெப்பம்  பத்திரம் போடுதல்.

19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.

20. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது. 

இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு  என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்"

இணையத்தளத்தில் இருந்து ...

புதன், 1 ஜனவரி, 2020

Tirupattur - திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் தற்போது வேலூர் மாவட்டத்தில்
அடங்கிய தாலுகா மற்றும் வருவாய்
கோட்டமாக உள்ளது

தமிழ் நாட்டின் சந்தன நகரம் என அழைக்கப்படும்
திருப்பத்தூரில் ஆசியாவின் மிகப்பெரிய
சந்தனமரக் கிடங்கு உள்ளது

1911ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது 100
ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரே இடத்தில் சார்
ஆட்சியர் அலுவலகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம், 
மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட வன
அலுவலகம், 
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
அலுவலகம், உள்ளிட்ட பல்வேறு அரசு
அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அணைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே
அமைந்திருப்பது திருப்பத்தூர் நகரின்
தனிச்சிறப்பு ஆகும்

இப்பகுதியில் இயற்க்கை எழில் மிகுந்த ஏலகிரி
ஜலகாம்பறை ஜவ்வாதுமலை உள்ளிட்ட
சுற்றுலா தளங்கள் உள்ளன

இக்கோட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள
வைன்னு பாப்பு தொலைநோக்கி மையம்
ஆசிய அளவில் மிகப்பெரியது ஆகும்

2008 வரை திருப்பத்தூர் ஒரு மக்களவை
தொகுதியாக இருந்து வந்தது. திருப்பத்தூரில் இருந்து வேலூர் 90 கி.மீ
தொலைவிலும் இதனை சார்ந்த மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள கிராமங்கள் 130 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது
இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வணிகர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள்  திருப்பத்தூரில் இருந்து இரண்டரை மணி
நேரத்திற்கு மேலும் ஜவ்வாது மலை புதுர்நாடு போன்ற மாவட்டத்தின் கடைகோடி  கிராமங்களில் இருந்து 4 மணி நேரத்திற்கு
மேலும் செலவு செய்து தான் மாவட்ட ஆட்சியர்   அலுவலகம் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட கருவூலம்
மற்றும் மாவட்ட அரசு வருவாய் துறை  அலுவலகங்களை மிகுந்த சிரமத்துடன் அணுக  வேண்டிய நிலை உள்ளது
இப்பகுதியை சேர்ந்தவர்கள் அவசர
சிகிச்சைக்காக வேலூர் அல்லது தர்மபுரிக்கு
செல்வதற்குள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது
மாவட்ட தலைநகரம் மிக அதிக தொலைவில்
உள்ளதால் இந்த மாவட்டத்தை நிர்வகிப்பது அரசு
அதிகாரிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது
இந்த பகுதிகளுக்கு அலுவல் நிமித்தம் உயர்
அதிகாரிகள் சென்று வர ஒரு நாளை செலவிட
வேண்டியுள்ளது.


இதனால் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில்  கலந்துகொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு மாவட்ட  ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மற்றும் பிற அரசு அதிகாரிகள் குறித்த  நேரத்திற்குள் வந்து சேர முடிவதில்லை  இதனால் பொதுமக்கள் அதிகமாக  பாதிக்கப்படுவதோடு மாவட்ட நிர்வாகம்  செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது  மேற்கண்ட சூழ்நிலைகள் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்துரை
தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம்  அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் பட்டதாரி  இளைஞர்கள் வழக்கறிஞர்கள் வணிகர்கள் உள்ளிட்ட  அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்
டு வருகிறது.


தற்போது வேலூர் மாவட்டத்தில் 13 வட்டங்களும்
( புதிதாக அறிவிக்கப்பட்ட பேரணாம்பட்டு,
நெமிலி வட்டங்கள் உட்பட), 843 வருவாய்
கிராமங்களும் 39 இலட்சத்து 36 ஆயிரத்து 331
மக்கள் தொகையும் 6067. ச.கி.மீ பரப்பளவும்
கொண்டு உள்ளது

தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில்
வேலூர் மாவட்டம் மக்கள் தொகையில் 3வது
பெரிய மாவட்டமாகவும் பரப்பளவில் 4வது
பெரிய மாவட்டமாகவும் உள்ளது
அரசாணை 279 நாள் 09.06.2013ன் படி புதிய
மாவட்டம் அமைக்க 10இலட்சம் மக்கள் தொகையும்
200 கிராமங்களும் 2500 ச.கி.மீ பரப்பளவு மற்றும் 5
வட்டங்கள் தேவை.
திருப்பத்தூர் கோட்டத்தில் மட்டும் 217 வருவாய்
கிராமங்களும் 12 இலட்சத்து 17 ஆயிரத்து 362
மக்கள் தொகையும் உள்ளது
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் 5143 ச.கி.மீ
பரப்பளவுடன் 18 இலட்சத்து 79 ஆயிரத்து 809 மக்கள்
தொகை கொண்டுள்ளது இம்மாவட்டத்தில்
புதிதாக பர்கூர்
சூளகிரி ஆகிய 2 வட்டங்கள் உருவாக்கப்பட்டு
ள்ளதால் அங்கு இப்போது 7 வட்டங்கள் உள்ளன
ஒரு மாவட்டத்திற்கு 5 வட்டங்கள் போதுமானது
என்பதால்
7 வட்டங்களை கொண்டுள்ள கிருஷ்ணகிரி
மாவட்டத்திலிருந்து ஊத்தங்கரை வட்டத்தை
பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தோடு
இணைக்கலாம்
ஊத்தங்கரையிலிருந்து
கிருஷ்ணகிரி 50 கி.மீ தொலைவிலும்,
திருப்பத்தூர் வெறும் 25 கி.மீ தொலைவிலும்
உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள 4 வட்டங்களோடு
ஒரே ஒரு வட்டத்தை இணைத்தாலே தனி
மாவட்டத்திற்கு தேவையான 2500 ச.கி.மீ
பரப்பளவும் 5 வட்டங்களும் கிடைத்துவிடும்
எனவே திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள ஆம்பூர்
வாணியம்பாடி திருப்பத்தூர் நாட்றம்பள்ளி
ஆகிய 4 வட்டங்களுடன் ஊத்தங்கரை அல்லது
பேரணாம்பட்டு இவற்றில் எதாவது ஒரு
வட்டத்தை இணைத்து திருப்பத்தூரை தலைமை
இடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி,
எங்கள் பகுதி மக்களின் நீண்ட காலமாக உள்ள
நியாயமான கோரிக்கையை பரிசீலித்து உரிய
உத்தரவினை பிறப்பித்திட பொதுமக்கள் சார்பில்
வேண்டுகிறேன்.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

திருப்பத்தூர் மாவட்டம் - Tirupathur District

Image may contain: plant, text, nature and outdoor



சந்தனமும் , ஜவ்வாதும் மணக்கும் எங்கள்
திருப்பத்தூர் மாவட்டம்.

#திருப்பத்தூர்மாவட்டம்.

பத்து திருத்தலங்களை கொண்ட ஊர் திருப்பத்தூர் (திரு+பத்து+ஊர் )

ஆசியாவிலேயே அதிகம் சந்தனம் விளையும்  ஜவ்வாது மலை காடுகள் உள்ளது எங்கள் திருப்பத்தூர் மாவட்டம்.


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு படித்த இசுலாமிய கல்லூரி உள்ள வாணியம்பாடி.

ஏழைகளின் ஊட்டி என்று போற்றப்படும் ஏலகிரிமலை இருப்பதும் இங்கேதான்.

உலகத்திலேயே முதன்முதலாக விண்கல் விழுந்து இறந்த மனிதனும் எங்கள்  ஊர் (நாட்றம்பள்ளி  காமராஜ்)  தான்.

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பாடிய முதல் பாடல் எழுதிய ஆம்பூர் அடுத்த மிட்டாளம். நேதாஜி.

500 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஆர்.எஸ்.பாபு பிறந்த ஆம்பூர்.

பிரபல "நாயுடு ஹால் "முதலாளியின் சொந்த ஊர் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.
 
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

நக்ஸலைட்டுகளை அழிப்புப் போரில் 7 போலீசார் இறந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமையை சேர்த்த திருப்பத்தூர்.

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன் மகன் பேரரறிவாளனை மீட்க நீதி போராட்டம் நடத்தி வரும் பாசத்தாய் அற்புதம்மாள் வாழ்ந்து வரும் சோலையார்பேட்டை.

கவிக்கோ அப்துல் ரகுமானும், கவியருவி அப்துல் காதரும் பேராசிரியர்களாக பணியாற்றிய வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி.

தமிழ் வளர்த்த மதுரைக்கும், காரைக்குடிக்கும் போட்டியாக முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிமாநில ஆளுநர்கள், அயல் நாட்டு அமைச்சர்களை அழைத்து வந்து ஆண்டு தோறும் "முத்தமிழ் மன்றம் விழா "நடத்தி தமிழ் வளர்க்கும் வாணியம்பாடி.

 ராஜ் டி.வி.யில அகடவிகடம் நடத்துற V.L.பாஷ்கர்ராஜ்  எங்க ஊரு வாணியம்பாடிதான்.

நடிகர் சந்தானத்துக்கு அத்தை ஊரும் எங்க  ஆம்பூர்தான்.

குளித்து மகிழவும் , கொண்டாட்டம் போடவும் "ஜலகாம்பாறை " நீர்வீழ்ச்சி.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசன் பணியாற்றிய திருப்பத்தூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர் திருப்பத்தூர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிரேமலதா படித்த ஆம்பூர்

உலக பெரும் பணக்காரன் புரூனே சுல்தான் வீட்டில் சம்பந்தம் வைத்தவர்கள் ஆம்பூர்க்காரர்கள்.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய வர்ண பூச்சு ஓவியங்கள் இன்று வரை அழியாமல் காட்சி தரும் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரும்பாவி மலை என்னும் ஆர்மா மலை.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பிரியாணி செய்து போட விமானத்தில் போய் வந்த பக்காத்தியும் (பிரியாணி செய்பவரை எங்க ஊருல அழகா பக்காத்தினுதான் கூப்பிடுவோம்)  எங்கள் ஆம்பூர்தான்.

உலகின் 100 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்யும் மாவட்டம்.

தமிழ்நாட்டிலேயே 400 ஆண்டுகளுக்கு முன்னரே கலைமகளாம் சரஸ்வதிக்கு கோவில் கட்டப்பட்ட ஆலயம் உள்ள ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊட்டல் கோவில்.

தனித்தமிழ் இயக்கத்துக்கு தன்னையே அர்ப்பணித்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கொஞ்சம் காலம் பயின்றதும், ஆசிரியராக பணியாற்றியதும் (ஆம்பூர் ) வேலூர் மாவட்டம்.

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்து நடந்த வாணியம்பாடி.

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவர்களும் எங்க ஊர் (ஆம்பூர்) தான்.

அண்மை காலத்தில் அதிகமாய் ஆன்மீக பக்தர்கள் வந்து வணங்கும் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவில்.

**அருண்பிரசாத்**

ஞாயிறு, 12 மே, 2019

*அன்பு*

*அன்பு*

 நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்புசெலுத்த முடியாமல் போனால்,  நம்மால்பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?

 நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்து விடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்.

 மன்னிக்கும் குணம், ஆற்றல்  வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம்.

 கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது.  
அதைக்காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

 பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால்  வெல்லுங்கள்.

 மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய  பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.

 எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று  விடுங்கள்.

 எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.

 அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள்தனம், விரோதம் எல்லாம்  இருக்கும்.

 அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்புசெலுத்த முடியாது.

#அழகு_எங்கே..??

#அழகு_எங்கே..??

ஒரு அழகான பெண். பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க! ஒரு விமானத்தில் ஏறினாங்க. ஏறி, தனது சீட்டை தேடினாங்க. அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கும் பக்கத்து சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார்.

இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரி வெறுப்பா இருந்திச்சு, இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது...அப்டின்னு யோசிச்சு, விமான பணிப்பெண்ணை கூப்பிட்டு, "எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க.."ன்னு கேட்டாங்க.. அதுக்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு..?"ன்னு கேட்டதுக்கு, எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்திட்டு வர அருவருப்பா இருக்கு, அதான்... அப்டின்னதும், விமான பணிப்பெண்ணுக்கு தூக்கி வாரிபோட்ருச்சு..

பார்க்க இவ்ளோ டீசென்ட்டா இருக்காங்க... ஆனா நாகரீகம் இல்லாம பேசுறாங்களேன்னு சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே... ஏன்னா அவங்க பயணியாச்சே.... வேற வழி....!? 

இருங்க மேடம் நான் பாக்குறேன்ன்னு சொல்லிட்டு செக் பண்ணி பாக்குறாங்க,  எங்கயும் சீட் காலி இல்லை. அந்த பெண்கிட்ட திரும்பவும், மேடம்... எந்த சீட்டும் காலி இல்லை,  கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டு வரேன். அதுவரை பொறுத்திருங்க... ப்ளீஸ்...ன்னு சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனாங்க..

கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, மேடம்...நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ்... ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு  ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை.  முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு... ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பிரயாணி..! 

உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே.. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம்.... கொஞ்சம் பொறுங்க, அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல... 

விமானப்பணிப்பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காம, முதல்வகுப்புக்கு போக தயாரானாங்க...

ஆனா அங்க நடந்து என்னன்னா...  விமான பணிப்பெண் நேரா அந்த இரண்டு கைகளையும் இழந்தவர்கிட்ட போய், சார்.... தயவுசெய்து மன்னிச்சிடுங்க., உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வரேன்.... நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார்., உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை..!  அப்டின்னு பணிவா சொன்னதும் விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்தாங்க...
.
அந்த அழகான பெண்ணுக்கு ரொம்ப அவமானமா போச்சு... சங்கடத்தோட நெளிஞ்சுக்கிட்டே நின்னாங்க.

அப்போ அந்த கைகளை இழந்த அந்த நபர் எழுந்து, நான் ஒரு #ரிட்டயர்டு_மிலிட்டரி_மேன்...  போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்திட்டேன்... முதல்முறையா இந்த பெண் சொன்னதை கேட்டதும், இவங்கள மாதிரி ஆட்களுக்காகவா நாம அவ்ளோ கஷ்டப்பட்டு போரில் ஈடுபட்டோம்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு... ஆனா இப்போ நீங்க எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்றதை கேட்டதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது... உங்களை போன்ற இவ்ளோ நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக சந்தோசப்படுறேன்!  அப்டின்னு சொல்லிகிட்டே முதல்வகுப்பை நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சார்...

அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாங்க... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்துட்டாங்க.
அழகு என்பது நாம பாக்குற வெளித்தோற்றத்தில் இல்லை... அது மனசு சம்பந்தப்பட்ட விசயம்.... 

#அழகு_நம்ம_நடத்தையில் தான் வெளிப்படும்... அதை உணர்ந்து நடந்துக்க முயற்சி செய்வோம்!

B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து 

*Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், 

*ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*
அக்ரி பாடம் பயில விரும்புபவர்கள்  திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேர முயல்வது நன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*
பகிருங்கள்..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய..

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்....ஆனால்..ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது...

மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார்...ஆனால் அது தேவையில்லை...1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ...தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால்....சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்..

அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார்...எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்..

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார் ..அதையும் தெரிவிக்க வேண்டும்... நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்...

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம்..அல்லது நம்பரை மாற்றலாம் ...அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..

இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்....இதை தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்..

இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள்.....ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள்....அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது..
போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ....அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்...அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்...
தெரியாதவர்களுக்கு இந்த மெசேஜை பகிரவும்...

புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன் லைனில் அப்ளை செய்ய முடியும்...நன்றி
சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்..
(K. பாபு
கூட்டுறவுசார் பதிவாளர் / பொது
விநியோகத் திட்ட அலுவலர் )

ஞாயிறு, 17 மார்ச், 2019

*குக்கர்_என்கின்ற_விஷம்!.*

*குக்கர்_என்கின்ற_விஷம்!.*
*பிரிட்டிஷ்காரனின்_சதியும்*



 *சாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.*
 *எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.*
*சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்"*
 *இந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.*
 *இரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.*
 *உதாரணம் – ப்ரஷர் குக்கர்*
*இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது*
*எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும்* *படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.*
 *இதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.*
 *இதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய போராளிகளை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.*
  *ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும்*. *ஆனால் வேகாது.*
*பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.*
 *உதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.*
  *அதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான* *சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம்* *சமைக்கப்பட வேண்டும்.*
*மிருதுவானால் போதாது.*
  *சமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள்.* *அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.*
*மண்பாண்டம் – 100%*
*வெண்கலம் – 97%*
*பித்தளை – 95%*
*சில்வர் - 90%*
 *இதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% - 13% தான் இருக்கும்.*
  *இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம்*
*சர்க்கரை வியாதி,*
*முழங்கால் வலி,*
*விரைவில் முதுமை,*
*மற்றும் இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்*
 *எதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.*
 *இதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.*
 *Central Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.*
*பழமைக்கு_மாறுவோம்!*
*ஆரோக்கியமாக_வாழ்வோம்!*!
*நோய்கள்_இல்லாத..*
*அடுத்த_தலைமுறைக்கு..*
*வித்திடுவோம்!!*. 
படித்தேன்!
பகிர்ந்தேன்!!便樂இன்று நீங்கள் உண்ணும் ஆரோக்கிய  உணவுகளே  நாளைய நலமான குழந்தைகளை உருவாக்கும்欄擄櫓栗‍♂‍♀தம்பதிகள் அனைவரும். வாழ்க்கையில் பதினாறு பேறுகளும் பெற  வாழ்த்தும்.

வியாழன், 24 ஜனவரி, 2019

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்

அலைபேசி : 97903 95796

வாழ்த்துகள்

இந்த பதிவை எவ்வளவு  குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.
அன்பு நண்பர்களே  உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு  தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான்  படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
*நன்றி*
    🙏🏻🙏🏻🙏🏻

திங்கள், 21 ஜனவரி, 2019

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....? என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ? எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா ....?
என்ன செய்ய வேண்டும் ? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும் ?
எப்படி புகார் அனுப்ப வேண்டும் ?. எப்படி எழுதுவது ?

அந்த தார் சாலை பற்றிய விபரங்களை உங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் / வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலர் /துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பணிகள் ) அவருக்கு தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பி அந்த தார் சாலை பற்றிய விபரங்களை பெறுங்கள் .,

அதன் பின்  புகார் மனு எழுதுங்கள் ...,

புகார் மனுவில் பொது மக்கள் கையொப்பம் குறைந்தது 10 நபர்கள் கையொப்பம் பெறுங்கள் .,

புகார் மனுவை அனுப்ப வேண்டிய முகவரி.,

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புங்கள் .,

புகார் கொடுப்பதற்கான அடிப்படை காரணங்கள் (GROUNDS OF MAKING COMPLAINT):

          1.  தரமில்லாத தார் சாலையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு   
               அடைந்துள்ளனர்
           2.  தரமில்லாத தார் சாலையை போட்ட ஓப்பந்தகாரர் மீது
                நடவடிக்கை எடுக்கவும்.
           3.  தரமில்லாத தார் சாலை அமைக்கும்போது ஆய்வு செய்த 
                மேற்பார்வையாளர்,  சாலை பொறியாளர் ஆகியவர்கள் மீது
                நடவடிக்கை எடுக்கவும்.
           4.  தரமில்லாத தார் சாலையை ஆய்வு  
                வளர்ச்சி (கிராம-ஊராட்சி) அவர்கள் மீது நடவடிக்கை 
                எடுக்கவும்.
            5.  தரமில்லாத தார் சாலையை சீரமைத்து தருமாறு
                 கேட்டுக்கொள்கிறோம்.
             6.  பொது மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்திய
                 அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை
                 எடுத்து,அதனை புகார்தாரர் ஆகிய எங்களுக்கு
                 தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....

புகார் மனுவில் நகல் என்று போட்டு...

1.முதல் அமைச்சர் தனி பிரிவு ,முகவரி.
2.குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 2(7)இன் கீழ் உங்கள் வட்டத்திற்கு/தாலுக்கா க்கு உட்பட்ட மாஜிஸ்ட்ரேட் அவர்கள் முகவரி.
3.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,முகவரி.
4.வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம் ,முகவரி.

ஆகியோருக்கும் அனுப்பவும் 

குறிப்பு : நீங்கள் முதலிலேயே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்  ஆவணங்கள் / ஆதாரங்கள் பெற்ற பின்..அவைகளையும் இணைத்து புகார் அனுப்புவது கூடுதல் வலு சேர்க்கும்,  அதுவே உசிதமானது .,

தங்கள் பகுதியை ஊழல் இல்லாத ஊராக மாற்ற முதல் படியை எடுத்து வையுங்கள்..வாழ்த்துக்கள்..!!
Akram Khan

ஞாயிறு, 25 நவம்பர், 2018

நோய்கள் உருவாகும் இடங்கள் ! குணமாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

----------------------------------------------

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்...

Popular Posts

Facebook

Blog Archive